Wednesday, July 20, 2011

வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு

சேலம் அங்கம்மாள் காலனி மக்களின் நிலத்தை அபகரித்த காரணத்துக்காக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் வீரபாண்டி ஆறுமுகம் மீதும், அவர் மகன் மீதும் பதியப்பட்டதை அடுத்து, சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள வீரபாண்டி ஆறுமுகமும், அவரது மகனும், தலைமறைவாகியுள்ளனர். முன் ஜாமீன் கிடைக்கும் வரை, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ய வாய்ப்பு இருப்பதால், இவ்வாறு தலைமைறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment