Thursday, March 15, 2012

தன்னலமற்ற தலைவன் லீ-குவான்-யூ - சாதித்தது எப்படி?

தன்னலமற்ற தலைவன் லீ-குவான்-யூ - சாதித்தது எப்படி?

கால் நூற்றாண்டுக்குள் ஒரு நாட்டை - அது எவ்வளவு சிறிதாக, மூலப்பொருளேதும் இல்லாது இருந்தும் கூட - வளமாக்க முடியும் என்பதற்கு சிங்கை ஒரு நல்ல உதாரணம்.

அதன் பெருமை முற்றிலுமாக Lee Kuan Yew - லீ குவான் ய்யூ - என்ற ஒரு தனி மனிதருக்குச் செல்வது மிகவும் ஆச்சரியமான உண்மை.. 1965-லிருந்து 1990-க்குள் அடையாளமில்லாத ஒரு நாட்டை வளர்ந்த, முதல் உலக நாடாக மாற்றும் திறமைக்காக வரலாறு அவருக்கு என்றும் பெருமை சேர்க்கும். மிக நீண்ட காலத்திற்கு ஒரு நாட்டின் பிரதம அமைச்சராக இருந்த பெருமை மட்டுமல்ல, அந்த காலத்தில் ஒரு நாட்டை ஒன்றுமில்லா நிலையிலிருந்து மிக மேன்மட்டத்திற்கு உயர்த்திய பெருமையும் அவருக்குண்டு.
சிங்கையின் வரலாறும் லீ அவர்களது அரசியல் வரலாறும் ஒன்றாக இணைந்து இரண்டுமே உச்சத்தை நோக்கி வளர்ந்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட சில விஷயங்கள் அவரைப் போன்ற நல்ல எதேச்சதிகாரிகளுக்கும் வரும் போலும். ஆனால் அந்த good willed dictators அவைகளை தங்கள் சொந்த பலன்களுக்காக இல்லாமல் நாட்டுக்காக செய்வது கொஞ்சம் கடினம். நமக்குத்தான் தெரியுமே -- power corrupts; absolute power corrupts absolutley! என்று!
சிங்கப்பூரை முன்னேற்ற லீ நடத்திய திட்டங்கள்.....
(அரசியல்வாதிகள் என்றாலே ஊழலும் சொத்து சேர்ப்பும் இருக்காதா என்ன. லீ Corrupt Practices Investigation Bureau (CPIB) ஒன்றை ஏற்படுத்தி அப்படி ஏமாற்றிப் பிழைத்தவர்களை தண்டித்தார்; அவர்களின் சொத்தும் அவர்களைச் சார்ந்தோரின் சொத்துக்களும் கண்காணிக்கப் பட்டன)
(எல்லா மக்களும் தங்கள் சொத்துக் கணக்கைஅரசிடம் ஒப்படைக்க வேண்டும்.மூன்று மாதத்தில் எல்லோருக்கும் ஒரு ID எண் வழங்கப்படும்.உங்கள் கார்டின் வண்ணம் கூட உங்களின் சமூக நிலையைக் கூறிவிடும்; அரசியல்வாதிகளின் வழக்கமான 'பினாமி' இல்லாது ஒழியும்).
(அரசின் கட்டளைகளை மீறும் அரசியல்வாதிகள், அவர்களது ஒட்டிய உறவினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.)
(இரு குழந்தைகள் போதும்; அதற்கு மேல் மக்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். மூன்று நான்கு குழந்தைகள் உள்ளோருக்கு அரசியல் சலுகைகள் குறைக்கப்படும்.)
(இரண்டாவது குழந்தைப்பேறுக்கு தனி விடுமுறை கிடையாது. இரண்டாவது குழந்தைக்கு மேல் குழந்தை பெறுவோரின் சம்பளத்தில் ஓராண்டிற்குரிய ஊக்கப் பணம் குறைக்கப்படும். இரு குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றோர் பெரிய சமுதாயப் பொறுப்புள்ள பதவிகளைப் பெற முடியாது.)
(சிங்கப்பூரில் பலரும் லீயின் ஆட்சியில் அவர் அரசியல் எதிரிகள் மீதும். ஊடகங்கள் மேலும் மேற்கொண்ட பல அதிகார ஆணவத்திற்காக லீயைக் குற்றம் சாட்டியது உண்டு.)
(சமய, சாதிய, அரசியல் கூட்டங்களும், ஊர்வலங்களும் மொத்தமாகத் தடை செய்யப்படும்.)
(லீ மதப்பரப்புதலைத் தடை செய்தார்.கிறித்துவ மதப் பரப்புதலை எதிர்த்தார்.)
(சாதிய, சமயத் தலைவர்கள் ஏதும் பேசாதிருக்கக் கட்டளையிடப்பட்டார்கள்.)
ஒருவேளை நியாயமாக ஒரு நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் லீ போன்றுதான் செயல்பட வேண்டும். லீ மாதிரி -- ஒரு நல்ல good willed, strong dictator - கிடைத்தால் அவைகள் நிஜமாகின்றன -- சிங்கப்பூரைப் போல.

No comments:

Post a Comment