Wednesday, June 1, 2011

கம்மல் அணிவது ஏன்? ஜெயலலிதா விளக்கம்

கம்மல் அணிவது பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். இன்று கோட்டையில் அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கே:- நீண்ட நாட்களாக நீங்கள் நகைகள் எதுவும் அணிவதில்லை. இப்போது காதில் தோடு அணிந்து இருக்கிறீர்களே?
ப:- 1997-க்கு பிறகு நகைகளை அணிவதை விட்டு விட்டேன். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் என்னை சந்திக்கும் போதெல்லாம் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் தொண்டர்கள் என் வீட்டு முன்பு குவிந்தார்கள். அப்போது உடன்பிறப்புகள் நான் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
பல்வேறு தவறுகளை செய்த கருணாநிதி குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள். நகை அணியாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறினார்கள். எங்கள் கட்சி தொண்டர்கள் சொன்னதை செய்து விடுவார்கள். ஒரு பெண் தொண்டர் நாக்கை அறுத்துக் கொண்டார். இன்னொருவர் கை விரலை துண்டித்துக் கொண்டார். எனவே தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்று காதில் தோடு அணிந்து இருக்கிறேன்.
நாக்கை அறுத் துக்கொண்ட பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து இருக்கிறேன். சில பத்திரிகைகளில் இது போன்ற செயல்களை நான் ஊக்கப்படுத்துவதாக எழுதுகிறார்கள். அது உண்மை இல்லை. அந்த பெண் கணவரால் கைவிடப்பட்டவர். 2 குழந்தைகள் உள்ளன. அவருக்கு வருமானம் எதுவும் இல்லை. எனவே அரசு வேலை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment