Friday, July 6, 2012

கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ்... யாரும் எங்களை மதிப்பதில்லை!" திருமாவளவன்


கஸ்ட் மாதம் வந்தால், 50  வயது ஆகிறது தொல்.திருமா வளவனுக்கு. இப்போதே கல்யாணக் கச்சேரியில் இருக்கிறது  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். ''பொன்விழா நாயகன்னு போஸ்டர் அடிப் பாங்கள்ல!'' என்று கேட்டால், சிரிக்கிறார் திருமா.  
''எப்படி இருக்கிறது ஓர் ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி?''
''தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஓர் ஆண்டு சாதனைகள் பிரசா ரத்துக்கு மக்களின் வரிப் பணத்தை இப்ப டிக் கோடிக்கணக்கில் வீணடித்ததுதான் அ.தி.மு.க. ஆட்சியின் முக்கியமான சாதனை. சம்சாரிகள் குடும்பத்துக்கு ஆடு - மாடுகள் கொடுத்து மேய்க்கச் சொல்லி குலத் தொழில் முறையை ஊக்குவிப்பது இன்னொரு சாதனை. வேறென்ன சொல்ல?''
''உங்கள் கட்சிக்கு எனப் புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்போகிறீர்களாமே?''
''அது எங்கள் கனவுத் திட்டம்!
தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கு எனப் பிரத்யேக சேனல்கள் இருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் ஓர் ஆர்ப்பாட்டம் செய்தால், அது ஒரு செய்தியாகவேனும் பதிகிறது. ஆனால், நாங்கள் நடத்தும் பொதுக் கூட்டமோ, பிரமாண்ட மாநாடோ எதுவுமே பொதுமக்களைச் சென்று சேர்வதே இல்லை. அதனாலேயே எங்களுக்கு என்று தனி சேனல் தொடங்குவது அவசியம் ஆகிறது. சேட்டிலைட் சேனல் துவங்க 20 கோடி ரூபாய் சொத்து மதிப்பும் 5 கோடி ரூபாய் வங்கிக் கணக்கிலும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதற்காகத்தான் என் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களிடம் பொற்காசுகளை நன்கொடையாகப் பெறுகிறோம்!''  
''என்னதான் காரணம் சொன்னாலும், ஏற்கெனவே கட்சிக்கு உழைப்பைக் கொட்டும் தொண்டர்களிடம் இருந்து தங்கம் வசூலிப்பது முறையா?''
''இப்படி விமர்சனம் வரும் என்று தெரியும். கட்சித் தொண்டர்கள் அனைவரும் தர வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. இயன்றவர்கள் மனமுவந்து தருவதை மட்டுமே, அதுவும் நகையாக அல்லாமல் தங்கக் காசுகளாக மட்டுமே, ரசீதுடன் பெற்றுக்கொள்கிறோம். இப்படிப் பெறப் படும் ஒவ்வொரு கிராம் தங்கமும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப் படும். நான் 11 ஆண்டுகள் அரசு ஊழியராக இருந்து சம்பாதித்த காசில்கூட, என் அம்மாவுக்கோ அக்காவுக்கோ நகை வாங் கியது இல்லை. அவ்வளவையும் கட்சிப் பணிகளுக்குத்தான் செலவிட்டேன். பணமாகப் பெறுவதைவிட தங்கமாகப் பெறுவது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே!''
''முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளின்போது பேரமைதி காத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, இப்போது டெசோ அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டுவதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறார்? அதில் சேர உங்க ளுக்குத் தாமதமாக அழைப்பு வந்தபோதும் ஆதரவு அளித்து இருக்கிறீர்களே?''
''முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளின்போது தி.மு.க-வின் மெத்தனப்போக்கை நானே விமர்சித்தவன்தான். ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது தி.மு.க-தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஒட்டுமொத்த இந்தியாவும் பிரதமர் இந்திரா காந்தியும் புலிகளை ஆதரித்த நேரத்தில் எம்.ஜி.ஆர். புலிகளுக்கு பல கோடி ரூபாய் கொடுத்தார். அதை நான் குறைத்து மதிப்பிட வில்லை. ஆனால், இந்தி யாவும் ஆளும் மத்திய அரசும் புலிகளை எதிர்த்த நேரத்தில், ஈழத்துக்கு ஆதரவாக நின்றது தி.மு.க. மட்டுமே. இன்றைக்கு தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உரிமையாக உரத்துச் சொல்லக்கூடிய நிலையில் இருக்கும் ஒரே பெரிய மக்கள் இயக்கம் தி.மு.க. மட்டுமே. தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு குறித்துப் பேசுவதாலும் வெகுமக்களுக்கு பிரச்னையைக் கொண்டுசென்று அவர்களை ஒன்றிணைக்க முடியும் என்பதா லுமே நான் டெசோ அமைப்பில் இணைந்துஇருக்கிறேன்.
தமிழ்நாட்டில் சிறு சிறு தமிழ்த் தேசியக் குழுக்களாக இருந்துகொண்டு ஈழம் குறித்துப் பேசிப் பயன் இல்லை. அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்க்க இந்த டெசோ அமைப்பால் முடியும் என்று நான் நம்புகிறேன்!''
'' 'தி.மு.க. உங்களை எந்தக் காலத்திலும் நம்பிக்கைக்கு உரிய தோழனாக மதிப்பது இல்லை. ஆனாலும், நீங்கள் தொடர்ந்து தி.மு.க-வுடனேயே நட்பு பாராட்டுகிறீர்கள்’ என்கிறார்களே?''
''தி.மு.க. மட்டும் அல்ல... அனைத்துக் கட்சி களும் எங்களை அப்படித்தான் நடத்துகின்றன. கலைஞர் மட்டும் அல்ல, ஜெயலலிதா, ராமதாஸ் உட்பட அனைவரும் அப்படித்தான். இது ஒரு பொதுப் பண்பாகவே மாறிவிட்டது. என்ன செய்ய... இங்கே நாங்கள் தனி ஆவர்த்தனம் செய்ய முடியாதே. தலித் அரசியலை மட்டும் முன்னெ டுத்து நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க முடியாதே!
ஓரளவுக்கு இடதுசாரிகளோடு மட்டுமே அனுசரித்துப் போக முடியும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலின்போது தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த இடதுசாரிகள், இஸ்லாமியக் கட்சிகள் உள்ளிட்ட ஒரு அணிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் 'எங்களுக்குச் சொந்த புத்தி இருக்கிறது. திருமாவளவன் சொல்லத் தேவை இல்லை’ என்றார். என் விருப்பத்தை அவர் அறிவுரை யாகப் புரிந்துகொண்டார்போலும்.
அதனால்தான் நாங்கள் எங்க ளுடன் ஒன்றுபடும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறோம். தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு தலித் கட்சிக்கு தி.மு.க-தான் இரண்டு எம்.பி. பதவிகளைக் கொடுத்தது. எங்களை மதிக்கிற இடத்தில்தான் நாங்கள் இருக்க முடியும்!''
'' 'ஈழ அவலங்களுக்குக் காரணமான பிரணாப் முகர்ஜியை நீங்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்கிறீர்கள்’ என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன?''
''இந்தியாவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை அவர் ஈழ ஆதரவாளரா, இல்லையா என்கிற ஒரு அளவுகோலை மட்டும் வைத்து அளப்பது தவறு. இதில் பன்முகச் சிக்கல்கள் உள்ளன. காங்கிரஸும் பா.ஜ.க-வும் இந்தியாவின் பிரதானமான கட்சிகள். மதவெறிகொண்ட, விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான  கொள் கைகளை வைத்திருக்கும் பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளரை எங்களால் ஆதரிக்கவே முடியாது. பா.ஜ.க. இந்தியாவில் இந்துக்களை ஆதரிக்கிறது. இலங்கையில் சிங்கள பௌத்தரான ராஜபக்ஷேவை ஆதரிக்கிறது. ஆகவே, ஈழ விவகாரத்தின் அடிப்படையிலும் பா.ஜ.க-வை ஆதரிக்காத முடிவு சரியே. தலித் பார்வையில் பார்த்தாலும் அது சரியே. எனவே, பிரணாப் முகர்ஜியைத்தான் ஆதரிக்க வேண்டி உள்ளது!''
''பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?''
''என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தின் நிலவியல், அரசியல் போன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல் எதுவும் பேசக் கூடாது. அப்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் இருந்தது. தமிழ்நாடு அப்போது உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் பெரியார். திராவிடக் கருத்தியலைப் பேசினார். அது சரிதான். அதன் பின்னரே 1956-ல் மொழிவழி மாகாணங்கள் உருவாகி தமிழ்நாடு உருவானது. இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பது சரியானதே. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசவே, அன்றைக்குப் பெரியார்தான் வித்திட்டார் என்பதை மறந்து, திராவிடத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுவது நன்றியுணர்வு அற்ற செயல். பெரியாரிடம் கருத்து மாறுபட் டால் விமர்சனம் செய்யலாம். ஆனால், அவரையும் திராவிடக் கருத்தியலின் பங்களிப் பையும் கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அப்படிக் கொச்சைப்படுத்துபவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் எத்தகை யது? தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவத் தேசியத்தை, இந்திய தேசியத்தை, இந்தி தேசியத்தை எதிர்ப்பதாக, சாதிகளை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வெறும் மொழி உணர்வு, இன உணர்வு என்கிற அடிப்படையில் எழும் தமிழ்த் தேசியம் சரியானது அல்ல. ஈழ மக்களை நான் ஆதரிக்கிறேன் என்றால், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல; அங்கே அவர்கள் சிங்கள ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான். ஆனால், ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் அங்கே வாழ்ப வர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக் காக ஆதரிக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் பரமக்குடியில் உள்ள தலித் தமிழர்கள் கொல்லப்பட்டால் கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், ஈழத்தில் நடந்தால் மட்டும் கூக்குரல் இடுவேன் என்பது போலித்தன மானது!

No comments:

Post a Comment