Monday, February 20, 2012

சிதம்பரத்தில் இன்று நாட்டியாஞ்சலி துவக்கம்!

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி இன்று துவங்குகிறது. சிவராத்திரியையொட்டி, இன்று துவங்கும் நாட்டியாஞ்சலி, 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது.விழாவை, தமிழக தேர்வாணையக் குழு தலைவர் நடராஜன் துவக்கி வைக்கிறார்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.முதல் நாள் நிகழ்ச்சி, இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை, நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment