Wednesday, June 8, 2011

மதுரையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்!-ரிப்போர்ட்டர்

ரவுடிகளால் சிக்கித்தவிக்கும் மதுரையை மீண்டும் ஆன்மீக நகராக மாற்றுவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.இந்நிலையில் ,மதுரைக்கு மீண்டும் உதவி கமிஷனராக வெள்ளைத்துரையை நியமித்ததின் மூலம் இந்த வாக்குறுதியையும் முதல்வர் நிறைவேற்றத்தயாராகி விட்டார் என்று நம்புகிறார்கள் மதுரை வாசிகள்.



ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னைக்கு மாற்றப்பட்ட மதுரை எஸ்.பி அஸ்ரா கர்க்,மீண்டும் மதுரை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.மேலும் மடுதரைக்கு மாற்றம் செய்யப்பட்ட பதினொரு உதவி கமிஷனர்கள் மதுரையில் புதன்கிழமை பதவி ஏற்பதாக இருந்தது.ஆனால் அவர்கள் பதவியேற்கும் முன்பே அவர்களுக்கு மீண்டும் மாறுதல் உத்தரவு வந்தது.
இந்நிலையில் மதுரை அண்ணாநகர் உதவி கமிஷனராக என்கவுண்டர் புகழ் வெள்ளைத்துரை நியமிக்கப்பட்டிருக்கிறார்.இது மதுரை மதுரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.

வீரப்பனை சுட்டுக்கொன்றதின் மூலம் பிரபலமானவர் வெள்ளைத்துரை.அதற்கு முன்பாக தாதா வீரமணியை ஒற்றையாளாக சுட்டு வீழ்த்தியவர்.பின்னர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மதுரை நகர் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராக வெள்ளைத்துரை நியமிக்கப்பட்டார்.அப்போது கவியரசு,கல்லுமண்டையன் ஆகியோரை என்கவுண்டர் செய்தார்.
முன்பு இவர் இங்கு பணியாற்றியபோது, மதுரையின் அடையாளமான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விரிக்கப்பட்டுள்ள ஆபத்தை அகற்ற விதிமுறைகளை மீறி ,கோயில் அருகில் கோயில் கோபுரம் உயரம் தாண்டி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார்..அதனாலேயே அவர் இங்கிருந்து மாற்றப்பட்டார்..இந்நிலையில் அவர் இங்கு மீண்டும் வருகிறார்..

தேர்தலின் போது அடாவடி செய்த ரவுடிகள் லிஸ்ட் இப்போது மதுரை உதவி கமிஷனர் வெள்ளைத்துரை கையில்....



நன்றி-ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment