Friday, August 26, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 13

தனக்கு சோறு கிடைக்குமா என்று பஞ்சம் பிழைக்க வந்த இவர் இன்று பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டார். பஞ்சத்துப் பொட்டு இல்லை. பரம்பரைப் பொட்டு என்று கட்சித் தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவரால் அடையாளங் காட்டப்பட்டவர் இவர். எட்டாவதைக்கூட எட்டிப் பிடிக்காத படிப்பு. ஆனால், டபுள் எம்.ஏ., வாங்கியவர்கள் எல்லாம் தொழிலில் இவருக்குப் பின்னால்தான் நிற்க வேண்டும். அந்தத் தொழிலையும் அழகாக செய்தவர். வெற்றியால் புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இவரோ நெற்றியால் புகழ்பெற்றவர்.

ஐம்பத்தாறு வயதிலும் ஒருவரை அஞ்சா நெஞ்சனாக உருவாக்க இவரால்தான் முடியும். தமிழகத்தின் தெற்குப் பகுதிக்கு தலைவனாகக் காட்டிக் கொண்டவர். அமைச்சர்களனாலும் சரி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளானாலும் சரி இவருக்கு வணக்கம் வைத்த பிறகே அடுத்த படிக்கு போகமுடியும்.

ஒருவருக்கு விசுவாசமாகக் காட்டிக் கொண்டே அவரை வில்லங்கத்தில் மாட்டி வைக்கும் வித்தை தெரிந்தவர் இவர். காவல்துறையைக் கலங்கடித்தவர் இன்று காவல்து றையால் கலங்கிப்போய் நிற்கிறார். ஒருவரின் கைதுக்காக சொந்தக் கட்சிக்காரர்களே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்றால் அது இவரின் கைதாகத்தான் இருக்க முடியும்.

ஆறு மணிக்கெல்லாம் கொடுக்கப் பட்ட அளவுச் சாப்பாட்டை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தவரின் மனசாட்சி யுடன் பேசினோம். அவரின் வாக்குமூலம்...

வியாபாரத்திற்குப் பெயர் பெற்ற விருதுகளுக்குப் பக்கத்திலிருந்த சின்ன கிராமத்தில் நான் பிறந்திருந்தாலும் வியாபாரம் எதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை. பள்ளிப் படிப்பைத் துண்டித்துக்கொண்டு வெளியேறினேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் என் சங்கமத்தை மறுதலிக்கவில்லை. பதினைந்து வயதுச் சிறுவனாய், கிழிந்த அரைக்கால் சட்டையுடன் லாட்டரி சீட்டுகளைக் கூவி விற்றேன். ‘‘நாளைய குலுக்கலில் கோடீஸ்வரராகணுமா? ஒரு சீட்டை வாங்கிட்டுப் போங்க’’ என நான் சத்தம் போட்டு அழைத்தது யாருக்கு கேட்டதோ இல்லையோ எனக்கு நன்றாகக் கேட்டது. பின்னர் பஸ்களுக்கு டிக்கெட் ஏற்றிவிட்டதில் கிடைத்த கமிஷன் என் வயிற்றுப் பசியைப் போக்கியது. கட்டட வேலைக்கு கூலியாள் அனுப்புவதிலும், தலா பத்து ரூபாய் கட்டிங் கிடைக்க கொஞ்சம் வளர்ச்சியடைந்து, வீடு வாடகைக்குப் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் தொழிலையும் சைடில் செய்தேன்.

அப்போதெல்லாம் எங்கள் பகுதியில் பாக்கெட்டில் இரண்டு ரூபாய்க்கு சொர்க்கத்தை வைத்து வியாபாரம் செய்வார்கள். அந்த ஆந்திர தீர்த்தத்திற்கு அவ்வளவு கிராக்கி. நான் மாலையானதும் இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி என் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொள்வேன். கொஞ்சம் இருட்டியதும், அதைக் குடித்து முடித்து சாலையோரமாக நடப்பேன். எங்காவது யாராவது சீட்டாடினால் அங்கே நின்றுகொள்வேன். சீட்டாட்டம்தான் எனக்குப் பிடித்த விளையாட்டு, பிடித்த தொழில், என்னை வ ளர்த்த தொழில். சீட்டாட்டத்தில் நான் சூரப்புலி. லோக்கலில் ஆடும் மங்காத்தா, நடுத்தரத்தில் ஆடும் ரம்மி, பணக்காரர்கள் ஆடும் திரீகார்ட்ஸ் என எல்லா விளையாட்டும் அத்துபடி. ரம்மியிலும்கூட ராணி ஜோக்கராக வந்தால்தான் எனக்கு ராசி. என் ஜாதகம் அப்படி. பின்னர் லேசாக தொழிலை மாற்றினேன். என் வியர்வை நிறையப் பேரை அப்போது சந்தோஷமாக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை விரிவுபடுத்தினேன். எங்கள் பகுதிக்கு வரும் முக்கியஸ்தர்களுக்காக நானே லாட்ஜில் ரூம் போட்டு வை த்துவிடுவேன். வருபவர்கள் நேராக அறைக்கு வந்து சந்தோஷமாக ஓய்வெடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரேட்டைப் போட்டு, பில்லை வசூலித்துவி டுவேன். இந்த அணுகுமுறை கொஞ்சம் பெயரையும், பணத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க அடுத்த படிக்கு அடியெடுத்து வைத்தேன்.

