Saturday, September 29, 2012

கட்சியைக் கரையேற்ற தெலுங்கானா ரெடி! காங்கிரஸின் அரசியல் ரெடி


ரசியல் லாபத்துக்காக தனித் தெலுங்கானா மாநிலத்தை அறிவிக்க இருக்கிறது காங்கிரஸ் என்ற செய்திதான் டெல்லியில் பரவிக் கிடக் கிறது! 
இந்தியாவை உலுக்கிய மிகப்பெரிய உரிமைப் போராட்டங்களில் ஒன்று தனித் தெலுங்கானா. ஆந்திர மாநிலத்தின் ஓர் அங்கமாக இருக்கும் தெலுங்கானாவைப் பிரித்துத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் நடத்திய உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், பந்த் ஆகியவை காரணமாக, ஆந்திரா அலறியது. நட வடிக்கை எடுக்கவேண்டிய மத்திய அரசோ, இத்தனை காலமும் மௌனமாக வேடிக்கை பார்த்தது.  
ஆனால் இப்போது, காங்கிரஸ் திடீரென விழித்து எழுந்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம், 'தனித் தெலுங்கானாவை அறிவித்தால், நமக்கு அரசியல் ரீதியிலான சாதக பாதகங்கள் என்னென்ன?’ என்று அறிக்கை கேட்டிருக்கிறது. ஆந்திர கவர்னர் தரப்பிடமும், 'தனி மாநில அறிவிப்பு வெளியானால், என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும்?’ என்று பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும் விசாரித்து இருக்கிறார்கள். டெல்லியில் முகாமிட்டு இருக்கும் சந்திரசேகர் ராவும் சோனியாவின் பிரதிநிதிகளை ரகசியமாக சந்தித்துப் பேசி வருகிறார். அதனால், தனி மாநில அறிவிப்பு வெளியானதும், 'தனது
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போகிறார் ராவ்’ என்ற அளவுக்குச் செய்திகள் பரவி வருகின்றன.
ஆந்திராவைப் பிரிப்பதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் 'ஒகே ஆந்திரா’ (ஒரே ஆந்திரா) அமைப்பினர், '' போராட்டம் நடந்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு, இப்போது மட்டும் சம்மதிக்கிறது என்றால், ஆட்சி ஆட்டம் கண்டிருப்பதுதான் காரணம். நாடாளுமன்றத் தேர்தல் வரும் சூழலில், ஆந்திர காங்கிரஸின் நிலை மோசமாக இருப்பதை சோனியா புரிந்து ​வைத்திருக்கிறார். ராயலசீமா பகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக ஆதரவு இருப்பதால், காங்கிரஸ் அடி வாங்கும். தெலுங்கானா பகுதியில் 55 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கியை சந்திரசேகர் ராவ் வைத்திருப்பது சோனியாவின் கண்களை உறுத்துகிறது. ஆந்திராவில் கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என்றால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால், இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். சந்திரசேகர் ராவிடம் பேரம் பேசி வருகிறது காங்கிரஸ்' என்கிறார்கள்.  
இதுகுறித்து, சந்திரசேகர் ராவிடம் பேசினோம். 'காங்கிரஸ் தரப்பில் இருந்து சிலர் பேசி வருகிறார்கள் என்பது உண்மைதான். பொறுத்திருந்து பார்ப்போம்'' என்கிறார்.  தனித் தெலுங்கானா, ஆந்திர காங்கிரஸைக் கரையேற்றுமா?

No comments:

Post a Comment