Friday, January 6, 2012

தினம் தினம் திருநாளே! - அருள் மழை (எம் ஜி ஆர் ) - 5

திரு பிச்சாண்டி I.A.S., அவர்கள் சொல்லகேட்டு ரா . வேங்கடசாமி
காஞ்சி மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்சிகள்நடப்பதுண்டு திரு எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது அவருடையநேர்முக உதவியாளராக திரு பிச்சாண்டி இருந்தார் .

முதல்வருக்கு உடலில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அவரால் சரியாகபேச முடியவில்லை . திரு எம் ஜி ஆருக்கு ஆன்மீக விஷயங்களில்உறுதுணையாக இருந்தவர் "இதயம் பேசுகிறது " திரு மணியன் அவர்கள் .முதல்வர் மகானை தரிசிக்க விருப்பம் கொண்டவுடன் , திரு மணியன்அவர்கள் அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தார் .

முதல்வர் அவரது துணைவியார் மணியன் மூவரும் புறப்படஆயத்தமானார்கள் ஆன்மீக விஷயமானதால் திரு பிச்சாண்டி அவர்கள்முதல்வருடன் செல்ல தயங்கினார் ஆனால் முதல்வர் விடவில்லை தனதுஉதவியாளர் எந்த சந்தர்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்றுநினைத்து அவரையும் உடன் அழைத்து சென்றார் .

ஸ்ரீ மடத்திற்கு முதல்வரின் வருகை முன்னதாக அறிவிட்டபட்டது மகானுக்குசற்றே உடல் நலம் பாதிப்பு இருந்த போதிலும் முதல்வரை பார்க்க அனுமதிஅளித்தார் , முதல்வரும் மகானுக்கு உடல் நலம் சரியில்லை என்றுகேள்விப்பட்டுத்தான் இந்த சந்திப்புக்கு திட்டமிட்டார் .

மகான் அமர்ந்திருக்க அவருக்கு சற்று எதிரே முதல்வர் தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார்.
செயலாளர் பிசாண்டியோ சற்று தள்ளி போலீஸ் வளையத்திற்கு அப்பால்நின்றிருந்தார் , இதை கவனித முதல்வர் அவரை சைகை கட்டி அருகேவருமாறு அழைத்தார் , காவலர்கள் உள்ளே விட மறுத்ததும் முதல்வர்அழைத்ததால்தான் செல்கின்றேன் என்று கூறிமுதல்வர் அருகே சென்று அமர்ந்தார் .

மகான் பிச்சாண்டியை பார்த்து இவர் உங்கள் பி வா என்று கேட்க ,முதல்வர் ஆமாம் என்றதும் அங்கிருந்த படியே பிச்சாண்டி தன்வணக்கத்தை தெரிவிக்க , மகானும் அவரை தனது திருக்கரத்தை உயர்த்திஆசிர்வதித்தார்
பிறகு முதல்வர் மகானை பார்த்து "உங்கள் தேகம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் .

"தேகம்" என்று அவர் கேட்டது , "தேசம்" என்று மகான் செவிகளில் ஒலிக்க
தேசத்திற்கு என்ன நன்றாகத் தானே இருக்கிறது என்றார் மகான்
முதல்வர் பிச்சாண்டியை திரும்பி பார்க்க , அவர் மகானிடம் விளக்கினார்
"தங்களது தேகம் எப்படி இருக்கின்றது" என்று முதல்வர் கேட்கிறார் .

அதற்கென்ன நன்றாகத் தான் இருகின்றது என்றார் மகான் லேசாகபுன்முறுவல் செய்தபடி , இடையில் மடத்து சிப்பந்திகள் பெரியவாளுக்குஉடம்பு ரொம்ப முடியல மருந்தே சாபிட மாட்டேன்கரா , முதல் மந்திரிதான்சொல்லணும் என்றார்.

உடனே முதல்வர்......... சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும்?மகானிடம் கேட்கிறார் . அப்போதும் மகான் தன் உடம்பை பற்றி அவரிடம்பேசவில்லை .

"எனக்கு நீங்கள் மூன்று காரியங்களை செய்வதாக வாக்குறுதி தரவேண்டும்"என்றார் "சொல்லுங்கள் செய்கிறேன் " முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில்சொல்கிறார் .

"முதல் விஷயம் - தமிழ் நாட்டிலே பல கோவில்களில் விளக்கே எரியறதுஇல்லை . விளக்கு எரிய நீங்கள் ஏற்பாடு பண்ணனும் , முதல்வர் தலையாட்டுகிறார் .

இரண்டாவதாக , பல கோயில்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்குஅதெல்லாம் ஒழுங்கு படுத்தி கும்பாபிஷேகம் நடத்தனும்".

"செய்துவிடுகிறேன் "

மூன்றாவது விஷயம் என்ன என்பதை சொல்ல மகான் சற்றே தயங்குகிறார்
முதல்வரும் மகானின் முகத்தை உற்று பார்த்தவண்ணம் இருக்கிறார்
"நாகசாமியை மன்னிச்சுருங்கோ " என்கிறார் ,
(நாகசாமி யார் என்பதை பற்றி சொல்லியாகவேண்டும்) .

பழங்கால கோவில்கள் , சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்துபுதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த தொல்பொருள்ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர் . அவர் கண்டுபிடிக்கும் பல பழமையானவிஷயங்களை , நேரடியாக பத்திரிக்கைகளுக்கு தொகுத்து கொடுத்து விடுவார். பத்திரிகைகளை பார்த்துத் தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்துகொல்வார் .

முதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயல் என்கிற எண்ம் .அரசுக்கு சொல்லிவிட்டு தானே அதை வெளியில் சொல்லவேண்டும் ,இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்துவிட்டார் ,அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை , முதல்வரிடம் கேட்கவும்இல்லை . முதல்வர் ஒரு நிமிடம் மௌனம் சாதிப்பதைக் கவனித மகான்பேசினார் .

" நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமாக ஆராய்ச்சி செய்து எவ்ளவோவிஷயங்களை நாட்டுக்காக தெயர்யப்படுதி இருக்கார் , அவர் ஆராய்ச்சிபண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியில தெரியாமலேயே போய்இருக்கும்........ "மன்னித்து விடுகின்றேன் " என்பது போல் முதல்வர் தலையைஆட்டினார் .


மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ் நாட்டுக் கோயில்களுக்குநிறைய நன்மைகள் ஏற்பட்டன , தனது உடல் நிலையை பற்றிகவலைப்படாமல் வேறு விஷயங்களை பற்றி எவ்வளவு கவலைப்படுகின்றார்என்று வியந்தார் முதல்வர்

No comments:

Post a Comment