Friday, July 29, 2011

புகழ்பெற்ற அந்தியூர் குதிரை சந்தை 10ம் தேதி தொடங்குகிறது...


நண்பர்களுக்கு வணக்கம்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி ஆலயம் உள்ளது இக்கோவில் திருவிழா ஆடி மாதம் நடைபெறும். இத்திருவிழாவின் போது இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற குதிரை சந்தை, மாட்டுச்சந்தை நடைபெறும் .

இந்த வருடம் இத்திருவிழா வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கி 14 வரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது. குதிரைசந்தை மற்றும் மாட்டுச்சந்தை 10ம் தேதி தொடங்கி 13ம் தேதி நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில் கடந்த வருடம் மட்டும் 5 லட்சத்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

1 comment:

  1. எங்க ஊர் திருவிழா அருமையான திருவிழா

    ReplyDelete