Tuesday, November 27, 2012

அருள் மழை




யார் துறவிஎது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாகபெரியவர்திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் ...
பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம்பக்தர்கள் அவருக்குதங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.
ஆந்திர மாநிலம்விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தைஒட்டி ஒரு தங்க கீரீடமும்இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்கதீர்மானித்திருந்தனர்.

...
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமேஅதற்கான வசூலைதடுத்துவிட்டார் பெரியவர்அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார்துறவி – எது துறவுஎன்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலேஅதன்அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லைஎன்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறதுசன்னியாசி என்பவனைஒருஉடைமையுமில்லாத ஏகாங்கியாகஅவன் தன் ஊர் என்றுசொல்லிக்கொள்வதற்குக்கூடஒரு இடம் இருக்க வேண்டாமென்றுசதாஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.
இருந்தும்சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டுஅதுதான் மடம் என்றானதுஇதை ஒரு தவிர்க்க முடியாத தீமை(Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத்தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின்கடமைஇந்தக் கடமையின் போதுஅவனது ஆன்ம தபோ பலத்தைவிட,பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ளவேண்டும்.காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம்உண்டுஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம்நீங்கியதுஇந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவேகருதினேன்உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்;பணமல்ல.எனவேஎப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படிஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன்இன்று இரண்டு லட்சம் என்றுசர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்ததுஇதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்றுகருதுகிறேன்ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே எனவருத்தப்படவேண்டாம்பணத்தை வாங்கிக்கொண்டுநான் பண்ணுவதுஆசீர்வாதமாக இருக்காதுஅதற்காக பணமே வேண்டாம் என்றுகூறவில்லைநெருக்கடி ஏற்படும்போதுஉங்களிடம்தான் பிட்சைகேட்டு நிற்பேன்தேவைக்குத்தான் பணம்சன்னியாசிக்கு பணத்தைவிடஆத்மபலம்தான் பெரும் பணம்…!’
நன்றி: "தீபம்" (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

No comments:

Post a Comment