Sunday, September 4, 2011

ராஜீவ் கொலை வழக்கு;உண்மையான குற்றவாளிகள்;ஜூனியர்விகடன்

ராஜீவ் கொலை வழக்கு;உண்மையான குற்றவாளிகள்;ஜூனியர்விகடன்

பெங்களூர் ரெங்கநாத்;சிவராசன்,சுபா வுக்கு தன்னுடைய பெங்களூர் வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்.சுமார் 15 நாட்கள் சிவராசன் குரூப்[புடன் நெருங்கி பழகியவர்.இதனால் கைது செய்ய்ய்ப்பட்டு சிறைவாசத்துக்குபின் விடுதலையான அவருடன் ஒரு சந்திப்பு;


இலங்கையில் சிங்களர்கல் எய்த கொடுமைகளை சிவராசனும்,சுபாஉம் நிறைய உருக்கமான தகவல்களை சொல்லியிருக்கின்றனர்.தனது பள்ளி தோழிகளுடன் சுபா விளையாடிக்கொண்டிருந்தபோது,அங்கே வந்த மைதி படையினர் ஆறு சிறுமிகளை அள்ளிக்கொண்டு போனார்களாம்.மறுநாள் அந்த சிறுமிகளை பலாத்காரப்படுத்திவிட்டு,கொன்று போட்டிருந்தார்களாம்.சிறுமிகளை பள்ளி அடையாள அட்டையை அவரவர் கழுத்தில் மாட்டி,அவர்கள் வீட்டு வாசலில் பிணத்தை போட்டிருந்தார்களாம்.இதை அவர் சொல்லி,எப்படி அண்ணா போராடாமல் இருக்க முடியும் என கண்ணீர் விட்டார்.

சிவராசன் குரூப்புடன் பழகியதில் ராஜீவ் கொலை கொலையில் 40 சதவீதம் தெரியும் என்றால்,சி.பி.ஐ விசாரணையில் இருந்தபோது மீதி 40 சதவீத உண்மைகள் தெரிந்தது.அப்போது சந்திராசாமி எப்படி இந்த வழக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை அறிந்து அதிர்ந்துவிட்டேன்.எனக்கு ஹிந்தி,தமிழ்,மலையாளம் தெரியும்.ஆனால் அதிகாரிகளிடம் ஹிந்தி தெரியும் என்பதை மறைத்துவிட்டேன்.அதனால் அவர்கள் என்னை வைத்துக்கொண்டே ஹிந்தியில் நிறைய பேசினார்கள்.

சந்திராசாமியின் பி.ஏ...,நான் சி.பி.ஐ கஸ்டடியில் இருந்தபோது,அவர்கள் முன்னிலையிலேயே என்னை மிரட்டினார்..சுவாமிஜி (சந்திராசாமி)யிடம் சுரேஷ் மாஸ்டர்,சிவராசன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதை கோர்ட்டில்,சொன்னால் உன்னை இங்கேயே முடித்துவிடுவோம்..என்றார்.

அதன் பின் பலமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோதும் இந்த உண்மைகளை நான் சொல்லவில்லை.ஒருமுறை சோனியா என்னை சந்திப்பதாக சொன்னார்கள்.நடந்தவற்றையெல்லாம் சொன்னேன்.அதிர்ச்சியுடன் கேட்டவர்,கண்களில் நீர் தளும்பியது..பார்த்துக்கொள்கிறேன்..என்றுஅனுப்பிவிட்டார்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ராஜீவ் கொலையில் இன்னும் நிறைய மர்மங்கள் இருக்கின்றன..ஆனால் எனக்கு தெரிந்து எந்த தொடர்பும் இல்லாத பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோருக்கு தூகு தண்டனை விதிப்பது நியாயமே இல்லை.
தூக்கு தண்டனை எதிர்கொண்டுள்ள மூவரும் தீவிரவதிகள் அல்ல.அவர்கள் அனுபவித்த தண்டனையே நியாயமில்லை.அவர்களை விடுவிக்க வேண்டும் என்றார்.
நன்றி;ஜூனியர்விகடன்

No comments:

Post a Comment