Monday, May 7, 2012

ரஷ்ய தலைவர் லெனினை, ஸ்டாலின் விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம். சரித்திர வல்லுனர் சந்தேகம்.



ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் விளாடிமிர் லெனினை, அவரின் தோழர் ஜோசப் ஸ்டாலின் விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என, சரித்திர வல்லுனர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய புரட்சியாளர் லெனின், அதிபரான பின் தனக்கு பின் நாட்டையும், கட்சியையும் வழி நடத்தி செல்ல தகுதியானவர் ஸ்டாலின் என, முதலில் கருதினார். ஆனால், ஸ்டாலினின் சர்வாதிகார போக்கால், அதிருப்தியடைந்த லெனின், லியோன் ட்ராட்ஸ்கியை கட்சியின் பொது செயலராக அறிவிக்க நினைத்தார். "இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின், லெனினை விஷம் வைத்து கொன்றுள்ளதாக, நான் கருதுகிறேன்' என, ரஷ்ய வரலாற்று வல்லுனர் லெவ் லூரி என்பவர், தனது ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

வரலாற்று வல்லுனர் லூரி, தனது ஆய்வு கட்டுரையில் கூறியிருப்பதாவது:ஸ்டாலின், தன் எதிரிகளை விஷம் வைத்து கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதே பாணியை தான், அவர் லெனின் விஷயத்திலும் கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால், லெனின் 53 வயதில் இறந்த பிறகு, அவரது மூளை இறுகி விட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லெனின், தனது இறுதி காலத்தில் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற கருத்தும் உண்டு. அதன் பிறகு, அவருக்கு இரண்டு முறை பக்கவாதம் ஏற்பட்டது. முதல் பக்கவாதத்தால், அவர் எழுதும் திறனை இழந்தார். இரண்டாவது பக்கவாதத்தால், அவர் பேசும் திறனை இழந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன் வரை, நன்றாக பேசிக்கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. நன்றாக பேசிக்கொண்டிருந்த நபர், மறுநாளே இறந்து போனதற்கு, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன். அவரது உடல் இன்னும் செஞ்சதுக்கத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இருந்தால், இப்போது கூட அவரது மூளையை பரிசோதிக்க முடியும்.இவ்வாறு லூரி, தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment