Tuesday, March 27, 2012

வசந்த நவராத்திரி ஸ்பெஷல்.....

வசந்த நவராத்திரி என்றால் என்ன?


ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. இவை நான்குமே அம்பிகை வழிபாட்டில் முக்கியமானவை. புரட்டாசி மாதத்து அமாவாசைக்கு மறு நாள் ஆரம்பமாகும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். இது அனைவரும் கொண்டாடும் மிகப் பிரபலமான நவராத்திரி. இது ஆஸ்வீண மாத சுத்தப்ரதமையில் ஆரம்பமாகும். அடுத்து மார்கழி மாத அமாவாசைக்கு மறுநாள் புஷ்யப்ரதமையில் ஆரம்பித்து ஒன்பது நாள் கொண்டாடப்படுவது வாராகி நவராத்திரி, பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் சைத்ரசுத்தப்ரதமையில் தொடங்கி ஒன்பது நாட்களுக்கு வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் ஆஷாட சுத்த ப்ரதமை தினத்தில் ஆரம்பமாகி ஒன்பது நாட்களுக்கு ராஜமாதங்கி நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாடுவது வழக்கம்.

No comments:

Post a Comment