Friday, May 20, 2011

பாகிஸ்தானுக்கு 50 போர் விமானங்களை வழங்குகிறது சீனா

பீஜிங், மே 20- பாகிஸ்தானுக்கு ஜே.எப்.17 ரகத்தைச் சேர்ந்த 50 அதிநவீன போர் விமானங்களை வழங்க சீனா சம்மதித்துள்ளது.

இத்தகவலை பாகிஸ்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

4 நாள் சுற்றுப்பயணமாக பீஜிங் வந்துள்ள பாக். பிரதமர் கிலானி, சீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்தியபோது இதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

அல்-காய்தா தலைவர் பின் லேடன், அமெரிக்கப் படையினரால் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கு இடையேயான உறவு சிக்கலானது. இதனிடையே, பாக். பிரதமர் கிலானியின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அதிநவீன போர் விமானங்களை வழங்க சீனா சம்மதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்த போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒரு ஜே.எப்.17 விமானத்தின் விலை சுமாக் 90 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment