Wednesday, June 8, 2011

உண்ணாவிரதத்தை துவக்கினார் ஹசாரே

யோகா குரு ராம்தேவ் டில்லியிருந்து நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளார். மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ராஜ்காட்டில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாளர்களுடன் ராம்தேவ் ஆதரவாளர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.


No comments:

Post a Comment