Friday, April 29, 2011

முதல் அணு மின் உலை வெற்றிகரமாக குளிர்விப்பு

ஜப்பானில் கடந்த மாதம் 11 ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட புகுஷிமா மின் அணு உலைகளில் முதலாவது அணு உலையை மீண்டும் வெற்றிகரமாக குளிர்வித்துள்ளதாக ஜப்பானின் அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சுனாமியின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கபப்ட்டிருந்த புகுஷிமா அணு மின் அலைகளிலிருந்து கசிந்த கதிர்வீச்சினால் பல்லாயிரக்கணக்கான மக்களு அதன் தாக்கம் பரவும் சந்தர்ப்பம் இருந்தது. இதையடுத்து குறித்த அணு மின் உலை பகுதிக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படது.

ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பு, கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும், அதனை சரி செய்யவும் தீவிரமான பணிகளில் இறங்கியது. எனினும் தொடர்ந்து பல தடவைகள் குளிர்விக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், கதிர்வீச்சு தாக்கம் பன்மடங்கு அதிகரித்தது.

தாய்ப்பாலில் தாக்கம் செலுத்தும் வரை இதன் தாக்கம் இருந்தது. இந்நிலையில் மேலை நாடுகளின் உதவிடன், குளிர்விக்கும் குழாயை சரிசெய்து தற்பொது அதனூடாக டன் கணக்கில் தண்ணீரை குளிர்விக்கும் குழாய் மூலம் செலுத்தி வருகிறது ஜப்பான்.

இதனால் புகுஷிமாவின் முதல் அணு உலை மீண்டும் வெற்றிகரமாக செயற்படுகிறது என அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment