Friday, May 20, 2011

SC தலையீட்டால் கனிமொழி கைது சாத்தியமானது:பிஜேபி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன.

பிஜேபி செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டதால் மட்டுமே இந்தக் கைது நடவடிக்கைகள் சாத்தியமாயிற்று," என்றார்.

மேலும், "இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதே நல்ல முடிவுகளைத் தரும். இதேபோல் காமன்வெல்த் போட்டி முறைகேடு உள்ளிட்ட ஊழல்களிலும் நடவடிக்கை தேவை," என்றார் அவர்.

"இந்த நடவடிக்கைகளின் மூலம் காங்கிரஸின் 'நிலைப்பாடு' முழுமையாக அம்பலமாகியிருக்கிறது," என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி.ராஜா.

No comments:

Post a Comment