Wednesday, February 1, 2012

அருள் மழை 20 & 21


காஞ்சிசங்கரமடத்திற்கு சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள் சிலர் வந்திருந்தனர்.அவர்கள் பெரியவரிடம் சிதம்பரம் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழைச்சமர்ப்பித்து வணங்கினர். அழைப்பிதழில் ஒரு வரி விடாமல் அனைத்துப்பக்கங்களையும் படித்து முடித்த பெரியவ சர்ம கஷாயம் என்ற சொல்லுக்குபொருள் என்ன என்று கேட்க, யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.

அர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேனஎன்றுமீண்டும் கேட்டார் பெரியவர். புலவர் வெங்கடேசன் என்ற பக்தர், சர்மகஷாயம் என்பது சமஸ்கிருதச் சொல் என்று மட்டும் தெரிகிறது. ஆனால்,எனக்கு அதன் பொருள் தெரியல என்றசொல்லி முடித்தார். உடனேபெரியவரே சர்மகஷாயத்திற்கு விளக்கம் தர முன் வந்தார்.சர்ம கஷாயம்என்பது சமஸ்கிருதச் சொல் தான். ஆலமரம், அரசமரம், அத்திமரம், பலாமரம்போன்ற பால் துளிர்க்கும் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை சேகரித்துஇடித்து தண்ணீரில் போட்டு ஒரு மண்டலம் (41நாட்கள்) நன்றாக ஊறவைப்பார்கள். அந்த கஷாயத்தை கலசங்களில் நிரப்புவார்கள். பூஜையில்வைத்து வேதமந்திரங்களை ஜெபித்து விக்ரகங்களுக்கும், கலசங்களுக்கும்அபிஷேகம் செய்வார்கள்,” என்று அருமையான விளக்கம் அளித்தார். இதைக்கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சிஅடைந்தனர்.


அருள் மழை

கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர் ஸ்ரீ லக்ஷ்மி காந்த சர்மாவந்தார். பெரியவர்களிடம் அத்யந்த பக்தி உடையவர். ... அவரிடம், "என்ன.....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?" என்று பெரியவாகேட்டார்கள். அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது.

"
என்னது" லக்ஷ்மிகாந்த சர்மா குதிரைப் பந்தயம் போகிறாரா" அக்ரமம்" என்றுதிகைத்துப் போனார்கள்.

"
ஆனால் ஸ்ரீ சர்மா,கொஞ்சமும் கூச்சப்படாமல் மிகவும் இயல்பாக, "பெரியவாஅனுக்ரஹத்திலே நன்னா நடந்துண்டு இருக்கு" என்று பதில் சொன்னார்.விஷயம் வேறுன்றுமில்லை.

பெரியவாள் உத்தரவுப்படி "அநாதைப் பிரேத ஸம்ஸ்கார சமிதி" என்றபெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தி,அநாதையாக இறந்து விட்டவர்களுக்குஉள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, உரிய முறையில் ஸம்ஸ்காரம்செய்வது என்ற மிக உயர்ந்த பணியை ஸ்ரீ சர்மா செய்து வந்தார்.

அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம்கிடைக்கும்" என்பது சாஸ்திர வாக்கியம்.

இந்த சமூக சேவையைப் பற்றிதான் பெரியவாள் சூசகமாக "அசுவமேதயக்ஞம் நடக்கிறதா" என்று ஆழ்ந்த பொருளுடன் கேட்டிருக்கிறார்கள் என்பதுதெரிய வந்தது.

அநாதை பிரேத ஸம்ஸ்காரம் என்ற சமூக செவை,பெரியவாளின் சேவாகாரியங்களில் மிக முக்கியமானது.

No comments:

Post a Comment