Wednesday, June 8, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை-சட்டபேரவை தீர்மானம்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில் இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் போர் குற்றாவாளிகளை ஐ.நா சபை பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் இயற்றப்படுவதற்கு முன்பு ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ., குணசேகரன், “இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான போராட்டத்திற்கு தமிழக முதல்வர்தான் தலைமையேற்க வேண்டும்.
தமிழகத்தின் 7 கோடி தமிழ் மக்களும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் எதிர்பார்கிறார்கள். இன அழிப்பு குற்றவாளியான ராஜபட்சே தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை புகழ்மிக்க இந்த அவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment