Saturday, May 21, 2011

வெற்றிகரமாக ஏவப்பட்டது GSAT-8 செயற்கைக்கோள்!

இந்தியாவின் நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-8 (GSAT-8) சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ஏரியன்ஸ்பேஸ் தளத்தில் இருந்து ஜிசாட்-8 செயற்கைகோள், ஏரியான் 5 ராக்கெட் மூலமாக அதிகாலை 02.06 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

இந்தியாவின் தகவல் தொடர்பு பயன்பாட்டுக்காக அதி நவீன தொழில் நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் 3,100 கிலோ எடை கொண்டது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஜிசாட் -8 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ குழுவினர் தெரிவித்தனர்.

ஜிசாட் 8 செயற்கைக்கோள் வெற்றிக்கு, இஸ்ரோ செயலர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment