Saturday, May 19, 2012

அருள் மழை --- 58


வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம்பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள்அவள் கண்களில்ஏதோ ஏக்கம்எதிர்பார்ப்புநம்பிக்கை.
மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவிதகஷ்டங்கள்வியாதி வெக்கைஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டுவருஷம் ஆகியும்குழந்தை இல்லைஇன்னொரு பொண்ணுக்கு வயசுஎகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறதுபையனுக்கோபடிப்பே வரலைபண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம்பாத்தோம்பித்ரு தோஷமாம்பித்ரு கர்மாக்களை ஒழுங்கா பண்ணாமவிட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்ங்கறார்.வைஷ்ணவ சம்பிரதாயப்படிராமேஸ்வர யாத்ரைபரிகார சடங்கு எதுவுமேபண்ணக் கூடாதுஎன்ன பண்ணறதுன்னே தெரியலைபெரியவாதான் வழிகாட்டணும்” என்றாள்.
நீங்க தென்கலையா?”
ஆமா
உப்புச்சாறுசாணிச்சாறுசடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்குகெடையாது…….”
” ஆமாமாஎங்க அம்மா கூட உப்புச்சார்சாணிசார்சடைசார்…..ன்னுசொல்லுவா
அதேதான்ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம்உப்புச்சாறுபஞ்சகவ்ய பிராசனம்சாணிச்சாறுகங்காஸ்நானம் சடைச்சாறுஏன்னாபரமேஸ்வரனோடசடையில் இருந்துதானே கங்கை வரதுஅதுனாலசம்பிரதாய விரோதமாபோகவேணாம்அதுக்கு பதிலாநித்யம் சாளக்ராமம் [பெருமாள்]திருவாராதனம் பண்ணிதிருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும்அப்புறம்,எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோபால்பழம்கிழங்கு சாப்பிடலாம்.அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம்பண்ணணும்சரியாமறுநாத்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே திருவாராதனம்பண்ணிட்டுதுளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும்தெனமும் ஒருபசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும்இப்பிடி பண்ணினாசர்வபிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும்பண்ணுவியா?”
பெரியவாளோட உபதேசம் ஆக ஆகஅந்த அம்மா அழுகையை அடக்கமுடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.
பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவாஎன்னென்னமோநெனச்சு குழம்பிண்டு இருந்தேன்ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னுசொல்லுவேள்னு நெனச்சேன்பெரியவா சுத்த ஸ்படிகம்சம்பிரதாயவிரோதமில்லாம வழி காட்டிட்டேள்! “
காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!

No comments:

Post a Comment