Friday, August 12, 2011

அம்மா போலீஸ் Vs அழகிரி போலீஸ்! கண்ணாமூச்சி ஏனடா!!

ஆக்ஷனில் அம்மா போலீஸ்... உதவிய அழகிரி போலீஸ்!


கேபிள் ரெய்டு அதிரடிகள்!


போகிற போக்கைப் பார்த்தால், அழகிரி வட்டாரத்தில் யாரையும் விட்டு​ வைக்க மாட்டார்களோ?


ழகிரி மகன் துரை தயாநிதியால் நடத்தப்படும் ராயல் கேபிள் விஷனில் (ஆர்.சி.வி.) அதிரடி ரெய்டு அடித்த போலீஸார், அங்கு உருப்படியாக எதுவும் சிக்காததால், வேறு ரூட்டில் துரை தயாநிதிக்கு செக் வைக்கத் தயாராகிறார்கள்!


மூன்று வருடங்களுக்கு முன்பு மாறன் சகோதரர்​களோடு மோதல் வெடித்த போது, சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக மதுரையில் ஆர்.சி.வி-யை ஆரம்பித்தார் அழகிரி. அவர் மகன் துரை தயாநிதி, நெருங்கிய நண்பர் ராஜபிரபு உள்ளிட்ட மூவர் பொறுப்பில் உள்ளனர்.


துரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைப் பொறுத்த வரை எஸ்.சி.வி. மற்றும் ஆர்.சி.வி. கட்டுப்​பாட்டில்தான் பெரும்பாலான கேபிள் ஆபரேட்டர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, அண்மையில் அரசு கேபிள் கார்ப்பரேஷனின் தலைவர் ராதாகிருஷ்ணன் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதைப் புறக்கணிக்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் நெருக்கப்பட்டார்கள்.

தனால், மதுரையில் சுமார் 400 ஆபரேட்டர்கள் இருந்தும் 20-க்கும் குறைவானவர்களே கூட்டத்துக்கு (தைரியமாக) வந்தனர். கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் இதே நிலைதான். ராதாகிருஷ்ணன் இதை அரசுக்கு அறிக்கையாகக் கொடுத்ததால்தான், ரெய்டு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.


போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ''போஸ்ட் ஆபீஸில் 500 கட்டிட்டா, யார் வேணும்னாலும் கேபிள் டி.வி. நடத்தலாம்னு சொல்றாங்க. லைசென்ஸ் இருந்தாலுமே லோக்கல் சேனல்களில் செய்தி வாசிக்கக் கூடாது, ஒரு நேஷனல் சேனல் உள்பட தூர்தர்ஷனின் மூன்று சேனல்களைக் கட்டாயமாகஒளிபரப்பு செய்யணும், விளம்​பரங்களை ஒளிபரப்புவது சம்பந்தமாக சில விதி முறைகளைப் பின்பற்றணும்னு ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்குது. இவை எல்லாமே மீறப்படுவதாகத் தகவல்கள் வந்ததால் தான், ரெய்டுக்குப் போனோம். ஆனால், அழகிரிக்கு விசுவாசமான போலீஸ் அதிகாரிகள் சிலர், ரெய்டு விஷயத்தை முன்கூட்டியே சிக்னல் கொடுத்து விட்டதால், முதல் நாள் இரவே ஒரு ஆம்னி வேனிலும், டெம்போ டிராவலரிலும், ஆட்டோவிலும் எல்லாத்தையும் கடத்திட்டாங்க.


தாசில்தார் சகிதம் ஆர்.சி.வி. அலுவலகத்துக்கு நாங்க போனப்ப, போலீஸ் வரும்னு எதிர்பார்த்தே காத்து இருந்தாங்க. லைசென்ஸ் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி எல்லாத்தையும் பக்காவா எடுத்து வெச்சிட்டாங்க. துரை தயாநிதி பெயரில் இயங்கி வந்த, 'தயா டி.வி’-க்கான ரூமில் இருந்த ஒளிபரப்பு சாதனங்களை சமீபத்தில்தான் ரிமூவ் பண்ணியிருக்காங்க. அந்த ரூமே காலியாக் கிடந்தது. லைசென்ஸ் காப்பி உள்ளிட்ட சில ஆவணங்களை மட்டும் வாங்கிட்டு வந்துட்டோம்...'' என்றார்கள்.


றுநாள் காலையில் ஆர்.சி.வி. அலுவலகத்துக்கு விசிட் அடித்த போலீ​ஸார், அங்கும் சில விவரங்களைக் கேட்டு வாங்கிச் சென்றார்களாம். அன்றைய தினமே மதுரையில் இருந்து பாளையங்கோட்டைக்குப் பறந்த கேபிள் ஆபரேட்டர்கள் சிலர், சிறையில் உள்ள பொட்டு சுரேஷிடம் அடுத்த கட்ட மூவ் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் சொல்​கிறார்கள். அதே சமயம், ரெய்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் லோக்கல் சேனல்கள் அனைத்தும் ஒளிபரப்பை நிறுத்திவிட்டன. கோவை, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் லைசென்ஸ் புதுப்பிக்காமல் கேபிள் நடத்தியதாக சிலர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.


ரன் டி.வி-யின் நெல்லை அலுவலகத்திலும், 'அனுமதி இல்லாத பாடல்கள் மற்றும் படக் காட்சிகளை ஒளிபரப்பியதாக புகார் வந்திருப்பதால் சர்ச் பண்ண வேண்டும்’ என்று வந்தவர்களிடம், 'எந்த ஆதாரத்தில் சோதனைக்கு வந்தீர்கள்?’ என்று கேட்டார்களாம். சேலத்​தைச் சேர்ந்த 'வெல் மீடியா’ என்ற நிறுவனத்தின் நிர்வாகியான காயத்ரி என்பவர், 'நாங்கள் உரிமம் பெற்றுள்ள படம் மற்றும் பாடல் காட்சிகளை கரன் டி.வி அத்துமீறி ஒளிபரப்பு செய்கிறது’ என்று கலெக்டருக்குக் கொடுத்திருந்த புகாரின் நகலை படித்துக் காட்டியது போலீஸ். ஆனாலும், 'தங்களிடம் இருக்கும் ஆவணங்களைக் காட்டுவதற்கு அவகாசம் தேவை’ என கரன் டி.வி. நிர்வாகத்தினர் கேட்டுக்​கொண்டதால், எதையும் கைப்பற்றவில்லை. அன்று நள்ளிரவில் கரன் டி.வி நிர்வாகத்தின் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர்.


ரெய்டு நடவடிக்கைகள் குறித்து மதுரை போலீஸ்கமிஷனர் கண்ணப்பனிடம் பேசினோம். ''போஸ்ட் ஆபீஸில் லை​சென்ஸ்கொடுத்​தாலும், கேபிள்
டி.வி-க்​களைக் கண்காணிக்கும் அதிகாரம்,போலீஸுக்கும் வருவாய்த் துறைக்கும் தான் இருக்கிறது. கேபிள் டி.வி. நெட்வொர்க் ரெகுலேஷன் ஆக்ட் 1995-ல் ஏகப்பட்ட விதிமுறை​களை சொல்லி இருக்காங்க. ஆனால், அதை யாருமே பின்பற்று​வதாகத் தெரியவில்லை. அதை ஒழுங்கு படுத்தத் தான் ரெய்டு நடத்தி​னோம். சில ஆவணங்களைக் கைப்​பற்றி இருக்கிறோம். அவற்றை ஆராய்ந்து பார்த்து, விரைவில் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.


ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு துரை தயாநிதி எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத நிலையில், அவரை​யும் அழகிரியின் வலது கரமான ராஜ பிரபுவையும் குறி​வைத்தே கேபிள் விவகாரத்தைக் கையில் எடுத்து இருப்பதாகச் சொல்​கிறார்கள்.

மதுரைக்குள் கேபிள் தொழிலில் இருக்கும் சிலர் தி.மு.க. பெரும்புள்ளிகளின் பினாமி​களாகவும் இருப்பதால், இந்த விவகாரத்தை அவ்வளவு லேசில் விடாது போலீஸ்!



நன்றி: ஜூனியர் விகடன் 14-08-2011 இதழ்.

No comments:

Post a Comment