Monday, June 27, 2011

கனிமொழி கேஸில், திருப்பம்! சரத்குமார் வாய் திறக்கலாம்!!


கனிமொழி கேஸில் சி.பி.ஐ. ஒரு மர்மச் சிரிப்பு சிரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கேஸில் சி.பி.ஐ.க்கு முன்பு லேசாக ஒரு பயம் இருந்தது. இப்போது அந்தப் பயம் விலகத் தொடங்கிவிட்டது. எப்படி? அவர்களே எதிர்பாராத ஒரு சாட்சி, அவர்களுக்கு கிடைக்கும் சாத்தியம் உள்ளது.

அந்த எதிர்பாராத சாட்சி, சரத் குமார்.

கனிமொழியுடன் கைதாகி தற்போது திகார் ஜெயிலில் இருக்கும் அதே ‘கலைஞர் டீ.வி.’ சரத் குமார்தான்!

சரத் குமாரை அப்ரூவராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர் சில சி.பி.ஐ. அதிகாரிகள். கடந்த சில நாட்களாக, சரத்தும் அதைப்பற்றி சிறிது யோசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், கனிமொழி கேஸ், தலைகீழாக மாறும் என்கிறார்கள். அதற்குப்பின் யார் வந்தாலும், குற்றவாளிகளைக் காப்பாற்ற முடியாது என்றும் கூறுகிறார்கள்.

இங்கு நாம் கனிமொழி கேஸ் என்று குறிப்பிடுவது, கலைஞர் டீ.வி.க்கு பணம் வந்த விவகாரம் மாத்திரமே. முழுமையான ஸ்பெக்ட்ரம் கேஸ், பெரியது. அதில் இனிமேல்தான் முக்கிய நபரே சிக்கப் போகிறார் என்கிறார்கள்.

அந்தப் பெரிய கேஸில் ஒரு பகுதியான கலைஞர் டீ.வி. விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு ஒரு பயம் இருந்தது. என்னதான் எவிடென்ஸ்கள் சாதகமாக இருந்தாலும், கேஸின் முடிவு சாட்சிகளின் பலத்தில்தான் தங்கியிருந்தது. அதுதான் சி.பி.ஐ.க்கு இருந்த பயம்.

இதனால்தான், குற்றச்சாட்டுப் பற்றிய முக்கிய ஆவணங்களைக்கூட கோர்ட்டில் அவர்கள் இன்னமும் தாக்கல் செய்யாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். சி.பி.ஐ. எந்த ஆவணங்களை, எப்படி உபயோகித்துக் கொள்ளப்போகிறது என்பது எதிர்த் தரப்புக்குத் தெரிந்துவிடக் கூடாது.

தெரிந்து விட்டால், சாட்சிகளை பல்டியடிக்க வைத்து அவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிட முயற்சி செய்யலாம்.

மொத்தத்தில், சாட்சிகள் கொஞ்சம் வீக். தவிர, கலைஞரின் மனைவி தயாளு அம்மாளும் ஒரு சாட்சி!

இந்த விவகாரத்தில், பண வரவுக்கு முன்னேற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு முடிந்தபின், பணத்தை எங்கே கொண்டுபோய் டம் பண்ணுவது என்ற கட்டம் வந்தபோதுதான், கலைஞர் டீ.வி. காட்சிக்குள் வந்தது என்கிறார்கள்.

அதாவது, பரிசு தீர்மானிக்கப்பட்டு, பரிசுத் தொகையும் தீர்மானிக்கப்பட்டு, பரிசை யாருக்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்ட பின், பரிசு வழங்கப்பட்ட மேடைதான் கலைஞர் டீ.வி.! அந்த மேடையின் தலைமை நிர்வாகி, சரத் குமார்.

இப்படியான ஒரு டீலிங்கில், பரிசில் ஒரு சிறிய பகுதிகூட தலைமை நிர்வாகியின் பாக்கெட்டுக்குள் போயிருப்பது சந்தேகமே! ஆனால், அவரையும் சிறையில் வைத்திருக்கிறது சி.பி.ஐ.

அதற்கு ஒரு காரணமும் உண்டு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

சரத்துக்கு இதில் நேரடிப் பலனோ, சம்பந்தமோ கிடையாது என்பது சி.பி.ஐ.க்கு நன்றாகவே தெரியும். அதேநேரத்தில், யாருக்கு சம்பந்தம் இருக்கிறது என்பது சரத்துக்குத் தெரியும். அந்த விஷயத்தை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால், இவருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும்.

அந்த அதிர்ச்சி வைத்தியம்தான் திகார் ஜெயில்!

திகார் ஜெயிலில் நீண்டகாலம் இருக்க வேண்டியதில்லை. உடனே ஜாமீனில் வெளியே கொண்டுவந்து விடுவோம் என்றுதான் சரத்துக்கு ஆரம்பத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்களால் கனிமொழியைக்கூட ஜாமீனில் வெளியே கொண்டுவர முடியவில்லை.

அதைப் பார்த்தபின்தான், சரத் தடுமாறத் தொடங்கினார் என்கிறார்கள்.

தனது விடுதலை மற்றயவர்களின் கையில் இல்லை, தனது வாயிலிருந்து வரப்போகும் சில வார்த்தைகளிலேயே தங்கியுள்ளது என்பதை அவர் ‘கடினமான பாதையில்’ புரிந்து கொண்டார். சி.பி.ஐ. விரும்புவதும் அதைத்தான்!

சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சரத், கிட்டத்தட்ட சம்மதம் தெரிவிக்கும் நிலையில் பேசியிருக்கிறார் என்கிறார்கள். கனிமொழிக்கு இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. உடனே அவர், கலைஞரை சரத்துடன் நேரே பேசிப் பார்க்குமாறு கூறியிருக்கிறார். டில்லி சென்ற கலைஞரும் சரத்தை சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.

அப்படியும் சரத் சமாதானமாகவில்லை என்கிறார்கள்.

மொத்தத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, சரத்துக்கு இதில் நேரடி சம்பந்தம் கிடையாது. அதேநேரத்தில், யாருக்கு சம்பந்தம் இருக்கிறது என்பது சரத்துக்குத் தெரியும்.

சரத் தானாக முன்வந்து அதை நீதிமன்றத்தில் சொன்னால், சரத் வெளியே வரலாம். ஆனால், முக்கிய நபர் ஒருவர் உள்ளே போகவேண்டிய நிலை ஏற்படலாம்!

அந்த முக்கிய நபர், ‘முன்னாள் முதல் குடும்பத்தின்’ முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்துவிட்டால்?

No comments:

Post a Comment