Saturday, December 31, 2011

புறா 20 ஆயிரம்...கோழி 27 ஆயிரம்... ஆடு 90 ஆயிரம்...

பளிச்... பளிச்...
வயது 71.
சொந்தமாக நிலம் இல்லை.
கூலி வேலைக்கு நடுவே குஷியான வருமானம்.

மனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே...
ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள்! இதை உணர்ந்தே... 'கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன்' என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர்.

இது, நூற்றுக்கு நூறு நிஜமே என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி!

சொந்தமாக நிலம் ஏதும் இல்லாத வயது முதிர்ந்த இந்தத் தம்பதியர், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையிலும் தளர்ந்து விடாமல்... ஆடு, கோழி, புறா ஆகியவற்றை வளர்த்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
''எனக்கு 71 வயசாச்சு. பூர்வீகம் பாலக்கரை கிராமம். தோட்ட வேலை செஞ்சுதான் பிழைப்பை ஓட்டுறோம். எனக்கு புறா வளர்ப்புல ரொம்ப இஷ்டம். நாப்பத்தஞ்சு வருஷமா புறா வளத்துக்கிட்டிருக்கோம். எந்தத் தோட்டத்துல வேலைக்காக தங்கியிருந்தாலும்... புறாவை மட்டும் விடுறதில்லை. கூடவே கூட்டிட்டுப் போயிடுவோம்.

நாலு வருஷமாத்தான் இந்த தென்னந்தோப்புல வேலை செய்றோம். தண்ணி பாய்ச்சுறது, கீழ விழுற தேங்காய்களை எடுத்து குவிக்கிறதுனு வேலைகள முடிச்ச பிறகு, மீதியிருக்கற நேரத்துல புறாவைத்தான் கவனிப்போம். கூடவே ஆடு, கோழிகளையும் வளர்க்க ஆரம்பிச்சோம். பிள்ளைங்களையெல்லாம் கட்டிக் கொடுத்தாச்சு. இப்பவும், பிள்ளைங்க தயவில்லாம நாங்களே ஜீவனம் பண்ணிக்கிறதுக்கு புறா, ஆடு, கோழிகதான் உதவிக்கிட்டிருக்கு'' என்று வேலுச்சாமி, இடைவெளிவிட...
''இப்போ, எங்ககிட்ட 25 ஜோடி புறா, 15 பெட்டை ஆடு, 3 கிடா ஆடு, 6 நாட்டுக்கோழி, 3 சேவல் இருக்கு. வயசான காலத்துல இந்த அளவுக்கு மட்டும்தான் எங்களால பராமரிக்க முடியும். அதனால எண்ணிக்கையைக் கூட்டுறதில்லை. அப்பப்போ வித்து பணமாக்கிக்குவோம். விக்கறதுக்கும் அலைய வேண்டியதில்லை. இங்கேயே வந்து வாங்கிக்கிறாங்க. சமையல் வேலையை முடிச்சுட்டு... பக்கத்துல இருக்குற காலி நிலத்துக்கு ஆடுகளை ஓட்டிட்டுப் போயி மேய்ச்சுட்டு வந்துடுவேன்'' என்று தன் பங்கை சொன்னார் செல்லம்மாள்.

புறாக்களின் பங்கு... 25 ஆயிரம்!
தொடர்ந்த வேலுச்சாமி, கால்நடைகளை வளர்த்து வரும் விதம் மற்றும் வருமானம் பற்றி, பேச ஆரம்பித்தார்.

'கருப்பு, வெள்ளை, சிவப்பு, ரேவல்ஸ், ரோஸ், ரோமர், சங்கிலினு நிறைய வகை புறாக்கள் இருக்குது. அதை வளர்க்கறது பெரிய வேலையே இல்லை. காலையில கூண்டைத் திறந்து விட்டா... பறந்து போய் தீவனம் எடுத்துக்கும். சாயங்காலம் வந்து அடையும். அந்த நேரத்துல ஏதாவது தானியத்தை விசிறி விட்டா போதும். ஒரு ஜோடிக்கு தினமும் 150 கிராம் தானியம் தேவைப்படும். ராகி, சோளம்னு எதையாவது கொடுப்போம். இதுங்களால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.

45 நாளுக்கு ஒரு முறை புறா அடைக்கு உக்காரும். ஒரு தடவை அடை உக்கார்ந்தா 2 முட்டை. வருஷத்துக்கு 16 முட்டை. அதாவது ஒரு ஜோடி மூலமா வருஷத்துக்கு 16 குஞ்சுகள் கிடைக்கும். 25 ஜோடி மூலமா, வருஷத்துக்கு 400 குஞ்சு கிடைக்கும். அதுகளை ஒரு மாசம் வரைக்கும் வளர்த்து வித்துடுவோம். பெரும்பாலும் சாப்பிடத்தான் வாங்கிட்டுப் போவாங்க. வளர்ப்புக்கும் கொஞ்ச பேரு வாங்கிட்டுப் போவாங்க. ஒரு மாச வயசுல ஒரு புறா குஞ்சை 100 ரூபாய்க்கு விக்குறோம். தன்னால செத்துப்போனது... சமைக்கறதுக்காக நாங்க எடுத்துகிட்டது இதையெல்லாம் கழிச்சுட்டா... வருஷத்துக்கு 250 குஞ்சுகள விக்க முடியும். இதன் மூலமா 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
கோழிகளின் கொடை... 27 ஆயிரம்!
ஒரு கோழியிலருந்து வருஷத்துக்கு 40 முட்டைனு ஆறு கோழியிலருந்து மொத்தம் 240 முட்டை கிடைக்குது. அதுல நாங்க சாப்பிட்டது போக, மிச்சத்தை அடைக்கு வெச்சுடுவோம். சேதாரமெல்லாம் போக, வருஷத்துக்கு 180 குஞ்சு கிடைக்கும். 2 மாசம் வரை வளர்த்து, ஒரு குஞ்சு 150 ரூபாய்னு விக்கிறோம். நல்ல சேவ குஞ்சு கிடைச்சு, அதை ரெண்டு வருஷம் வளர்த்து வித்தோம்னா... ஒரு சேவல் 4 ஆயிரம் ரூபாய்க்குக் கூடப் போகும். எப்படிப் பாத்தாலும் கோழி மூலமா வருஷத்துக்கு 27 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும். தீவனச்செலவும் பெருசா கிடையாது. தோட்டத்துலேயே மேய்ஞ்சு புழு, பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டுக்குங்க. சாயங்காலம் அடையுறப்போ மட்டும் கொஞ்சம் தானியம் போடுவோம்.

ஆடுகளின் அன்பளிப்பு... 90 ஆயிரம்!
அதே மாதிரிதான் நாட்டு ஆடுகளும். அதுகளுக்குத் தனியா தீவனச் செலவே கிடையாது. மேய்ச்சுட்டு வர்றப்பவே பக்கத்துல இருக்குற செடி, கொடிகள்ல இருந்து தழை ஒடிச்சுட்டு வந்து போட்டுடுவோம். 15 பெட்டை மூலமா, வருஷத்துக்கு 45 குட்டி கிடைக்கும். குட்டிகளை ரெண்டு மாசம் வளர்த்து, ஒரு குட்டி 2 ஆயிரம் ரூபாய்னு வித்துடுவோம். ஆடுக மூலமா வருஷத்துக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆடு, கோழி, புறானு எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு

1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். தீவனச் செலவெல்லாம் போக... எப்படியும் வருஷத்துக்கு 1 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும்'' என்ற வேலுச்சாமி,

''ஆடு, புறா, கோழி இதையெல்லாம் தனி வேலையா எடுத்துச் செய்யாம, தோட்டத்து வேலை போக கிடைக்கிற இடைவெளியிலதான் செய்றோம். அதனால, இந்த வருமானமே எங்களுக்கு பெரிய வருமானம்தான்- அதுவும் இந்த 71 வயசுல!'' என்று மன நிறைவோடு சொன்னார்!
நிஜம்தானே!.

உங்கள் பிள்ளைகள் சாப்பிடுவது சத்தான உணவா?

ம்மாக்களுக்கு குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் கவலை; குண்டாக இருந்தாலும் கவலை. வளரும் பருவத்தில் குழந்தைகள் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதாது; சத்தானதாகவும் இருக்க வேண்டும்.

பொதுவாக, ஒரு வயதில் இருந்து ஆறு வயது வரை ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரே மாதிரியான ஊட்டச் சத்துக்கள்தான் தேவைப்படும். ஏழு வயது முதல் இருபாலருக்கும் தேவைப்படும் சத்துக்களில் சிறிது மாற்றம் ஏற்படும். இந்த வயதில் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு அதிக எடை கூடும். காரணம் - ஹார்மோன் மாற்றங்கள்.

ஒரு வயது முதல் 12 வயது வரையிலானவர்களுக்கான சரியான உடல் எடை, அவர்களுக்கு தினமும் தேவைப்படும் சத்து, அது கிடைக்கக் கூடிய உணவு ஆகியவற்றின் அளவுகளைத் துல்லியமாக அடுத்த இரண்டு பக்கங்களிலும் 'படையல்’ இடுகிறார் விஜயா மருத்துவமனையின் சீஃப் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி. இந்த அட்டவணையை உங்கள் வீட்டின் சாப்பாட்டு அறையில் கண்ணில் படும் இடத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகள் உணவை ருசித்து, ரசித்து, நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிட உற்சாகப்படுத்துங்கள்.

அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல்

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுக்கடைகள் காளன் போல முளைத்துவிட்டன. அங்கு சென்று பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதே இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் நிறைய இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது.


குறையும் உயிரணுக்கள்



இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவில் ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் இத்தகைய பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.



இதே விசயத்தில் ஜப்பானில் 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது.



டிரான்ஸ் பேட் கொழுப்பு



தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.



இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



சிறுவர்களுக்கு எச்சரிக்கை



இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.



ஆஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வழங்குவதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை

அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல்

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுக்கடைகள் காளன் போல முளைத்துவிட்டன. அங்கு சென்று பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதே இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் நிறைய இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது.


குறையும் உயிரணுக்கள்



இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவில் ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் இத்தகைய பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.



இதே விசயத்தில் ஜப்பானில் 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது.



டிரான்ஸ் பேட் கொழுப்பு



தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.



இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



சிறுவர்களுக்கு எச்சரிக்கை



இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.



ஆஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வழங்குவதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை

சசிபாரதம்!

திருத்துறைப்பூண்டியில் 'இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ - பிரபலம்! சில பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலீஷ் மருந்துக் கடைகள் சொற்பமாகவே இருக்கும் என்பதால், இந்த அடைமொழி சந்திரசேகரன் பிள்ளைக்கு அடையாளம் ஆனது. இந்த மன்னார்குடி பாரதத்தின் பிரதான பாத்திரமான சசிகலாவின் தாத்தா அவர்!

சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என்று வந்த வாரிசுகளும், அவர்களது வாரிசுகளும்தான் கடந்த 30 ஆண்டு கால அ.தி.மு.க.வின்... அதன் மூலமாக தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக வலம் வந்தார்கள். பெரும் நெடுங்கதையின் முன்கதைச் சுருக்கம் இது!
1.பாசமலர் படலம்!
மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கச்சியாக திருத்துறைப்​பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்த சசிகலா, பங்குனி மாச மகா மாரியம்மன் கோயில் உற்சவத்தில் முழு உற்சாகத்தோடு வலம் வருவார். அங்கிருந்த போர்டு ஹை ஸ்கூலில் சேர்த்தார்கள். படிப்போடு சேர்ந்து ஓட்டப் பந்தயத்திலும் பரிசுகள் வாங்கினார். பள்ளி மாணவர் மன்றத்திலும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்த அவர்... மேற்கொண்டு ஏனோ படிக்கவில்லை. ''பொம்பளப் பிள்ளை இவ்வளவு படிச்சா போதும்'' என்று கட்டுப்பாடு வீட்டுக்குள் விதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இதற்கிடையே விவேகானந்தனின் குடும்பமும் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு இடம் பெயர்கிறது. ஆனாலும் அந்த மகா மாரியம்மன் கோயிலை சசிகலா மறக்கவில்லை. எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். அந்த நாட்களை உறவினர்களோடு கழிப்பார். அன்றைய தினம் உள்ளூர்க்காரர்கள் அனைவருடனும் பழைய கதைகளைச் சொல்லிப் பேசிக்கொண்டு இருப்பார். ஜெயலலிதாவே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். வெள்ளிக் கவசமும் சாத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு திருத்துறைப்பூண்டி சசிகலாவால் மறக்க முடியாத ஊர்.
இதைஅடுத்து, சசிகலா வாழ்க்கையில் முக்கியமான ஊர்... விளார். தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது. இங்கு வாழ்ந்த மருதப்பன் என்பவரின் மகன்தான் நடராஜன். இயல்பிலேயே தமிழ் ஆர்வமும், அரசியல் ஈடுபாடும்கொண்ட இவர், தி.மு.க. மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். எல்.கணேசனின் முக்கிய சிஷ்யராக வலம் வந்தார். கருணாநிதி தமிழக முதல்வராக முதல் முறை ஆனபோது, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாக நடராஜனை நியமித்தார். (அவரோடு ஏ.பி.ஆர்.ஓ-வாக நியமிக்கப்பட்டவர்தான் சமீபத்தில் திட்ட அமலாக்கத் துறை சிறப்பு அலுவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம்.) தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தரான மன்னை நாராயணசாமி தலைமை ஏற்க, நடராஜன் - சசிகலா திருமணத்தையும் நடத்தி வைத்தார் கருணாநிதி.
கருணாநிதி, சசிகலா இருவரது வரலாற்றிலும் இருக்கும் முக்கியமான விநோதங்களில் இதுவும் ஒன்று!
2. அறிமுகப் படலம்!
நடராஜன் - சசிகலா தம்பதி சென்னையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். செய்தித் துறைக்காரர் என்பதால் தனக்கு ஆர்வமான தொழில் ஒன்றைத் தொடங்க நினைத்த நடராஜன், வீடியோ கடை ஆரம்பித்தார். 'வினோத் வீடியோ விஷன்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் சசிகலா. தனது அண்ணன் விநோதகன் ஞாபகமாக இது இருக்கலாம். இதன் நிர்வாகத்தையும் சசிகலா கவனித்து வந்தார்.
1982 - அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா அதிகாரப்பூர்வ​மாக உள்ளே நுழையும் காலம். கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்து, தினமும் தலைமைக் கழகம் வரலாம், 10 நாளைக்கு ஒரு முறை வெளியூர் டூர் போகலாம் என்று எம்.ஜி.ஆர். கிரீன் சிக்னல் காட்டிய நேரம் அது. ஜெயலலிதா தனது சுற்றுப்பயணம் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய விரும்பினார். இதற்காகவே ஒரு படை அவர் பின்னால் செல்ல ஆரம்பித்தது. இந்தப் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நடராஜன் நினைத்திருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நிழலாக இருந்தவர் பத்திரிகையாளர் சோலை. அவருக்கு அறிமுகமான ரங்கராஜன் என்ற பொறியாளர் மூலமாக நடராஜன் தொடர்புகொண்டார். 'வினோத் வீடியோ விஷனு’க்கும் சில கூட்டங்களைப் பதிவு செய்து தர வாய்ப்புகள் தரப்பட்டன. இப்படித் தயாரான கேசட்டுக்களைக் கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் நுழைகிறார் சசிகலா. ''ஜெயலலிதாவுடன் சுற்றுப்பயணம் போய்விட்டு நாங்கள் வந்த அன்றுதான் முதன் முதலாக சசிகலாவும் அந்த வீட்டுக்குள் வந்தார். நாங்கள் நான்கைந்து பேர் இருந்தோம். எங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பேனா பரிசளித்தார் சசிகலா'' என்கிறார் ஒரு பத்திரிகையாளர். வேதா இல்லத்துக்குள் அடிக்கடி போய்வருவது ஒரு பெண் என்பதால், வசதியாய் இருந்தது சசிகலாவுக்கு. அப்போது ஜெயலலிதாவைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தவர் பிரேமா என்ற பெண். அவருக்கு இரண்டு வாரிசுகள். ஒரு மகனுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித் தர பிரேமா கேட்டதாகவும், அது ஜெயலலிதாவால் முடியவில்லை என்றும், பிரேமா கோபித்துக்கொண்டு கார்டனைவிட்டு வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.
பிரேமா வெளியேறிய சில மாதங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஜிண்டால் மருத்துவமனைக்கு ஜெயலலிதா சென்றுள்ளார். ஒரு நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவைப் பார்க்க... பெங்களூரு செல்கிறார் சசிகலா. ''என்னைப் பார்க்கிறதுக்காக இவ்வளவு தூரம் வந்தீங்களா?'' என்று ஜெயலலிதா உருகுகிறார். ஒரு நட்புக்கான அடித்தளம் பெங்களூருவில் போடப்படுகிறது. இன்றைய பிளவுக்கு அடித்தளம் இட்டதும் அதே ஊர்தான்.
ஜெயலலிதா, சசிகலா இருவருக்குமே பெங்களூரு மறக்க முடியாது!
3. அடைக்கலப் படலம்!
'அம்முவுக்குத் துணையாக யாரை இருக்க வைப்பது?’ என்று தனக்கு அருகில் இருந்த சோலையிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். சசிகலாவின் பெயர் அப்போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரிடம் சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனை நடக்கும்போது டி.ஜி.பி. மோகன்தாஸ் உடன் இருந்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தனுஷ் என்பவரை நடராஜனிடம் அனுப்பிக் கேட்டுள்ளார்கள். 'இது எதுக்கு சார் பெரிய இடத்து விவகாரம்?’ என்று நடராஜன் முதலில் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 'சசிகலா என்றால் ஓகே’ என்று ஜெயலலிதாவும் சொன்னது... சசிகலா மனதையும் மாற்றியது.
''எம்.ஜி.ஆரின் ஆற்காடு தெரு வீட்டில் ஓரிரு முறை சசிகலாவையும் நான் பார்த்திருக்​கிறேன்'' என்று வலம்புரிஜான் எழுதி இருக்கிறார். 'எம்.ஜி.ஆரின் ஸ்பையாக போயஸ் கார்டனுக்குள் அனுப்பி​ வைக்கப்​பட்டவர்தான் சசிகலா’ என்று சொல்பவர்களும் உண்டு. எது காரணமாக இருந்தாலும் அடைக்கலப் படலம் அப்போதுதான் ஆரம்பம் ஆனது.
அடிக்கடி வந்து போன சசிகலா, ஒரு வாரம்... பத்து நாட்கள் எனத் தங்க ஆரம்பித்தார். 1984 தேர்தல் நேரத்​தில் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்த​தால், பிரசாரம் முழுமையாக ஜெயலலிதாவை நம்பியே இருந்தது. 'எம்.ஜி.ஆரின் கதாநாயகி’ என்பதால் எல்லா இடங்களிலும் கூட்டம் கட்டி ஏற ஆரம்பித்தது. தனியாக பாதுகாப்புப் படை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும்... மன்னார்குடியில் இருந்து தனது தம்பி திவாகரனை அழைத்து வந்தார் சசிகலா. ஜெ. செல்லும் இடத்துக்கு எல்லாம் திவாகரன் போனார்.
அரசியல் ஆலோசனைகளுக்கு நடராஜன், பாதுகாப்​புக்கு திவாகரன், தனி உதவிக்கு சசிகலா... என்ற மூவர் அணி போயஸ் கார்டனை மறைக்க ஆரம்பித்தது!
4. அனுசரணைப் படலம்!
போயஸ் கார்டனில் இருக்கும்போது மட்டும் அல்ல... டெல்லி ராஜ்ய சபாவுக்குச் செல்லும்போதும் கூடவே சசிகலாவை அழைத்துச் செல்லும் அளவுக்கு இருவரும் நட்பு ஆனார்கள். ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டியதை சசிகலா மூலமாகத்தான் சொல்லியாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்து உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும்போது வலதுகை அருகில் ஜானகி இருப்பார். தலை அருகே ஜெயலலிதா சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவருக்குப் பின்னால் அந்த இடத்திலும் சசிகலா நிற்பார். அந்த அளவுக்கு நிழலாகத் தொடர ஆரம்பித்தார். எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதா இறக்கிவிடப்​பட்டார். அவமானப்படுத்தப்பட்ட தனி மனுஷியாக வேதா இல்லத்தைப் பூட்டிக்கொண்டு அழுத ஜெயலலிதாவுக்கு அன்று சசிகலாவும் நடராஜனும்​தான் அனுசரணையாக இருந்தார்கள். 'உங்களோட பொலிடிக்கல் லைஃப் இனிமேல்தான் ஆரம்பமாகப்​போகிறது’ என்று உற்சாகம் கொடுத்தார்கள். புதிய பொதுச்செயலாளர் தேர்வு, ஜானகி அணி - ஜெயலலிதா அணி எனக் கட்சி உடைவது, தலை​மைக் கழக முற்றுகை, 1989 சட்டமன்றத் தேர்தல்... என ஜெயலலிதா பரபரப்பாகும் காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இருக்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்த திவாகரனின் நடவடிக்கைகளில் ஒருவிதமான கோபம் ஜெயலலிதாவுக்கு வருகிறது. எனவே, அவரை விலக்க உத்தரவு இடுகிறார் ஜெயலலிதா. அதை ஏற்றுக்கொண்ட சசிகலா, தனது அக்காள் வனிதா மணியின் மூத்த மகனான தினகரனை அழைத்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தினகரன் கவனிக்கத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் - நடராஜனுக்குமான முரண்​பாடுகள் துளிர்க்கின்றன. திருப்பூர் பிரமுகர் ஒருவரை கட்சியைவிட்டு ஜெயலலிதா நீக்கியதாகவும், 'அது தவறு’ என்று நடராஜன் வாதிட்டதாகவும் 'இது என்னோட அதிகாரம்’ என்று ஜெயலலிதா கூறியதாகவும் இதுவே இவர்கள் பிரிவுக்கு காரணம் என்று ஒரு தரப்பினரும்...
'ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை அனைத்துமே நான்தான் செய்கிறேன். அவர் நான் சொன்னபடிதான் நடப்பார்’ என்று நடராஜன் எங்கோ சொன்னதாகவும் அது பிடிக்காமல் ஜெயல​லிதா கோபித்​ததாகவும் இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.
'தம்பியை போகச் சொல்’ என்றபோதும் ஏற்றுக்​கொண்டார் சசி. 'கணவன் வரக் கூடாது’ என்றதற்கும் தலையை ஆட்டினார் அவர். தன் குடும்பத்தினரைக்கூட புறந்தள்ளும் அளவுக்கு அழுத்தமானவரா அல்லது அரசியல் உள்நோக்கமா... சசிகலாவுக்கு எது தூக்கலாக இருந்தது?
5. ஆதிக்கப் படலம்!
சசிகலாவுக்குள் ஒரு பக்கா அரசியல்வாதி நாற்காலி போட்டு உட்கார்ந்து இருப்பதை 1991-96 காலகட்டம் நிரூபித்தது. சட்டமன்றத்துக்குள் முதல்வராக உள்ளே நுழைந்த ஜெயலலிதா தன்னுடன் சசிகலாவையும் அழைத்து வந்ததன் மூலம், 'அவரே எனக்கு எல்லாம்’ எனக் காட்டினார். வேதா இல்லத்தின் சுற்றுச்சுவர் உயர்த்திக் கட்டப்பட்டது மட்டும் அல்ல... உள்ளே நுழைய மந்திரிகள்கூட மணிக்கணக்காய் காத்திருக்க வேண்டிய காலம் தொடங்கியது. முக்கியமானவர்கள்கூட வீடுவரை வந்தும் இன்டர்காமில் பேசிவிட்டுச் செல்ல நிர்பந்திக்கப்பட்டார்கள். 'மேடம்’, 'சின்ன மேடம்’... பட்டப் பெயர்கள் முளைத்தன... சசிகலா சொல்வது, ஜெயலலிதாவின் கட்டளையாகக் கவனிக்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் சொல்ல சசிகலா மட்டுமே ஒரு வழிப் பாதையாக மாறியது. எனவே, வெளியே நடந்த நல்லதும் கெட்டதும் தெரியாமல் இருட்டறையில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார் என்பது... சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் ஒரு நாள் காலையில்... சிவாஜி வீட்டுக்குள் ஜெயலலிதா போனபோது வெளிச்சத்துக்கு வந்தது.
''சிவாஜியின் மகள் வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமியை சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனுக்கு நிச்சயம் செய்திருக்கிறார்கள்'' என்று அறிக்கை வெளியாகி இருந்தால், சிவாஜி - சசிகலா என்ற இரண்டு குடும்பங் களின் பந்தமாக முடிந்திருக்கும். சுதாகரன் என்ற பெயருக்கு முன்னால் 'முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்’ என்ற அடைமொழி தமிழ்நாட்டை அதிர்ச்சி அடையச் செய்தது. ஜெயலலிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் மனுஷியாக இல்லாமல்... சசிகலாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் ஆளாக ஜெயலலிதா மாறிப்போனதை அது காட்டியது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் சுதாகரனின் அண்ணன் பாஸ்கரனின் திருமணம் தஞ்சையில் நடந்தது. 'என் உடன்பிறவா சகோதரி சசிகலா’ என்று குறிப்பிட்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதுகூட நட்பின் வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளலாம். கும்பகோணம் மகாமகத்தில் இருவரும் மாறி மாறி நீர் ஊற்றிக்கொண்டதும், வளர்ப்பு மகன் தத்தெடுப்பும், 1995 செப்டம்பர் 7-ம் தேதி நடந்த 100 கோடி மதிப்பிலான திருமணமும், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடும், முன் வரிசையில் ஜெயலலிதாவுக்கு சமமாக சசிகலா உட்கார்ந்து இருந்ததும், அரசாங்கச் செலவில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு மந்திரிகள் வசூல் செய்து மன்னார்குடி உறவுகளுக்கு கப்பம் கட்டியதையும் பட்டியல் இட்டுப்பார்த்தால், சசிகலா குடும்ப முன்னேற்றக் கழகமாக அ.தி.மு.க. மாறிப்போனதை அப்பட்டமாக உணர்த்தியது.
வெளியில் இது பச்சையாக படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்தபோது ஜெயலலிதா இதை உணரவில்லை. அதுவரை தலையாட்டிப் பொம்மைகளாக வலம் வந்த எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர்கள் மெள்ளப் புலம்ப ஆரம்பித்தார்கள். முக்கிய இலாகாக்களை வைத்திருந்த கண்ணப்பன், வேட்பாளர் தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டார். 'அடுத்தும் நம்முடைய ஆட்சிதான். சொந்த செல்வாக்கு உள்ள நபர்களைத் தட்டிவைக்க வேண்டும்’ என்று சசிகலாவின் உள்வட்டாரம் முடிவெடுத்தது.
1996 தேர்தல் நெருக்கத்தில் அரசல்புரசலாக சில விஷயங்கள் ஜெயலலிதா கவனத்துக்கு போக ஆரம்பித்தன. அதற்குள் தேர்தல் முடிந்து, தோற்றுப்போனார். தனித்து நின்ற ஜெயலலிதாவுக்கு தனது சொந்தங்களை அழைத்து வந்து தைரியம் கூட்டி... வெற்றி பெறவைத்த சசிகலாவின் முயற்சிகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பலத்த தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இதில் இருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக்கொண்டாரா?
6. வெளியேற்றும் படலம்!
மரண அடிக்கு என்ன காரணம் என்றே தெரியாத ஜெயலலிதா, அப்பாவி அ.தி.மு.க. தொண்டனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'தேர்தல் தோல்விக்கான காரணத்தைக் குறிப்பிட்டு எனக்கு எழுதுங்கள்’ என்று கட்டளை இட்டார். மளமளவென்று குவிந்த கடிதங்கள் அனைத்துமே 'சசிகலாதான் காரணம்’ என்று சொன்னது. ஜெயலலிதாவுக்கு வேறு வழி இல்லை. நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'கட்சியா... சசிகலாவா... என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். கஷ்டமான காலகட்டங்களிலும் சோதனையான சூழ்நிலைகளிலும் உற்ற தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா எனக்கு உறுதுணையாக இருந்தார் என்ற நன்றி உணர்வு எனக்கு இருந்தாலும், ஒரு சில தனிநபர்களைவிட கட்சியின் நலனும் எதிர்காலமுமே மிகமுக்கியம் என நான் கருதுகிறேன்’ என்பது அவரது அறிக்கையின் சாராம்சம். இந்த அறிக்கை வெளியிடும்போது சசிகலா சிறையில் இருந்தார். அவரை சிறைக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்துதான் இந்த அறிக்கை வெளியிட்டார். 'இது ஒரு நாடகம்’ என்று சிலர் பேசினார்கள். 'அரசன் பதவியையும் புகழையும் இழக்கும்போது, தளபதியைக் கைவிடுவது தவிர்க்க முடியாதது’ என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி சொன்னதை பலரும் வழிமொழிந்தார்கள். 'சுதாகரனும் என்னுடைய வளர்ப்பு மகன் அல்ல’ என்று அறிவித்தார்.
தோல்விக்கு என்ன காரணம் என்று எழுதச் சொன்ன ஜெயலலிதா, நான் எடுத்த நடவடிக்கை சரியா எனத் தொண்டனிடம் கேட்கவில்லை. ஏனென்றால், இந்த நடவடிக்கையை அவரே மனப்பூர்வமாக எடுக்கவில்லை என்பது 10-வது மாதமே தெரிந்தது!
7. மீண்டும் அன்புப் படலம்!
1996 - செப்டம்பரில் சசிகலாவை நீக்கி அறிக்கைவிட்ட ஜெயலலிதா, 1997 ஜூலை யில் அறிக்கை விடாமலேயே சசிகலாவை சேர்த்துக்​ கொண்டார்.
சசிகலா இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றக் காவலில் இருந்தார். உடல்நிலைக் கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இருந்தார். நீதிமன் றத்துக்கு ஆம்புலன்ஸில்தான் வந்தார். ஸ்ட்ரெக்சரில் கொண்டு வந்தார்கள். அதன் பிறகு, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. மருத்துவமனையில் இருந்து சசிகலா எங்கே போவார் என்று மீடியாக்கள் யோசித்தபோது... போயஸ் கார்டனில் வரவேற்க ஆரத்தித் தட்டு தயாராகிக்கொண்டு இருந்தது. வாசலுக்கு வந்து தன்னுடைய உடன்பிறவாத் தோழியை அழைத்துச் சென்றார் ஜெ. சசிகலாவை விமர்சித்தவர்கள் விக்கித்துப்போனார்கள். இந்த இடைவெளியில் கட்சி முக்கியஸ்தர்கள் வெளியேறி இருந்தார்கள்.... வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் சசிகலாவை விரும்பாதவர்களாக இருந்தது தற்செயலானது அல்ல.
''ஒவ்வொருவருக்கும் தாய், கணவர், குழந்தை, நண்பர் என்று ஏதாவது ஒரு வடிவத்தில் உணர்வுப்பூர்வ பந்தம் தேவைப்படுகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல'' என்று ஜெயலலிதா சொன்னார். 'வழக்குகள், கைதுகள், புகார்கள் ஆகியவையும் இதற்குள் இருந்தது’ என்று போட்டி அ.தி.மு.க. விமர்சித்தது. ஆனால், எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படவில்லை. சசிகலாவுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் நெருங்க ஆரம்பித்தார். சசிகலாவின் கைது, சிறைவாசம் என்ற சென்டிமென்ட் கூடுதல் நெருக்கத்துக்கு காரணம் ஆனது.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் திருமணம் (2000 ஜூன்) கட்சிக்கு ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்தியது. ''எனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத திருமதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த நான்கு ஆண்டுகளாக, சந்தித்து இருக்கும் அவமானங்கள், அவதூறுகள், துன்பங்கள், கொஞ்ச நஞ்சம் அல்ல. எனக்காகவும் இந்த இயக்கத்துக்காகவும் வாழ்கிற சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்!’ என்று அந்தத் திருமணத்தில்தான் பகிரங்கமாக அறிவித்தார். அடுத்து நடந்தது சசிகலாவின் அண்ணன் சுந்தவதனனின் மகன் டாக்டர் வெங்கடேஷ் திருமணம். 'என்னோடு துணையாக இருந்து எல்லா வகையிலும் எனக்கு உதவியாக இருந்ததற்காகவே சசிகலாவுக்கு இப்படி ஒரு தண்டனை’ என்று ஜெயலலிதா சொன்னபோது, சசிகலா விக்கி விக்கி அழுதார். 'டாக்டர் வெங்கடேஷ§க்கு நான் இயக்கத்தில் எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. ஆனாலும் ஏராளமான மாணவர்களை இயக்கத்தில் சேர்த்தார்’ என்பதையும் ஜெயலலிதா கண்டுபிடித்துச் சொன்னார்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் தினகரன், பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டு 'இவர்தான் அடுத்த வாரிசு’ என்று மகுடம் சூட்டப்பட்ட சம்பவங்களும் அரங்கேற ஆரம்பித்தன. மீண்டும் கார்டனுக்குள் குடும்பங்கள் சாரை சாரையாக உள்ளே வரத் தொடங்கின!
8. அர்ப்பணிப்புப் படலம்!
இரண்டாம் முறை ஜெயலலிதா முதலமைச்சராக ஆனபோது நடந்த இரண்டு மூன்று விஷயங்களை சசிகலாவே எப்படி சகித்துக்கொண்டார் என்று தெரியவில்லை. 'சின்ன எம்.ஜி.ஆர்’ என்று அழைத்துக்கொண்ட வி.என்.சுதாகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். 'ராஜகுரு’ என்று அழைக்கப்பட்ட நடராஜனைச் சுற்றி நடந்த விஷயங்கள்.
தத்து எடுத்திருக்கவும் வேண்டாம். தலையில் அடித்திருக்கவும் வேண்டாம். லட்சக்கணக்கான ஜோசியர்களைப் பார்த்து விட்டார் சுதாகரன். அவருடைய ஜாதகத்தை இன்னும் யாராலும் கணிக்க முடியவில்லை. கஞ்சா வைத்திருந்ததாக அவரைக் கைது செய்ததற்குக்கூட காரணம் இருந்தது. அவரது அப்பா விவேகானந்தனும் உள்ளே போனார். நடராஜனை போலீஸ் வேவு பார்ப்பதற்குக் காரணம் இருந்தது. அவருக்கு அறிமுகமான குடும்பம் என்பதற்காக, செரீனாவும் அவரது அம்மாவும் ஜெயிலுக்குப் போனார்கள். உண்மையில் செரீனா 'கஞ்சா விற்பனையில்’ கைதானது ஏன் என போலீஸும் நடராஜனும் இதுவரைக்கும் காரணம் சொல்லவில்லை. ஆனால் 'கந்தசாமி’ என்ற பெயரில் ஆங்கில கேப்பிடல் லெட்டர்களில் கடிதம் எழுதிக்கொண்டே இருந்த ஆசாமிக்கு(!) மட்டும் எல்லாம் தெரிந்தது. இன்று பல்வேறு சிக்கல்களை வலிந்து போய் சப்பைக் கட்டும் கபில்சிபல்தான் அன்று வந்து, செரீனாவைக் காப்பாற்றினார். கபில்சிபலுக்கு 'கந்தசாமி’யும் உதவினார்.
இதன்பிறகு, சசிகலாவின் வளர்ச்சி ஏறுமுகம் ஆனது. என்.சசிகலா என்ற 'கணவர்’ இனிஷியலுடன் இருந்தவர் வி.கே.சசிகலா என்று தனது 'அப்பா’ இனிஷியலுக்கு மாறினார். நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையின் வெளியீட்டாளர் ஆனார். பொதுக் கூட்டங்களுக்கு மட்டும் வந்து முன்வரிசையை அலங்கரித்தவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவியும் தரப்பட்டது. அம்மாவுக்கு அடுத்து 'சின்னம்மா’ என்பது அ.தி.மு.க.வின் தலைவிதியாக மாறிப்போனது!
9. ஆக்கிரமிப்புப் படலம்!
சசிகலா குடும்பத்துக்காக கார்டனில் போட்ட மியூஸிக்கல் சேரில் டாக்டர் வெங்கடேஷ் உட்கார வைக்கப்பட்டார். அவருக்கு, மாநிலம் முழுக்க வலம் வரும் இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை பதவி கிடைத்தது. சென்னையின் தலைமை இடத்தில் உட்கார்ந்து கண்காணிப்பது போதாது என்று மாவட்ட எல்லைகளில் தனது ஆட்களை நியமிக்கத் திட்டமிட்டார் சசிகலா. கொங்கு மண்டலம் ராவணன் கைக்குப் போனது. திருச்சி மண்டலம் கலியபெருமாள் கைக்குத் தரப்பட்டது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களை திவாகரனே வைத்திருந்தார். தென் மாவட்டங்களால் தங்களது அதிகாரத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று இந்த வட்டாரம் நினைத்தது.
ஜெயலலிதாவுக்கு அருகில் யார் வர வேண்டும், அம்மாவை யார் யார் சந்திக்கலாம் என்பதை மட்டும் தீர்மானித்தவர்கள், 2005-2006க்குப் பிறகு கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் வரைக்கும் இன்னார்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஆரம்பித்தார்கள். அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கியமான கெட்ட பழக்கம், மொட்டைக் கடிதங்கள். இந்தக் கடிதங்கள்தான் பணம் காய்க்கும் மரங்களாக மாறியது. தலைமைக் கழகமோ, கார்டனோ, இங்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் ஜெயலலிதா பார்க்க முடியாது. அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் நியமிக்கப்பட்டவர்கள் திருகல் வேலை பார்த்தார்கள். ராவணன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷைப் பிடிக்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்ற நிலை உருவானது. இதன் உச்சகட்டம்தான், ஜெயலலிதாவுக்கே தெரியாமல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விநோதம். 'எங்க கடமைக்கு லிஸ்ட்டை விட்டாச்சு. அம்மா அப்புறம் மாத்திட்டாங்க’ என்று சப்பைக் கட்டு கட்டிக் கணக்குக் காட்டுவதற்காக ஜெயலலிதாவையே தலை குனியவைத்தார்கள்.
வெற்றிக்குப் பிறகும் செல்வாக்கானவர்கள், அமைச்சர்களாக இருந்த முன்அனுபவம் பெற்றவர்களை விட்டுவிட்டு... முதல் தடவை எம்.எல்.ஏ. ஆனவர்கள் தலையில் பெரிய பெரிய துறைகளைக் கொண்டு போய்வைத்து அமைச்சர் ஆக்கினார்கள்.
இது எதையும் ஜெயலலிதா தட்டிக்கேட்கவில்லை. தட்டிக்கேட்க முடியாத நிலையில் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்!
10. அழிப்புப் படலம்!
தி.மு.க. அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதித்த கெட்ட பெயரை, சிலர் ஐந்து மாதங்களிலேயே இப்போது வாங்கித் தந்ததை ஜெயலலிதாவின் காதில் கொண்டுபோய்ச் சேர்த்தவர் டி.ஜி.பி. ராமானுஜம். தி.மு.க.வின் சரிவுக்கு, ஸ்பெக்ட்ரமும், கமிஷனும், குடும்ப ஆதிக்கமும், கான்ட்ராக்டர் லாபியும்தான் காரணம். 'இது நெகடிவ் வாக்குகள் அல்ல. அ.தி.மு.க. மீதான பாசிட்டிவ் வாக்குகள்’ என்று ஜெயலலிதா வெளியில் சொன்னாலும் உள்ளே உண்மை தெரியும் அவருக்கு. இன்னொரு சரிவை நம் கண்முன் பார்க்கக் கூடாது என்று அவர் நினைத்து, தயங்காமல் எடுத்த அல்ட்டிமேட் அதிரடி ஆயுதத்தில் சசிகலாவே இப்போது வெளியேற்றப்பட்டு உள்ளார்.
ஆனாலும் எல்லாருக்குள்ளும் ஒரு சந்தேகம் இன்னமும் இருக்கிறது.
'ஏம்ப்பா, சசிகலாவை உண்மையிலேயே நீக்கிட்டாங்களா என்ன? இல்லே, இதுவும் ஒரு நாடகமா?’ என்ற பேச்சு பிரபலமாகி வருகிறது.
அதையும் பார்க்கலாம்!
- ப.திருமாவேலன்

ராவண லீலைகள்! -ஜெ. -சசி பிளவு பின்னணி!

கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, கண்ணீர் வடித்தபடியே இருக்கிறார். அவரை சாப்பிட வைக்கக்கூட குடும்பத்தினர் போராட வேண்டியிருக்கிறது. அடிக்கடி ‘"என்னை இப்படி நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திட்டாங்களே...
அந்த ராவணன் இவ்வளவு வில்லங்க வேலைகள் பார்த்திருக்கான்னு தெரியாமப் போயிடுச்சே' என கதறி அழுதுகொண்டிருக்கிறார். சசியின் கணவரான நடராஜனும் "அந்த ராவணன் பய லாலதான் இவ்வளவும்' என வேதனையோடு புலம்பிக் கொண்டிருக்கிறார். சசிகலாவின் ஒட்டுமொத்த உறவினர் களும் "எங்க குடும்பத்துக்கே அவமானத்தைத் தேடிக் கொடுத்துட்டான் அந்தப் பாவி' என ராவணனை நோக்கித்தான் கையைக் காட்டுகிறார்கள். இதேபோல் பாதிக்கப்பட்ட ர.ர.க்களும் ராவணனின் லீலைகளை கார்டனுக்கு புகார்களாக குவித்தபடியே இருக்கின்றனர்.

இப்படி இலைத் தரப்பின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்திருக்கும் அந்த ராவணன் யார்? அவர் செய்த லீலைகள்தான் என்ன?


ராவணனின் ஜாதகம் :


சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் சொந்த மருமகன்தான் ராவணன். கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் படித்த வர். பரமத்தி வேலூரில் வசித்து வந்த இவரிடம், கொங்கு மண்டலத்தில் இருக்கும் சொத்துக்களையும் முதலீடுகளையும் செங்கோட் டையனுடன் சேர்ந்து கவ னித்துக்கொள்ளும் பொறுப் பை ஒப்படைத்தார் சசி. இதனால் கோவைக்கு இடம் பெயர்ந்த ராவணன், அங்கு சுங்கம் ஏரியாவில் ஒரு எண்ணெய் கம் பெனியை நிறுவிக் கொண்டார். 2001-ல் மெல்ல மெல்ல சசி மூலம் கார்டனுக்குள் நுழையும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்க... அப்போதே தொடங்கிவிட்டது இவரது ராஜாங்கம்.


கார்டனின் மேஸ்த்திரி :


கார்டனின் வலது கையாக தன்னை ராவணன் காட்டிக்கொண்டதால் கட்சிப் பிரமுகர்கள் சீட்டுக்கும் பதவிகளுக்கும் இவரை மொய்த்தனர். சசி மூலம் காய் நகர்த்தி இவர் அதையெல்லாம் செய்துகொடுக்க ஆரம்பித்ததால் இவரது இமேஜ் ர.ர.க்கள் மத்தியில் கிடுகிடுவென உயர்ந்தது. கார்டனிடம் ஏகத்துக்கும் பவ்வியம் காட்டி தீவிர விசுவாசிபோல் நடந்ததால்... கார்டனும் இவர் மீது நம்பிக்கை வைத்து கோவை, ஈரோடு, கரூர், சேலம், கிருஷ்ண கிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சி போன்ற மாவட்டங்களில் கட்சியை மேற்பார்வை பார்க்கும் மேஸ்த்திரி வேலை யைக் கொடுத்தது. இதேபோல் திருச்சி பெல்ட்டை சசியின் உறவினரான என் ஜினியர் கலியபெரு மாள் கவனிக்க, முக்குலத்தோர் பெல்ட்டான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களை எம்.என்.னின் தம்பி ராமச்சந்திரன் பார்த்து வந்தார். இவருக்கு இடையில் உடல்நலம் சரியில்லாமல் போனதால் ராமச்சந்திரன் கவனித்த பகுதிகளுக்கும் மேஸ்த்திரியானார் ராவணன். இப்படி கிடைத்த மேஸ்த்திரி பதவியின் மூலம் கட்சிக்குள் நினைத்ததை யெல்லாம் செய்தார். மா.செ. பதவி முதல் மந்திரி பதவிவரை உள்ளாட்சி சீட்டுகள் முதல் எம்.எல்.ஏ., எம்.பி., சீட்டுகள்வரை கரன்ஸியைக் காலடியில் கொட்டுபவர்களுக்கு வாங்கிக் கொடுக்கத் தொடங்கினார். கோடிகள் குவிந்தன. கார்டனின் கண்களை மறைத்துவிட்டு திரை மறைவுத் திருப்பணிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

ராவணனுக்கு சசி உறவினரான தேச பந்துவும் புதுவைக்காரரான மிடாஸ் மோகனும் உதவியாளர்கள் போல் செயல்பட்டு, சகல வித்தைகளையும் அரங்கேற்றத் தொடங்கினர்.


சீனியர் அனுபவம் :


தேர்தலுக்கு முன்பு பொள்ளாச்சி ஜெயராமன் மூலம் கார்டன் எதிர்பார்த்த 10 பெரிய எழுத்துத் தொகை வந்து சேரவில்லை. இது குறித்து கார்டன் கேட்க... செங்கோட்டையன் கையாடிவிட்டார் என பொள்ளாச்சி புகார் வாசித்தார். இது குறித்து ராவணனை விசாரிக்கச் சொன்னது கார்டன். கோவை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து விசாரணை நடந்தது. இதில் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், தேசபந்து போன்றோர் அங்கே இருந்தனர். "எனக்கும் அந்தத் தொகைக்கும் சம்பந்தமில்லை' என செங்கோட்டையன் சொல்ல, பொள்ளாச்சி யோ "நீதான்யா லவட் டிக்கிட்ட' என்றார். வார்த்தைகள் தடிக்க, ஒரு கட்டத்தில் ரக ளையாகி விட்டது. இப்படி ஒரு மோச மான அனுபவத்தை சந்தித்திராத செங் கோட்டையன் அதிர்ந்து போய்விட் டார் .


கார்டனின் ரியாக்ஷன் :


செங்கோட்டையன் நேராக கார்டனுக்குப் போய் ஜெ.விடம் நடந்ததைச் சொல்லி கண்ணீருடன் முறை யிட்டார். கூடவே பொள்ளாச்சி மீது இருக்கும் புகார்களையும் பட்டியலிட்டதோடு அவர் கொங்குமண்டலத்தில் கவுண்டர் சமூகத்துக்கு எதிராக நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் பொள்ளாச்சிக்கு சீட் கொடுப்பதில்லை என அப்போதே தீர்மானித்துவிட்டார் ஜெ. அதேசமயம் ராவணன் குறித்து ஏகப்பட்ட புகார்களை அடுக்கியும் ஜெ.’ அதைக் கண்டு கொள்ளவில்லை. செங்ஸால் பொள்ளாச்சிக்கு ஜெ. சீட் கொடுக்காததை ஜீரணிக்க முடியாத ராவணன், பதிலுக்கு செங்கோட்டையனுக்கு பவர்புல் பதவி கிடைக்காதபடி சசி மூலம் பார்த்துக் கொண்டார். அதனால்தான் செங்கோட்டையனுக்கு விவசாயத்துறை ஒதுக்கப்பட்டு பின்னர் பவரே இல்லாத தகவல் -தொழில் நுட்பத்துறைக்கு அவர் தூக்கியடிக்கப்பட்டார்.

அதே சமயம் செங்கோட்டையனை நோகடிக்க, அவரது சிஷ்யர்கள் போல் இருந்து வந்த செந்தில்பாலாஜி, தங்கமணி, கே.வி. ராமலிங்கம் போன்றவர்களுக்கு பவர் ஃபுல் பதவிகளை வாங்கிக்கொடுத்து அவர்களை தனது ஆளாக்கிக்கொண்டார் ராவணன்.

பதவிக்கு வேட்டு :

பிடிக்காதவர்களின் பதவியைக் காலிபண்ணு வதில் கில்லாடிப் பேர்வழி ராவணன். இப்போது மாஜியாகிவிட்ட எஸ்.பி.சண்முகநாதனிடம் தேர்தலுக்கு முன்பே டீலிங் பேசினார் ராவணன். அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தால் தூத்துக் குடியில் இருக்கும் பலகோடி மதிப்பிலான இடத்தை தனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது டீலிங்கின் சாரம். அப்போதைக்கு தலையாட்டிய சண்முகநாதன், அமைச்சரானதும் ஜவ்வடிக்க ஆரம்பித்தார். பலமுறை அவரை மிரட்டிப்பார்த்த ராவணன், சண்முகநாதன் மீதான புகார்களை சசி மூலம் ஜெ.’வின் பார்வைக்குக் கொண்டுபோய் அவர் பதவியைக் காலி பண்ணிவிட்டார். இதேபோல் தற்போது மந்திரியாகவும் மா.செ.வாகவும் இருப்பவரிடம், தன்னைக் கணிசமாக கவனிக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார் ராவணன்.

மந்திரியோ "வருவாயே இல்லாத துறை யாச்சே' என்றபடி ஆரம்பத்தில் அசைந்து கொடுக்கவில்லை. மந்திரிசபை மாற்றம் குறித்த பட்டியலில் அவர் பெயரையும் கொண்டு போய்விட்டார் ராவணன். இதையறிந்து அரண்டுபோன மந்திரி அங்கே இங்கே எனத் தேற்றி 2 பெரிய எழுத்துத்தொகையை ராவண னுக்குக் கப்பம்கட்டி பதவியைக் காப் பாற்றிக்கொண்டார்.


இவர் வந்த கதை :


தனக்கு மந்திரி பதவி கிடைக்காத ஆதங்கத்தில் இருந்த வளர்மதி யார் யாரையோ தூதுவிட்டுப் பார்த்தார். ஜெ. கண்டுகொள்ளவே இல்லை. ராவண னை பிடித்தால்தான் கதையாகும் என ரூட்போட ஆரம்பித்தார். மிடாஸ் மோகனின் உதவி யாளரான மிடாஸ் பாஸ் கரனின் கோடம்பாக்கம் விஜயராகவபுரம் வீட்டுக்கு நான்குமுறை படையெடுத் தார். இந்த மிடாஸ் பாஸ் கரன் மட்டுமே 65 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்திருக்கிறார் என்கிறது அவரது நட்பு வட்டாரம். இந்த பாஸ்கரன், கார்டனின் அதிரடி நடவடிக்கைக்கு ரெண்டுநாள் முன்னதாகக் கூட சென்னை தி.நகரில் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷனின் நவீன பிளாட் ஒன்றை வாங்கி குடிபுகு விழாவை தடபுடலாக நடத்தியிருக்கிறார். இந்த பாஸ்கரன் வீட்டில் வளர்மதி கிடையாய்க் கிடந்து அவர் மூலம் மிடாஸ் மோகனை சந்தித்தார். மிடாஸ் மோகன் மூலம் ராவணனை பார்த்தார். இதன்பிறகே கார்டன், மந்திரிசபையின் கதவை வளர்மதிக்குத் திறந்தது. சசி குரூப் வெளியேற்றப்பட்ட பின் கார்டனில் நடந்த விசாரணையின்போது வளர்மதியிடம் "உன் கார்மீது ரெட் லைட்டை எரிய வைக்க எவ்வளவு செலவு செஞ்சே?'’ என எச்சரிக்கும் தொனியில் அதட்டி யிருக்கிறார் ஜெ.


மஞ்சத்தின் மகிமை :


எம்.ஜி.ஆருக்கு ஜோடி போட்ட நாயகி ஒருவரின் பெயரைக்கொண்ட பெண்மணி அவர். ராவணனின் பவருக்கு அடிமையாகிவிட்டார். ராவணனின் ஈரப் பார்வையால் அவர் 24-வது வய திலேயே பஞ்சாயத்துத் துணைத் தலைவியானார். இப்போதும் உள்ளாட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறார். இவரை நகைகள் பூட்டி அழகு பார்த்ததோடு நிறைய சொத்து பத்துக்களையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார் ராவணன். அவர் மஞ்சத்தில் வைத்து அறிமுகப்படுத்திய மகிழ்ச்சியான நபருக்கு அம்மணியால் அமைச்சர் யோகம் அடித்துவிட்டது. இந்த அம்மணிக்கு ஒரு கல் யாணமும் இடையில் நடந்துவிட்டது. ராவணனை சந்திக்கும் நுழைவு வாயில்களில் இவரும் ஒருவராய் இருந்தார். இதேபோல் ஜெ.’ தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க அடிக்கடி கொட நாட்டுக்குப் போகும் ராவணனின் பல வீனத்தைத் தெரிந்துகொண்டார் ஒரு புத்திசாலி. ராவணனை சகல வழிகளிலும் குளிப்பாட்டியதன் பலனாய் அவருக்கும் சைரன் கார் யோகம் அடித்துவிட்டது. இதேபோல் கொங்குமண்டலத்தில் வெறும் ஒ.செ.வாக இருந்த ஒருவர், கட்சியில் கிடுகிடு வளர்ச்சி வேண்டி, ராவணனே சரணம்.. என அடைக்கல மானார். கூடவே தனது பண்ணைவீட்டுக்கு அவரை அடிக்கடி வரவழைத்து சகலவகையிலும் விருந்தோம்பி உபசரித்தார். அவரும் இப்போது மந்திரி.


காண்ட்ராக்ட் கொள்ளை :


பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறை காண்ட்ராக்ட்களில் 3 பர்சண்ட் வரை கமிஷன் வைத்து அதில் இரண்டு பர்சண்ட்டை கட்சிக்கும் மீதத்தை மந்திரி உள்ளிட்ட ர.ர.க்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்பதே இப்போதைய கார்டனின் வாய்மொழி உத்தரவு. இதை மீறி வழக்கமான 3 பர்சண்ட்டுக்கு மேல் தனக்குத் தனியாக 4 பர்சண்ட் கொடுக்கவேண்டும் என மந்திரிகளை மிரட்டி கல்லாகட்டினார் ராவணன் என கார்டனுக்கு புகார்கள் போகின்றன.

தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் இருந்து விடப்படும் டெண்டர்கள் ஜனவரி பிப்ரவரி யில்தான் நடைமுறைக்கு வரும். எனினும் அப்போதே அவைகளுக் கான கமிஷனையும் வசூலித்து வந்திருக்கிறார். லாட்டரி மார்ட் டினை காப்பாற்றுவதாகச் சொல்லி பெரிய எழுத்துத் தொகைகளை ராவணன் வாங்கியும் ஜெ.’ மார்ட்டினைக் கைவிட்டுவிட்டார். மணல் ஆறுமுகசாமியிடமும் பலமுறை டீல் செய்து பலமாக ராவணன் பலன் பார்த்ததும் கார்ட னுக்குத் தெரியவர, ஆறுமுகசாமியிடம் கார்டன் விசாரித்திருக்கிறது.

இதேபோல் செங்கோட்டையனும் ஓ.பி. எஸ்.சும் ராவணன் குறித்து பல தகவல்களை கொட்டி ஜெ.’வையே திகைக்க வைத்திருக்கிறார்கள்.


பதவி போதை :


கார்டனை கோபத்தின் உச்சிக்குப் போகச் செய்த ஒரு தகவலும் நம் காதுக்கு வந்தது. உற்சாக நேரங்களில் தன்னை மறந்தபடி பேசும் ராவணன் ‘"இப்ப நான் சீட்டு வாங்கிக்கொடுத்து ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்ல 45 பேர் எப்பக் கூப்பிட்டாலும் என் பின்னால் வர ரெடியா இருக்காங்க. எனக்கே இப்படின்னா எங்க குடும்பத்தினரின் பின்னால் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருப்பாங்கன்னு கணக்குப் போட்டுக்கங்க'ன்னு’ பலமுறை பேசியிருக்கிறார். ஏதோ திட்டத்தோடு தனது ஆதரவாளர்களுக்கு அதிக சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட கார்டன், இனியும் விட்டுவைக்கக் கூடாது என்று சரசரவென களையெடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.


குவித்த சொத்துக்கள் :


சென்னையில் மட்டும் ராவணன் சில நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புகொண்ட இடங்களை வாங்கிப் போட்டிருக்கிறார் என்கிறார்கள். பிரச்சினையுள்ள சொத்துக் களையும் போலீஸ் டீமை கையில் வைத்துக் கொண்டு அடிமாட்டுவிலைக்கு வாங்கிவிடுவார்’ என்கிறார்கள். இதனால் பத்திரப்பதிவு அலு வலகங்களில் சசி உறவினர்கள் வாங்கியுள்ள சொத்துக்களின் கணக்குகளை எடுக்கும் பணி ஒருவாரமாக தீவிரமாகியுள்ளது.


சொத்துக்களை கைப்பற்றச் சொல்லும் மாஜி:


மாஜி அ.தி.மு.க. மந்திரியும் தற்போது தி.மு.க.வில் செயல்பட்டு வருபவருமான சத்தியமூர்த்தி நம்மைத் தொடர்பு கொண்டு ""மன்னார்குடி கும்பலை கார்டனை விட்டும் கட்சியை விட்டும் நீக்கினால் மட்டும் போதாது. அடுத்தகட்ட நட வடிக்கையையும் எடுக்கவேண்டும். ஒரு காலத்தில் சசி கும்பலை அருகில் இருந்து பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்... 89-ல் இருந்து அத்தனை தேர்தல் களிலும் அவர்கள் சீட்டுக்காக கட்சிக்காரர்களிடம் பணம் பறிக்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு சசி குடும்பத்திடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி என்பதை கணிக்க முடியாது.

இவர்களால்தான் தனக்கும் கட்சிக்கும் கெட்டபெயர் என்று ஜெயலலிதா நினைத்தால், சசி தரப்பின் அத்தனை சொத்துக்களையும் கைப்பற்றி அரசுப் பணத்தை அரசிடமும், கட்சியினரிடம் பறித்த பணத்தை கட்சிக் காரர்களிடமும் ஒப்படைக்கவேண்டும். இல் லையேல் தனது பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப ஜெ.’போடும் நாடகம் என்று மக்கள் நினைப்பார்கள். என்னைப் போல் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறியவர்களும் அ.தி.மு.க.விலேயே இருக்கும் பிரமுகர்களும் சசி கும்பலிடம் எவ்வளவு ரூபாயை இழந்தோம் என்று பட்டியல் போட்டு விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இது உறுதி'' என்றார் அதிரடியாய்.