Friday, April 29, 2011

ராணா படத்தில் நீக்கியது பற்றி

முதல்-அமைச்சர் கருணாநிதியை நடிகர் வடிவேலு இன்று சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இன்று காலை 9.50 மணி முதல் 10.50 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மத்திய மந்திரி மு.க.அழகி உடன் இருந்தார். பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு தனியார் தொலைக் காட்சி ஓட்டுப்பதிவுக்கு பிறகு நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று இப்போது கூறி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் கலைஞரை சந்தித்தேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார். நான் பிரசாரம் செய்தபோது பொதுமக்கள் திரண்டு வந்தனர். பெண்கள் குழந்தைகளுடன் வந்து எனது பேச்சை கேட்டார்கள். மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கிறது. நான் பிரசாரம் செய்த போது மக்களிடம் இருந்த எழுச்சியில் இது தெரிந்தது. எனவே, தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதை யாரும் தடுக்க முடியாது.
கேள்வி: எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்?
பதில்: தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின்படி, 130 இடங்களில் மட்டுமல்ல, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
1971-ல் தி.மு.க. ஆட்சிக்கு வராது என்றார்கள். ஆனால் 184 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அது போல இப்போதும் அதிக இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்த ஆட்சி மூலம் பயன் அடைந்த ஏழை எளிய மக்களால் மிகப் பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்.
கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?
பதில்: “ராணா”படம் “கானா” படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13-ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.
கேள்வி: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா?
பதில்: பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும்.

முதல் அணு மின் உலை வெற்றிகரமாக குளிர்விப்பு

ஜப்பானில் கடந்த மாதம் 11 ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட புகுஷிமா மின் அணு உலைகளில் முதலாவது அணு உலையை மீண்டும் வெற்றிகரமாக குளிர்வித்துள்ளதாக ஜப்பானின் அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சுனாமியின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கபப்ட்டிருந்த புகுஷிமா அணு மின் அலைகளிலிருந்து கசிந்த கதிர்வீச்சினால் பல்லாயிரக்கணக்கான மக்களு அதன் தாக்கம் பரவும் சந்தர்ப்பம் இருந்தது. இதையடுத்து குறித்த அணு மின் உலை பகுதிக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படது.

ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பு, கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும், அதனை சரி செய்யவும் தீவிரமான பணிகளில் இறங்கியது. எனினும் தொடர்ந்து பல தடவைகள் குளிர்விக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், கதிர்வீச்சு தாக்கம் பன்மடங்கு அதிகரித்தது.

தாய்ப்பாலில் தாக்கம் செலுத்தும் வரை இதன் தாக்கம் இருந்தது. இந்நிலையில் மேலை நாடுகளின் உதவிடன், குளிர்விக்கும் குழாயை சரிசெய்து தற்பொது அதனூடாக டன் கணக்கில் தண்ணீரை குளிர்விக்கும் குழாய் மூலம் செலுத்தி வருகிறது ஜப்பான்.

இதனால் புகுஷிமாவின் முதல் அணு உலை மீண்டும் வெற்றிகரமாக செயற்படுகிறது என அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது

"ஊழல்' திரைப்பட தயாரிப்பாளர் மன்மோகன்: கட்காரி கிண்டல்

ஊழல் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களாக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் உள்ளனர் என, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதின் கட்காரி பேசியதாவது: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பிரதமரிடம் கேட்டால், "எனக்கு எதுவும் தெரியாது' என்கிறார். சோனியாவும் இதே பதிலைத் தான் தெரிவிக்கிறார். ஊழல் செய்பவர்கள் மட்டுமல்லாது ஊழலுக்கு துணை போவோரும், ஊழல் செய்வதை பார்த்துக் கொண்டிருப்போரும் தண்டிக்கப்பட வேண்டும். "ஊழல்' என்ற திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்களாக சோனியாவும், மன்மோகனும் உள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் செய்ததற்காக சுரேஷ் கல்மாடி மீது மட்டும் ஏன் செருப்பு வீச வேண்டும். இந்த ஊழலில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கும் பங்கு உண்டு. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடர்பான கோப்புகளுக்கு அனுமதியளித்ததில் அமைச்சரவை குழுவுக்கும், நிதி அமைச்சகத்துக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பங்கு உண்டு. எனவே, இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


தனக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு முன்னாள் அமைச்சர் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததை பிரதமர் கண்டு கொள்ளவில்லை. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்ய நாங்கள் தயாராக இல்லை. போதிய இடம் கிடைக்காவிட்டால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் மகிழ்ச்சியடைவோம். உண்மையான ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். அடிமட்ட தொண்டர் கூட கட்சியின் தலைமை பதவியை அடையலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் அடிபணிய வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.

தப்பிய மனைவி.. சிக்கிய மகள்?


''எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் வந்தது இல்லை! 'தமிழ்நாட்டுக்கு எது உண்மையான தலைமைச் செயலகம்?’ என்ற குழப்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தையும் சட்டசபையையும் மாற்றி, அண்ணா சாலையில் அமைத்து இருக்கிறார் கருணாநிதி. 'நான் புதிய தலைமைச் செயலகத்தில் காலடிவைக்க மாட்டேன்’ என்று சபதம் போட்டுள்ளார் ஜெயலலிதா. 'அடுத்து வரப்போகும் ஆட்சி... தி.மு.க-வா? அ.தி.மு.க-வா?’ என்று முடிவான பிறகுதான் இந்தக் கட்டடங்களுக்கு உண்மையான மரியாதை மீண்டும் பிறக்கும்!''

''ஏதோ, 'கோப்புகளைக் காணாமல் அடிக்கிறார்கள்’ என்கிறாரே ஜெயலலிதா?''

''கோப்புகளை இட மாற்றம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. 'பிப்ரவரி 24-ம் தேதிக்குள், கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு முழுமையாக அனைத்துத் துறைகளையும் மாற்றிவிட வேண்டும்’ என்று கருணாநிதி உத்தரவிட்டார். ஆனால், அப்படி முடியவில்லை. மார்ச் 1-ம் தேதி தேர்தல் தேதி அறிவித்ததால், பணிகள் அப்படியே முடக்கப்பட்டன. இப்போது விதிமுறைகள் தளர்த்தப்பட, கோப்புகளை மீண்டும் இட மாற்றம் செய்ய அதிகாரிகள் முயன்றார்கள். இதைக் கேள்விப்பட்டுத்தான் ஜெயலலிதா கொந்தளித்தாராம்.''


''ம்...''



''தொழில், பொதுப் பணி, ஊரக வளர்ச்சி, சமூக நலன், பொது ஆகிய ஐந்து துறை தொடர்பான ஆவணங்​களையே அதிரடியாக மாற்றி இருக்​கிறார்கள். பணியாளர் நலன், சட்டம், வருவாய்த் துறையின் சில பகுதிகள், நிதி ஆகியவை பழைய கட்டடத்தில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு கொண்டு செல்ல நாமக்கல் மாளிகைக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. 'புதிய ஆட்சி வந்துதான் இந்த முடிவுகளை எடுக்க முடியும்’ என்கிறார் ஜெயலலிதா. கருணாநிதி, புதிய தலைமைச் செயலகத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து, அழகூட்டிக் கட்டியவர். ஆதங்கத்தில் அவர் முகமே மாறிவிட்டது. 'இந்தக் கட்டடத்தை சும்மா போட்டுவிடுவாரா அவர்?’ என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால் கேட்டாராம். பழைய கோட்டையை அப்படியே தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்து​விடுவது என்பதே கருணாநிதியின் திட்டம். அதற்கு ஜெயலலிதா போட்ட தடையைப் பொறுக்க முடியாமல், திங்கள்கிழமை காலை புதிய தலைமைச் செயலகத்துக்கே கருணாநிதி கிளம்பி வந்தார்!''


''அவர் புதிய தலைமைச் செயலகத்துக்கு வருவது ஒன்றும் புதிது இல்லையே?''



''சில நாட்களாக அவர் வராமல் இருந்தார். 'அங்க போய் என்னய்யா பண்றது? எதையும் பண்ணக் கூடாதுன்னுதான் தேர்தல் கமிஷன் சொல்லுதே?’ என்று கோபப்பட்டாராம். ஆனால், ஜெயலலிதா அறிக்கையைப் பார்த்ததும், ஆவேசம் அடைந்தவராக புதிய தலைமைச் செயலகத்துக்குச் சென்றார். ஆறாவது மாடியில், கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் பத்திரிகையாளர்களை வரச் சொல்லிச் சந்தித்தார். 'இது காபந்து சர்க்கார் அல்ல. தொடர்ச்சியான அரசுதான். தேர்தல் முடிவு வந்த பிறகு, புதிய ஆட்சி அமையும் வரை இருக்கும் அரசுக்கே காபந்து சர்க்கார் என்று பெயர்’ என்று தத்துவார்த்த விளக்கம் கொடுத்த கருணாநிதி முகத்தில் சோகம் தென்பட்டது. '2ஜி வழக்குத் தொடர்பான இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறது. அதில் கனிமொழி, தயாளு அம்மாள் இருவரும் சேர்க்கப்பட இருக்கிறார்கள்’ என்ற தகவல்தான் கருணாநிதியைச் சோர்வடைய வைத்தது!''


''தயாளு அம்மாள் பெயர் அதில் இடம் பெற​வில்லையே?''


''கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தபோது, குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகவில்லை. 'தயாளு, கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?’ என்று ஒரு பெண் நிருபர் கேட்டதுதான் தாமதம்... கருணாநிதி கொந்தளித்தார். 'சில பெண்கள் இதயம் இல்லாமல் இருக்கிறார்கள். நீயுமாம்மா?’ என்றாராம். ஆனால், அவருடைய பேட்டி டெக்ஸ்ட் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டபோது, 'பெண்ணாக இருந்துகொண்டு இது மாதிரிப் பேசக் கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பேசக் கூடாது’ என்று கனிவாக மாற்றப்​பட்டது.''


''இதயம் இல்லாத பெண் என்று யாரை கருணாநிதி சொல்கிறார்?''


''குற்றப் பத்திரிகையில் தயாளு, கனிமொழி ஆகிய இருவர் பெயரையும் சேர்க்க வேண்டாம் என்று இறுதி வரைக்கும் தி.மு.க. மன்றாடியதாம். 'தேர்தல் முடிவு வரும் வரைக்காவது தள்ளிவையுங்கள்’ என்றும் சொல்லப்பட்டதாம். 'வாக்குப் பதிவு நடக்கும் வரை தள்ளிவைக்கச் சொன்னதால், கனிமொழி, தயாளு பெயரைச் சேர்க்கவில்லை. இப்போது, மீண்டும் தள்ளிவைக்கச் சொல்வது நல்லது அல்ல’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சினம் கொண்டார்களாம். 'காமன் வெல்த் ஊழலில் சம்பந்தப்பட்ட கல்மாடியைக் கைது செய்யாமல் ஆ.ராசாவைக் கைது செய்தீர்கள். இப்போது என் மனைவி, மகளையும் கைது செய்வீர்களா? தி.மு.க-வுக்கு மட்டும் ஓரவஞ்சனையா?’ என்று கேட்டாராம் கருணாநிதி''


''இந்தத் தகவலை டெல்லிக்குக் கொண்டுசென்றது யார்?''


''மூன்று நாட்களுக்கு முன்னதாக டி.ஆர்.பாலு டெல்லி சென்றார். பிரதமரையும், பிரணாப் முகர்ஜி​யையும் சந்தித்தார். கருணாநிதியின் கோபத்தை, முழுமையாக பாலு கொட்டினாராம். 'உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடக்கும் வழக்கு என்பதால், எங்களால் ஓர் அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாது. யாரையும் காப்பாற்ற முடியாது’ என்று சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்பட்டதையே, காங்கிரஸ் மேலிடம் தனது பதிலாகச் சொன்னது. கருணாநிதிக்கு பதில் சொல்வது மாதிரியே காலையில் சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தனர். மதியம் குற்றப்பத்திரிகையில் கனிமொழியைச் சேர்த்தார்கள்.''


''தயாளு அம்மாள்தான் விடுபட்டுள்ளாரே?''


''அவரைப் பொறுத்தவரையில், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் இரண்டுவிதமான கருத்துகள் இருந்தனவாம். 'எனக்கு எதுவும் தெரியாது. சரத்குமார் சொன்ன இடத்துல கையெழுத்துப் போட்டேன். நீங்க சொல்ற போர்டு மீட்டிங்குல இதுவரைக்கும் கலந்துகிட்டதுகூட கிடையாது’ என்பதை உண்மையான வார்த்தைகளாக சில அதிகாரிகள் நம்ப... 'அவரது வயதைக் காரணமாகச் சொல்லலாம்’ என்று சி.பி.ஐ. வக்கீல்கள் ஆலோசனை சொன்னார்கள். இதைவைத்தே தயாளு பெயர் நீக்கப்​பட்டதாகத் தகவல்!''


''இந்தச் செய்தி பரவியபோது, கருணாநிதி எங்கே இருந்தார்?''


''சி.ஐ.டி. காலனி வீட்டில்! ராஜாத்தி அம்மாள், கனிமொழி இருவரும் உடன் இருந்தனர். 'உடனே, மத்திய அமைச்சர்கள் அத்தனை பேரையும் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்’ என்று கருணாநிதி கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 'அமைதியாக முடிவெடுங்கள். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு யோசிக்கலாம்’ என்று ஸ்டாலின் சமாதானப்​படுத்தினாராம். அதற்குள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூவர் அணி வந்துவிட்டது. 'வக்கீல்​களின் ஆலோசனையை வாங்குங்கள்’ என்று கருணாநிதி சொல்லி ஒரு மணி நேரம் கடந்தது. உடனேயே, டெல்லியில் இருந்து அடுத்த தகவல்... 'மே 6-ம் தேதி கனிமொழி ஆஜராக வேண்டும்’ என்று! 'அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?’ என்று பதறினாராம் ராஜாத்தி.''


''என்ன ஆகும்?''


'' 'குற்ற உடந்தை’ என்ற கடுமையான வார்த்தையைக் கனிமொழி மீது சி.பி.ஐ. பயன்படுத்தி உள்ளது. சிக்கலில் இருந்து அவர் விடுபடுவதற்கு, ஆ.ராசாவைப்போலவே பல மாதங்கள் ஆகலாம். கருணாநிதிக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட் இது என்று டெல்லி மீடியா வட்டாரம் பரபரக்கிறது. ஆனாலும் 2ஜி குற்றப்பத்திரிகை விவகாரத்தை எதிர்கொள்ள தி.மு.க-வும் தயாராகி விட்டது. வரும் 27-ந்தேதி உயர்மட்ட செயல்திட்டக் குழு கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறது தி.மு.க. காங்கிரசுடனான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முரண்பட்ட தி.மு.க. கடந்த மார்ச் 4-ந்தேதி தான் உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி 'செக்’ வைத்து பின்வாங்கியது. ஒன்னறை மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது''


Thursday, April 28, 2011

கிசு கிசு

தேர்தல் பிரசாரத்தின்போது சக கலைஞர் என்றுகூட பாராமல் சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்த வைகைப் புயலுக்கு இப்போது நேரம் சரியில்லை போல இருக்கிறது. அடுத்தடுத்து வாய்ப்புகளை பறிகொடுக்க ஆரம்பித்திருக்கிறார். சூப்பர் நடிகர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் ‌வைகைப்புயல்தான் காமெடி என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதிரடியான முடிவினை எடுத்திருக்கிறாராம் சூப்பர். தேர்தல் நேரத்தில் புயலின் அணுகுமுறையில் பெரும் அதிருப்தியுள்ள சூப்பர் நடிகர், என் படத்தில் அவர் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

வடிவேலு இல்லையென்றால் அந்த வாய்ப்பு ஆபாச காமெடியனுக்குத்தான் போகும் என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் நினைத்திருந்த நிலையில், சூப்பரின் சாய்ஸ் கஞ்சா காமெடியன்தானாம். குழந்தை பிறந்த நேரம்; கஞ்சாவின் தொழில் ஸ்தானத்தில் கரன்ஸி மழை அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகளின் சபை இலங்கை அரசு போர்க்குற்றங்களிள் ஈடுபட்டது நிரூபிக்கப் பட்டதாக விசாரணை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈழத் தமிழரின் நலன் காக்கவும், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமெனவும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

தமிழினத் துரோகி

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.

இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...

நன்றி தினமணி எழுத்தாளர் சவுக்கு

கனிமொழியும், கல்மாடியும்

காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்காக சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் கைது. நாளையோ அல்லது மே மாதம் 6ம் தேதியோ கனிமொழி கைதாகலாம். கனிமொழி கைதானால், அது, தி.மு.க.,விற்கு தேய்பிறை தான்.சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "ஒரு கூட்டமே கைது செய்யப்பட வேண்டிய இடத்தில், ஒருவர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்' என்று கூறியிருக்கிறார்.


காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியே குற்றங்களுக்குள் ஒளிந்திருப்பதால், கனிமொழி கைதானால், காங்கிரசும் காட்டிக் கொடுக்கப்படலாம். இருவருமே அனைத்து ஊழல்களிலும், பின்னிப் பிணைந்திருப்பதால், அரசியலிலும் கைதேர்ந்தவர்கள் என்பதால், ஒருவர் ஏற்படுத்தும் உராய்வு, இருவரையுமே சேர்த்து, "சந்திக்கிழுக்கும்' என்பதை இருவருமே அறியாதவர்கள் அல்லர்.


காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், "2ஜி' அலைக்கற்றை ஊழலும் பல ஒற்றுமைகளைக் கொண்டவை. இரண்டிலேயும், வெளியே தெரியும் முகங்கள் ஒன்று; வெளியே தெரியாத உண்மையான முகங்கள் அதிகம். இரண்டு ஊழல்களிலும் நாட்டின் மிகப்பெரிய, "தலைகள்' பங்கு பெற்றிருக்கின்றன.பெரிய இடத்து சம்பந்தம் - பெருந்தலைகளின் பங்கு இருப்பதாலேயே, கனிமொழியும், கல்மாடியும் சிறிதும் அச்சப்பட்டதாகத் தெரியவில்லை. கல்மாடி, தான் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவெடுத்ததாக தைரியமாக சொல்கிறார். இதை உறுதிப்படுத்தும் வண்ணம், சி.பி.ஐ., விசாரணைக்குப் பின், அவர், மன்மோகன், சோனியா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மேலிடமும் தன்னோடு சேர்ந்து, "சிக்கி' இருப்பதாலேயே, தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.


இந்த விவகாரத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, நிதின் கட்காரி பெற்ற தகவலும், பண பரிவர்த்தனைகள், நிதி முடிவுகள் அனைத்தும், அமைச்சர்கள் குழு, அமைச்சரவை உப கமிட்டி, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமருக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."2ஜி' அலைக்கற்றை ஊழலிலும், கலைஞர், "டிவி'க்கு கொடுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயை பார்க்கும் போது, "தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல்' பட்டம் தகுதி இழந்தது தெரிகிறது. ஆண்டு வருமானம் வெறும், 47 கோடி உள்ள கலைஞர், "டிவி' வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீடு கொண்ட, தன்னை விட மிகச்சிறிய இரண்டு நிறுவனங்களிலிருந்து, 210 கோடி ரூபாய் கடன் பெறுவது என்பது, தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் பெருமைக்கு ஒரு களங்கம். எங்கோ தப்பு நடந்திருக்கிறது; யாரோ தவறாக ஆலோசனை கூறியிருக்கின்றனர்.


சர்க்காரியா காலத்திலிருந்த விவேகம், இப்போது கருணாநிதியின் வாரிசுகளிடம் இல்லை. லாபம் வரும் என்று தெரிந்தே தான் ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக, கனிமொழியால் ஆக்கப்பட்டிருப்பதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை சொல்கிறது. விவசாயத்திலிருந்து வருமானமில்லை, வாழ்வு நடத்த வழியில்லை என்பதால், தினசரி 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதே நாட்டில் ஊழல்கள் மூலம் ஆயிரம், லட்சம் கோடிகளை குவிப்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு எப்போது வரும் தீர்வு?



- நன்றி தினமலர்

ஏர் இந்தியா பைலட் தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் ரத்து

சம்பள உயர்வு கோரி, ஏர் இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால், விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பைலட்கள் தொழிற்சங்கத்திற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெறும்படி டில்லி ஐகோர்ட், பைலட் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


விமானப் பைலட்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சம்பள உயர்வு மற்றும் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரே மாதிரியான சம்பள விகிதம் இருக்க வேண்டுமென, விமானப் பைலட்கள் கோரி வந்தனர். இது தொடர்பாக, தலைமை தொழிலாளர் கமிஷனர் முன் நிர்வாகத்தினர், இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பின் (ஐ.சி.பி.ஏ.,) பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக ஐ.சி.பி.ஏ., நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வெளியிட்டது.இதனால், நள்ளிரவு முதல் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களை இயக்க முடியாமல் ரத்து செய்யப்பட்டன. அதே போல், மும்பை உட்பட உள்நாட்டில் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பின் அங்கீகாரத்தை, ஏர் இந்தியா நிர்வாகம் ரத்து செய்தது.


ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பைலட்கள் கூட்டமைப்பின் தலைவர், பொதுச் செயலர் மற்றும் மேலும் நான்கு பைலட்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்; மேலும் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டில்லி மற்றும் மும்பையில் உள்ள ஐ.சி.பி.ஏ., அலுவலகங்கள் "சீல்' வைக்கப்பட்டன. ஏர் இந்தியாவில் மொத்தம் 1,200 பைலட்கள் உள்ளனர். இதில், இந்திய வர்த்தக பைலட் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் 800 பைலட்கள் உள்ளனர்; மீதமுள்ள 400 பைலட்கள் பெரும்பாலும் சர்வதேச விமானங்களை ஓட்டக்கூடியவர்கள். இவர்கள் இந்திய பைலட்கள் கில்டிற்கு கட்டுப்பட்டவர்கள். ஐ.சி.பி.ஏ.,வில் பைலட்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். கடந்தாண்டு 2007ம் ஆண்டு ஏர் இந்தியாவுடன், இந்தியன் ஏர்லைன்ஸ் இணைக்கப்பட்டது. இன்று வரையில், ஏர் இந்தியா பைலட்கள் அதிகமான சம்பளம் பெறுகின்றனர். ஆனால், பழைய இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்களுக்கு குறைவான சம்பளம் அளிக்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை நீக்கி, ஒரே மாதிரியான சம்பளம் அளிக்க வேண்டும் என்பது கோரிக்கை.


ஐ.சி.பி.ஏ., தலைவர் ஏ.எஸ்.பிந்தர் கூறியதாவது: ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதாக நிர்வாகம், 2009ம் ஆண்டு நவம்பர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது. மேலும், லாபம் வரக்கூடிய விமான ரூட்டுகளை எல்லாம் ரத்து செய்து, தனியாருக்கும், வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் செயல்பட்டுள்ளனர். இது பற்றி சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பிந்தர் கூறினார்.


பயணிகள் பாதிப்பு: பைலட்கள் ஸ்டிரைக் காரணமாக பல விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஸ்டிரைக் பற்றி தெரியாத பயணிகள் விமான நிலையங்களுக்கு வந்து, விமானங்கள் ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தனர். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன் வரை எவ்வித அறிவிப்பும் செய்யாமல் , கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்ததால், மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் பயணிகள் அவதியுற்றனர். சர்வதேச பைலட்கள், பயிற்சி பைலட்களை கொண்டும் விமானச் சேவையை தொடர்வதற்கு ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதனால், சில விமான நிலையங்களில் விமானங்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. ஸ்டிரைக்கை பயன்படுத்தி, தனியார் விமானச் சேவை நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி அதிக லாபம் பார்த்தன. ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ் கூறுகையில், "இந்த ஸ்டிரைக் துரதிருஷ்டவசமானது, பொறுப்பற்றது. யாரோ சிலரின் தவறான ஆலோசனையால் ஈடுபட்டுள்ளனர். மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது' என்றார்.


பணம் வாபஸ்: ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான டிக்கெட் கட்டணம் எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பி வழங்கப்படும். மேலும், மாற்று ஏற்பாட்டிற்கான கட்டணத்திற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என, ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று மாலை வரை மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்களும், டில்லியிலிருந்து புறப்பட வேண்டிய 24 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இன்று முதல், விமானச் சேவையை சமாளிக்க சர்வதேச விமானப் பைலட்கள் பயன்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விமானச் சேவையை பழையபடி துவங்குவதற்கு, ஏர் இந்தியா ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டுமென, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.


டில்லி ஐகோர்ட் கண்டிப்பு: "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா பைலட்கள் உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெற வேண்டும்' என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானப் பைலட்கள் திடீர் ஸ்டிரைக்கால், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் கோர்ட்டை அவமதித்ததாகும் எனக் கூறிய ஏர் இந்தியா நிர்வாகம், இது தொடர்பாக மனு ஒன்றை டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தது. இதை, நீதிபதி கீதா மிட்டல் நேற்று உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். ஏர் இந்தியா தரப்பில் ஆஜரான வக்கீல் சஞ்சய் குப்தா, "இந்த ஸ்டிரைக் சட்டத்திற்கு புறம்பானது. இதனால், விமான நிறுவனத்திற்கு மட்டும் நஷ்டம் ஏற்படவில்லை. பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி ஸ்டிரைக்கை உடனடியாக வாபஸ் பெற உத்தரவிட வேண்டும்' என கேட்டுக் கொண்டார். பைலட்கள் கூட்டமைப்பு சார்பில் வாதிட்ட வக்கீல் சஞ்சய் கோஷ், "ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பைலட்கள் இடையே சம்பள முரண்பாடு உள்ளது. ஏர் இந்தியாவில் இணைக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்கள் இன்னும் குறைவான சம்பளத்தையே வாங்குகின்றனர். இதை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கீதா மிட்டல், "பொதுமக்கள் நலன் கருதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்கள் உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெற வேண்டும்' என உத்தரவிட்டார். மேலும், பைலட்கள் கோரிக்கையை பரிசீலிப்பதில் ஏர் இந்தியா நிர்வாகம் தாமதம் காட்டி வருவதையும் கண்டிக்க அவர் தவறவில்லை.


iPad 2


Dual-core A5 chip.
It’s fast, times two.

Two powerful cores in one A5 chip mean iPad can do twice the work at once.3 You’ll notice the difference when you’re surfing the web, watching films, making FaceTime video calls, gaming and going from app to app to app. Multitasking is smoother, apps load faster and everything just works better.



Super-fast graphics.
Go, gamers, go.

With up to nine times the graphics performance, gameplay on iPad is even smoother and more realistic. And faster graphics help apps perform better — especially those with video. You’ll see it when you’re scrolling through your photo library, editing video with iMovie and viewing animations in Keynote.



Two cameras. And a big hello to FaceTime for iPad.

You’ll see two cameras on iPad — one on the front and one on the back. They may be tiny, but they’re a big deal. They’re designed for FaceTime video calling, and they work together so you can talk to your favourite people and see them smile and laugh back at you.3 The front camera puts you and your friend face-to-face. Switch to the back camera during your video call to share where you are, who you’re with or what’s going on around you. If it’s worth filming, let the back camera roll. It’s HD, so every movie you shoot is a mini-masterpiece. And you can take wacky snapshots in Photo Booth. It’s the most fun a face can have.


AirPrint. Print everything wirelessly.

Print your email, photos, web pages and documents straight from your iPad over Wi-Fi.6 There’s no software to download, no drivers to install and no cables to connect. With just a few taps, you can go from viewing something on the iPad screen to holding a printed copy.