ஓடும் ரயிலில் ஒத்திகை பார்க்க ஓரங்க நாடகத்திற்கு வழிவகை செய்தேன். வழியில் ஏறி இடையில் இறங்கினாலும் இரவுப் பயணத்தில் அவர்களால் இளைப்பாற முடிந்தது. ரயில் சிநேகம் தொடராது என்பார்கள். ஆனால், எனக்கோ ரயில் சிநேகம்தான் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. மாற்றுக் கட்சியிலிருந்த செல்லமான அப்பாவிலி ருந்து கதருக்குள் மறைந்திருந்த காதலன் ஹீரோவரை பலரும் எனக்கு பரிச்சயமானார்கள்.

அந்தச் சூழ்நிலைகளில்தான் ஒருநாள் அந்தப் பரம்பரைப் பொட்டுக்காரரைப் பார்க்க முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரை நெருங்கிச் செல்ல தூர நின்று காத்துக் கிடந்தேன். அவ்வப்போது டீ ஊற்றிக் கொடுக்க, எச்சில் டம்ளரை எடுத்துக் கழுவ, என்று அடிக்கடி அவர் அருகில் போகும் வாய்ப்பும் கிடைத்தது. மாலை நேரங்களில் பொழுதுபோக்காக அவர் சீட்டாடுவார். அப்போதெல்லாம் சீட்டுக்கட்டை எடுத்து கலைத்துக் குலுக்கி கொடுக்கும் என் லாகவம் அவரை லயிக்க வைத்தது. ஒரு கை கு றையும்போதெல்லாம் என்னை உட்காரச் சொல்லுவார். நான் இல்லாத நேரங்களில் அந்த ‘திலகம்’ போட்ட பையனைக் கூப்பிடுங்கப்பா என்று சொல்லி அனுப்புவார். அவர் வைத்த பட்டப் பெயர்தான். இன்று பிரபலமாகிப் போனது. ஆனாலும் அந்தப் பட்டப்பெயரைப் போட்டதற்கு நான் பத்திரிகைகளின் மீது பாயும் அளவிற்கு மமதை என் கண்ணை மறைத்தது. அவரிடம் வந்து போன கட்சிக்காரர்களின் அறிமுகம் என்னையும், என் தொழிலையும் கட்சிக்காரர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அந்த அறிமுகம்தான் என்னை எதிர்முகாமுக்கு இழுத்துச் சென்றது. பரம்பரைப் பொட்டுக்காரர் கூட்டத்திலிருந்து பிரிந்து, பரம்பரைக் கூட்டத்தில் போய் சேர்ந்துவிட்டேன். ஏற்கெனவே அங்கு ராஜா, போர்ப்படைத் தளபதி, தாக்குதல், நோசார், காலி என பெருங்கூட்டம் அடைந்து கிடந்தது. அவர்களுக்கு ஆரம்பத்தில் டீ வாங்கிக் கொடுத்தது நான்தான். என்னிடமில்லாத குணம் ஒன்று அவர்களிடமிருந்தது. அது தைரியம். அவர்களிடமில்லாத பலம் ஒன்று என்னிடமிருந்தது அது என் தொழில். பலம் என்பதே பலவீனர்களை வீழ்த்துவதுதானே. நானும் வீழ்த்தினேன். நெருக்கமாக இருந்தவர்கள் எல்லாம் நகரத் தொடங்கினார்கள். என் வரவுக்காகவே அனைவரும் காத்திருக்கத் தொடங்கினார்கள். மாடாய் உழைத்து ஓடாய் இளைத்தவர்கள் எல்லாம் ஒதுங்கி நிற்க, கொள்ளைப்புற வழியாக வந்த எனக்கு கொடியசைத்து வரவேற்பு கொடுத்தார்கள்.

அனைவரையும் தள்ளிவிட்டு அவருக்கு அருகில் நெருங்கிவிட்டேன். அதிலிருந்து வசிய மை வைக்கப்பட்டவராய் என்னையே வலம்வரத் தொடங்கினார் அவர். இதைத் தான் நான் எதிர்பார்த்தது. மற்றவர்களுக்கு எந்த வேலையானாலும் என் மூலமாகவே கிடைக்கும்படி பார்த்துக்கொண்டேன். அவருக்கும் எல்லா வேலைகளும் என் மூலமாகவே நடந்தது.

எங்கள் ஊரில் ஜெர்மன் ஓட்டலில் நயன நடிகையை வரவழைத்து டிஸ்கஷனுக்கு ஏற்பாடு செய்தேன். இந்தச் செய்தி அரசல் புரசலாகப் பரவி அவரின் வீடு வரைக்கும் எட்டிவிட்டது. என்னுடனான பழக்கம் வேண்டாமென எத்தனையோ பேர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஒட்டுமொத்த அதிகாரத்தையும் என் கைக்குள் கொண்டு வந்தேன். கட்சிக்காரர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். அமைச்சர்கள் எல்லாம் அங்கலாய்த்துப் போனார்கள். சுகாதாரத்தை நூற்றியெட்டு என்றும், அறநிலையத்து றையை கோயில் என்றும்தான் கூப்பிடுவேன். அவரே ‘அண்ணன்’ என்றழைக்கும் முரட்டு பக்தரைக்கூட இனிஷியலைச் சொல்லித்தான் அழைப்பேன்.

எங்கள் பகுதியில் சிங்கிள் கடை பக்கத்திலிருக்கும் யோக நரசிம்மப் பெருமாள் கோயிலுக்கு நான் அடிக்கடி போவேன். அதிலிருந்துதான் எனக்கு யோகம்அடித்தது. எனவே அந்தப் பெயரிலேயே நிறுவனங்கள் தொடங்கினேன். சுமார் இருநூறு டிப்பர் லாரிகளை வங்கி சாலையில் திரியவிட்டேன். இப்போதும்கூட அரசு வேலைகளுக்கு எனது லாரிகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத மறுப்புப் பரம்பரையில் வந்த அவரையும், அவரது குடும்பத்தையும் மேற்படி கோயிலுக்கு அழைத்துச் சென்று கும்பாபிஷேகம் செய்ய வைத்தேன். அந்தக் கோயிலிலிருந்துதான் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்கினார் என்றால் எனது தொழிலின் மகிமையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அங்கு நெருங்கிய ஆரம்ப காலத்தில் அந்தப் பகுதியில் ஏற்கெனவே தொழில் செய்து வந்த முக்கிய புள்ளி ஒருவரை தூக்கியெறிந்தேன். ‘வா’ என்று அழைத்தாலே ‘சு’ என்று சிக்னல் செய்யும் அந்தப் புள்ளி ஆரம்ப காலத்தில் என்னை போலீஸ் ஸ்டேஷன்களில் போட்டுக் கொடுத்து வந்தார். அதனால், தள்ளாடும் குளத்திலும், திடீ ரென உருவான நகரிலும் என்னை அந்த வழக்குகளுக்காக தூக்கிக்கொண்டு போய் விசாரணை நடத்தினார்கள். அப்போதெல்லாம் கான்ஸ்டபிளைப் பார்த்தாலே கால் வழியே நீர் கசியும் எனக்கு கமிஷனர்களைக்கூட வரச் சொல்லிப் பார்க்கும் காலம் வந்தது. தென்மண்டலத்தின் ஒட்டுமொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டையும் என் கைக்குள் கொண்டு வந்தேன். எவ்வளவு உயர் பதவிகளானாலும் இடமாற்றம், ஆள்மாற்றம், உருமாற்றம் என ஏற்படுத்தித் தந்தேன். இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்ஃபருக்கு மூ ன்று லட்ச ரூபாய் என்றால் டாக்டர்கள் டிரான்ஸ்ஃபருக்கு ஒரு லட்சம். எந்தத் துறையானாலும், எந்த போஸ்டிங்கானாலும் ரேட்டை நிர்ணயித்தேன். கோடிகளில் பணம் குவியத் தொடங்கியது. ஏற்கெனவே அவருக்கு நெருக்கமாயிருந்தவர்கள் எல்லாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து என் மூலமே காரியங்களை நடத்திக் கொண்டனர்
போலீஸ் வட்டாரத்தில் எனக்கிருந்த தொடர்புகளால் நான், தலைகால் புரியாமல் ஆடினேன். ஒருமுறை என் வீட்டில் வேலை செய்பவர் காரை எடுத்து வந்தார். அதில் முக்கிய நபர்களும் இல்லை. அப்போது ட்ராஃபிக் ஜாமாக இருந்ததால் சாலையில் நின்று போக்குவரத்தை சரிசெய்து வந்த பெண் எஸ்.ஐ. எனது காரை வேறு பக்கம் போகும்படி கூறினார். ‘இது திலகத்தின் கார்’ என்று டிரைவர் கூற, ‘யாருடையதாக இருந்தாலும் வேற பக்கம் எடுத்துனு போங்க’ என்று அவர் கூறிவிட்டார். அந்தச் செய்தி உடனே எனக்கு வந்தது. உடனே உயரதிகாரிக்கு போன் போட்டு அந்த எஸ்.ஐ.யை ஒரு வாரத்திற்கு தினமும் காலையும், மாலையும் என்னை வந்து சந்தித்து சல்யூட் அடிக்கும்படி தண்டனை கொடுத்தேன். இப்போது அதை அறிந்த விசாரணை அதிகாரிகள் என்மீதான எஃப்.ஐ.ஆரை அந்தப் பெண் எஸ்.ஐ.யை வைத்துதான் எடுத்துள்ளர்கள். அதேபோல் உயர் துணை பதவியிலிருந்த வெற்றி ஸ்ரீ என்ற அதிகாரியை மடக்கிப் போட்டேன். அவர் அடிக்கடி வந்து என்னை சந்தித்துவிட்டுப் போவார். இந்த நெருக்கம் ஒட்டுமொத்த காக்கிகளையும் கலக்கிப் போட்டது. உயரதிகாரிகள்கூட பதவி மாற்றத்திற்கு அந்த வெற்றியைத் தேடி ஓடிய காலமது.

அதேபோல் நில வழக்கில் கைதாகி, கொலை வழக்கில் விசாரணை சென்று கொண்டிருக்க, ஏற்கெனவே தற்கொலையாக முடிக்கப்பட்ட வழக்கு ஒன்றைப் பற்றியும் தகவல் கள் திரட்டுவதாகக் கேள்வி. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் கொஞ்சமும் தொடர்பே இல்லாத ஒரு கட்சிக்காரர் வீட்டில் தூக்கில் தொங்கினார் ஒரு நர்ஸ். கட்சிக்காரர் வீட்டில் ஒரு முதியவரை பார்த்துக்கொள்ளச் சொல்லி அந்த நர்ஸை வேலைக்கு வைத்ததாகவும், காதல் விவகாரம் காரணமாக அந்த நர்ஸ் தற்கொலை செய்துகொண் டதாகவும் அப்போது போலீஸார் கூறிவிட்டனர். ஆனால், இப்போதோ காதல் விவகாரமென்றால் அந்த நர்ஸ், அவரின் வீட்டிற்குப் போய் தற்கொலை செய்து கொண்டி ருக்கலாம். மிகவும் அழகாக இருந்த அவர் கடத்தி வரப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று பட்பட்டென கேள்விகளை வீசி விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் பூட்டுக்குப் பேர் போன நகரில் நூறு ஏக்கர் நிலத்தை மடக்கிப் போட்டு அதை எங்களூரில் எலெக்ட்ரிக் கடை வைத்திருக்கும் ஒரு கிறிஸ்துவரின் பேரில் பதிவு செய்து வைத்திருப்பதையும் அந்த நிலத்தில் ஃபார்ம் அவுஸ், பால் பண்ணை அமைத்துள்ளது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆட்சியில் நான் வீட்டிலிருந்து புறப்பட்டால் போகும் இடம்வரை போலீஸார் மைக்கில் அறிவித்து, டிராஃபிக்கை கிளியர் செய்து வைப்பார்கள். இப்போது போவதும், தெரியாமல் வருவதும் தெரியாமல் இழுத்துச் செல்கின்றனர்.

நான் செய்த விஷயங்களில் பாதி அவருக்குத் தெரிந்தாலும் பாதி அவருக்குத் தெரியாது. நானே தன்னிச்சையாகப் போட்ட ஆட்டம்தான் அதிகம். ஆனால், அந்த விஷயங்களிலும் இப்போது அவருக்குச் சேர்த்தே சிக்கல் ஏற்படும் என்ற நிலை. தென்மாவட்டங்களில் கட்சி அதிகமாகத் தோற்றதற்கும், அதிலும் எங்கள் மாவட்டத்தில் அதிக வித்தியாசத்தில் தோற்றதற்கும் எனது ஆட்டமும் முக்கியப் பங்குதான்.

ஆரம்பத்தில் பஜ்ஜி, கைலி என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்ட நான், இப்போது திலகத்தின் பெயரால் அழைக்கப்படுகிறேன். ஆனாலும், என்கவுன்ட்டர் பயம் எ ன்னை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது.

நன்றி குமுதம் ரிப்போர்டர்

No comments:

Post a Comment