Wednesday, December 26, 2012

வைகுண்ட ஏகாதேசி வழிபாட்டிற்காக பார்த்தசாரதி கோவிலில் ஜெயலலிதா.


www.thedipaar.com
''கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸுக்கு முன்புதான் சசிகலாவை அவரது குடும்பத்தினரோடு சேர்த்து கல்தா கொடுத்தார் ஜெயலலிதா. இந்த டிசம்பர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் பார்த்த​சாரதி கோயிலுக்குப் பவ்யமாக அழைத்து வந்திருக்கிறார் அதே ஜெயலலிதா. அதுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இரண்டு மாத இடைவெளியில் கார்டனுக்குள் சசிகலா வந்துவிட்டாலும், அவரை பொது இடங்களுக்கு ஜெயலலிதா அழைத்துச்செல்வது இல்லை. இப்போது அதுவும் மறுபடி தொடங்கி விட்டது.''
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி வழிபாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்வது பற்றிய தகவல் போலீஸாருக்கே தாமதமாகத்தான் சொல்லப்​பட்டதாம். முதல் நாள் இரவு 11 மணி வரை முதல்வரின் வருகை பற்றி காவல் துறைக்கும் தெரிய​வில்லை. தரிசனம் செய்யவரும் வி.ஐ.பி-க்கள் பட்டியலில் உயர் நீதிமன்றப் பெண் நீதிபதிகள், அமைச்சர்களின் குடும்பத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் என்று சிலரின் பெயர்கள்தான் இருந்தன. அதன்பிறகு, இரவு 11.30 மணிக்கு மேல்தான் முதலமைச்சரின் வருகை பற்றி கோயில் நிர்வாகத்துக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. முன்னதாக அறிவித்​தால், ஏராளமான கட்சிக்காரர்கள் கோயிலில் கூடி​விடுவார்கள், அது பக்தர்களுக்கும் போலீஸுக்கும் பெரிய தொந்தரவாகிவிடும் என்று முதல்வர் நினைத் தாராம். அதனால்தான் ரகசிய ஏற்பாடு. இதன் காரணமாக,
அவசர அவசரமாகப் பந்தோபஸ்து வேலைகளைக் கவனித்த போலீஸ்காரர்கள், கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியே செல்லும் பாதைகள் அனைத்தையும்  மூடிவிட்டனர். இதனால், இரவு 1 மணிக்கு சுவாமியின் விஸ்வரூபத் தரிசனத்தை மட்டும் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்திருந்த பக்தர்களால் வெளியில் செல்ல முடியவில்லை. வேறுவழி இல்லாமல் அவர்களும் அதிகாலை 5 மணி வரை இருந்து சொர்க்க வாசல் திறப்பையும் பார்த்துவிட்டுச் செல்​லும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டனர்.''
''அதிகாலை 3.30 மணிக்கு வந்த ஜெயலலிதா கிழக்கு வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தார். அங்கிருந்த கொடி மரத்தை வணங்கிவிட்டு சுவாமி சன்னிதிக்கு வந்த அவருக்காக, சிறப்பு தீப ஆராதனை செய்யப்பட்டுப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு அரை மணி நேரம் கழித்துப் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதுவரை கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து கிளம்பிச் சென்றார். இனி அடுத்தடுத்த விசிட்களிலும் சசிகலாவைப் பார்க்க முடியும் என்றே யூகிக்க வேண்டி உள்ளது.

No comments:

Post a Comment