Monday, March 12, 2012

அருள் மழை -- 46


இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹச்தியை அறியாதவர்கள் இருக்கமுடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்குமலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில்கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால்இத்தளம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .

இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா... பெரியவா ஒருமுறைசென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றைமுன்வைத்தார் அவருடைய வீடிற்கு வரவேண்டும் என்று .

ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டுநெய்வேத்தியதுக்காக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில்அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம்கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிபோனார் வெளியே வந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .

வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய்திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறைவீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும்அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்றதவிப்பில் தத்தளித்தார் .

அப்போது மகான் நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாதநாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன்உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே என்று கட்டளயிட்டார்

பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்தஎச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம்பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில்போட்டுகொண்டார் .

இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்ற இக்காலஹச்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜைபண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலதைக் கொண்டுவந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்துநெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாகதோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .
ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன்பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான்பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இதுஇங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா

இதற்க்கு பிறகுதான் அந்த பக்தர் சமாதானம் அடைந்தார்

No comments:

Post a Comment