Tuesday, May 22, 2012

நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு ஆதரவு பெருகுகிறது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
 

தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 16 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரும், சோனியா காந்தி பிரதமராக 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 21 சதவீதத்தினரும், மோடிக்கு 12 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
 

இப்போது மன்மோகன் சிங்குக்கான ஆதரவு 5 சதவீதம் சரிந்துள்ளது.அதே நேரத்தில் மோடிக்கான ஆதரவு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக 12 சதவீத ஆதரவை மட்டுமே பெற்று 4வது இடத்தில் இருந்த மோடி,இப்போது மன்மோகன் சிங்கை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment