Saturday, May 7, 2011

டைப்ரைட்டரின் கடைசி பேக்டரியும் மூடப்பட்டது

கணினி வந்த பிறகு டைப்ரைட்டர்களில் டைப் அடிக்கும் வழக்கம் வழ்க்கொழிந்து விட்டது. ஆனால் இன்னமும் நம் ஊரில் பத்தாவது முடித்த உடன் டைப்ரைட்டர் கிளாஸ் செல்லும் பழக்கம் உள்ளது. இன்னமும் வழக்காடு மன்றங்களிலும் டைப்ரைட்டர் உபயோகப்படுத்தும் பழக்கம் உள்ளது. இவர்களுக்கு எல்லம் ஒரு வருத்தமான செய்திதான் இது டைப்ரைட்டரை உருவாக்கி வெளியிட்டு வந்த கடைசி நிறுவனமான Godrej and Boyce மும்பையில் உள்ள தனது கடைசி பேக்டரியை மூடி விட்டது.

இந்தியாவில் இன்னும் ஒரு நூறுக்கும் குறைவான டைப்ரைட்டர்களே விற்பனைக்கு வைத்துள்ளன. 2009ஆம் ஆண்டு வாக்கில் 10,000 முதல் 12,000 டைப்ரைட்டர்கள் வரை விற்ற அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தி மூடும் பொழுது வெறும் 200 டைப்ரைட்டர்களே விற்றிருக்கிறது. இதனால் இந்த நிறுவனம் தன்னுடைய கடைசி டைப்ரைட்டரி பேக்டரியையும் மூடி விட்டது. இனி கணினி காலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மற்றும் பயிற்சி நிறுவனங்களும் என்ன செய்ய போகின்றன புதிய டைப்ரைட்டருக்கு என்று தெரியவில்லை. இனி டைப்ரைட்டரினை அருங்காட்சியங்களில் மட்டுமே காண இயலும் என்ற நிலைமை வர இன்னும் சில வருடங்களே உள்ளது.

No comments:

Post a Comment