Thursday, May 5, 2011

கலைஞர் டிவி முடக்கம்..?தி.மு.க வினர் கலக்கம்..!- ஜூனியர் விகடன்


கலைஞர் டிவிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது..?204 கோடியை எப்படி திருப்பி கொடுத்தீங்க..என்ற கேள்விக்கு சரியான பதில் வராததால் கலைஞர் டிவி சரத்குமார் வசமாக மாட்டினார்..நீராராடியாவுடன் உரையாடல்...போன்ற டேப் ஆதரங்களுடன்,டாட்டா நிறுவன நில விவகாரம்,போன்றவற்றின் மூலம்,கனிமொழி கூட்டு சதி என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டு சிக்கினார்..இவர்கள் இருவரும் மீள் முடியாத சூழ்நிலையில் ,கலைஞரை சந்தித்த கலைஞர் டிவி சரத் மற்றும் அவர் மனைவி கலைஞர் காலை பிடித்து கதறி அழுதுள்ளனர்..இதற்கு,எம் மகளையே எப்படி காப்பாத்துறதுன்னு தெரியலைப்பா என் கண்கலங்கினாராம் முதல்வர்...

இநிலையில் கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்குவது பற்றியும்,கனிமொழி கைது பற்றியும் சி.பி.ஐ தீவிர டிஸ்கசனில் இருப்பதால்,கலைஞர் டிவி ஊழியர்கள்,தி.மு.க வினர் கலக்கத்தில் உள்ளனர்.நம்ம செய்தியை கொண்டு போக இனி சன் டிவியை தவிர வேறு கதி இல்லை..என தி.மு.க வினர் முணுமுணுக்கின்றனர்..அதே சமயம் அண்ணன் தம்பி ஆட்டம் இனி அதிகமாயிடும் என்றும் புலம்புகிறார்களாம்...

கலைஞர் பேரன்கள் தயாரித்த வானம்,மைனா போன்ற படங்கள் விஜய் டிவிக்கு சாட்டிலைட் உரிமை கொடுக்கப்பட்டது இன்னும் அவர்களை அதிர்ச்சியாக உள்ளதாம்..எப்படியும் கலைஞர் டிவியை முடக்கிருவாங்க..அதனால் நம்ம படத்துக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என புத்திசாலித்தனமா பேரன்களே செயல்படுவது கண்டு கலைஞருக்கு கடுப்புதானாம்.

கிரிமினல் வழக்குகளை பொறுத்தவரை ,குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தாலே கைது செய்து விடலாம்..கனிமொழி ,சரத்குமார் விவகாரத்தில் ஏராளமான ஆதாரங்களும் உள்ளன.,எனவே கைது தவிர்க்க முடியாதது..என்கிறது சி.பி.ஐ.

No comments:

Post a Comment