Monday, May 2, 2011

பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது?


"ராவணன்" படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படம் "பொன்னியின் செல்வன்". கல்கியின் நாவலை மையமாக கொண்டு மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் நடி‌கர், நடிகைகளாக விஜய், ஆர்யா, மகேஷ்பாபு, அனுஷ்கா உள்ளிட்டவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படம் தொடங்கப்படுவது சந்தேகமே என்ற தகவல்கள் வதந்திகளாக ஆரம்பித்து, செய்தியாகும் நிலையில் உள்ளதாக கோடம்பாக்கத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகள் கூறுகிறார்கள்.இதற்கான காரணம் குறித்து ஏதும் தெரியவில்லை.

ஏற்கனவே இந்தகதையை மறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., எடுக்க முயன்றார். ஆனால் அவரின் அரசியல் பிரவேசத்தால் இப்படம் நின்றுபோனது. பிறகு நமது உலகநாயகன் கமல் முயற்சித்தார், அவராலும் முடியவில்லை. கடைசியாக மணிரத்னம் இப்படத்தை இயக்க முன்வந்து, திரைக்‌கதை எல்லாம் அமைக்க தொடங்கி, சூட்டிங் லோகேசன் எல்லாம் பார்த்து வைத்திருந்த நிலையில், திடீரென இப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment