Wednesday, July 4, 2012

சிறை பயத்தைப் போக்க என்னைப் பேச அழைத்தீர்களா? தி.மு.க-வின் புதிய போர்வாள் வருகிறார்!


சிறையில் இருந்து மீண்டது முதல், கருணாநிதி தான் செல்லும் இடம் எல்லாம் எடுத்துச் செல்லும் புதிய போர்வாளாக மாறிவிட்டார் ஆ.ராசா! 
சென்னை, கோவை, நீலகிரி, பெரம்பலூர், திருவாரூர்... எனக் களைகட்டிய ராசாவின் பயணம் அடுத்து வடசென்னையில் மையம் கொண்டது. தி.மு.க. வரும் 4-ம் தேதி நடத்தப்போகும் சிறை நிரப்பும் போ​ராட்டத்துக்​கான விளக்கப் பொதுக் கூட்டத்தை நாடுமுழுவதும் நடத்த உத்தரவு இட்டார் கருணா​நிதி. அதில், முன் னணிப் பேச்​சாள ராக ஆ.ராசா அமைந்திருப்பது கட்சிக்காரர்களை புருவம் உயர்த்திக் கவனிக்க வைத்துள்ளது!
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள தம்புச்செட்டித் தெருவில் ஆ.ராசா முழங்குகிறார் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் கூடியது ஆச்சர்யமானது!
ராசாவுக்கு முன்னதாகப் பேசினார் நடிகர் வாகை சந்திரசேகர். அவர் ராசாவைப் புகழ்ந்து தள்ளினார்.
'நீதிக்குத் தலை வணங்காத ஒரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிற ஜெயலலிதா இருக்கும் தமிழ்நாட்டில், நீதிக்குத் தலைவணங்கி 11 மாதங்களுக்கு மேலாகத் திகார் சிறையில் இருந்து குற்றமற்றவன் என்று நிரூபிக்​கின்ற, நிரூபிக்கப்போகின்ற தலைவர் கலை ஞரின் உடன்பிறப்பு ஆ.ராசா இங்கே வந்து இருக்கிறார். ஜாமீன் கிடைத்ததும் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கலைஞரைச்சந்தித்த பிறகு 'எப்படி இருக்கிறீர்கள் ராசா?’ என்று பத்திரிகை​யாளர்கள் கேட்டபோது, 'தாயின் கருவறையில் குழந்தை இருக்கும்போது பனிக்குடத்தில் எப்படிப் பத்திரமாக இருக்குமோ, அப்படி நான் கலைஞரின் அரவணைப்பில் பத்திரமாக இருக்கிறேன்’ என்றவர் ராசா. இதெல்லாம்வாய்தா மட்டுமே வாங்கிக்கொண்டு இருக்கும் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா?' என்று எடுத்த எடுப்பிலேயே ராசாவைப் புகழ்ந்து பேச, கூட்டத்தில் பலத்த கைதட்டல்.!
''பெங்களூரு கோர்ட்டில் நடக்கும் வழக்கில் எத்தனை வக்காலத்து வாங்குகிறார் ஜெயலலிதா? கண் வலி, காது வலி என்று எத்தனை வலிகள் இருக்கிறதோ, அத்தனை வலிகளையும் காரணமாகச் சொல்கிறார். ஆனால், இங்கே அமர்ந்திருக்கிறாரே அன்புத்தம்பி ராசா, குற்றமற்றவன் என்பதை நிரூபித்த பிறகுதான் வெளியே வருவேன்; அது வரைக்கும் சிறையில்தான் இருப்பேன் என்னு சொல்லி, அதுபோலவே செய்து காட்டியவர்' என்று ராசாவின் புகழ் பாடி சந்திரசேகர் முடித்தபோது மழை தூற ஆரம்பித்து இருந்தது!
அடுத்துப் பேச வந்த ராசாவுக்கு தி.மு.க. தொண்​டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு. ' 'கொட்டுகிற மழையில், வீசுகிற புயலில், சரளைக் கற்கள் நிரம்பிய மலை உச்சியை நோக்கி நாம் நடக்கிறோம். கையில் ஒரு அகல் விளக்கு. அந்த விளக்கு அணையாமல் இருப்பதற்குத் தம்பிகளே உங்கள் இரு கைகளும் தேவை’ - 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ராபின்சன் பூங்காவில் தொடங்கிய நேரத்தில் இப்படி ஒரு மழைதான் பெய்தது என்பதை நினைவூட்டும் வகையில் மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன் பேசிய செயல்வீரர்கள், தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் இடம் இல்லை என்றால், வடநாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் அடைப்பதற்காக ஆளும் கட்சி திட்டமிடுகிறது என்று சொன்னார்கள். ஒருவேளை அந்தப் பயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் திகார் சிறையில் இருந்த என்னை, இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அரசாங்கத்துக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இந்த ஆட்சியில் இங்கு இருக்கும் ஜெயிலை விட, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள சிறைகளில் சுத்தமான, சுகாதாரமான உணவும், நீரும், உடையும் கிடைக்கிறது.  
இந்தப் போராட்டத்துக்கும், இதற்கு முன்னர் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டங்​களுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உண்டு. முதலாவது, இதுவரை நடந்த போராட்டங்களில் தகுதி உள்ளவர்களை மட்டுமே எதிர்த்துக் களம் கண்டோம். ஆனால், இந்தப் போராட்டத்தில் அந்தத் தகுதியை எதிர்பார்க்க முடியாது. இன்னொன்று, நாங்கள் சிறை நிரப்பிய போதெல்லாம் எங்கள் இனத்துக்கும் மொழிக்கும் வெளியில் இருந்து ஆபத்து வந்தது. தலைவர்கள் தங்களை ஆராய்ந்து அடையாளப்படுத்திக் கொண்டனர். எனவே, நாங்கள் ஆடு, மாடு உள்ளே வராமல் இருப்பதற்காக வேலி கட்டினோம். வேலி கட்டுவதற்காக அந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், இந்தப் போராட்டம் நாற்றங்காலில் ஒரு நச்சுச்செடி களை யாக வளர்ந்திருக்கிறதே, அந்தக் களையைப் பிடுங்கி எறியும் போராட்டம்.
நான் காரில் வந்துகொண்டு இருந்தபோது ஒலிபெருக்கியிலே ஒரு நண்பர், 'ஆட்சியை விட்டு ஜெயலலிதாவை உடனடியாக இறக்க வேண்டும்' என்று சொன்னார். அவசரப்படத் தேவைஇல்லை. அரசியல் சட்டமும் அதற்கு இடம் கொடுக்காது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது கலைஞருக்கு சிறைக்கைதியின் அரைக்கால் சட்டையையும், ஒரு பனியனையும் கொடுத்து, கையிலே அலுமினியத் தட்டையும் கொடுத்தார். எம்.ஜி.ஆரே ஜனநாயகவாதி இல்லையென்றால், எம்.ஜி.ஆர். வீட்டில் இருக்கும் கட்டிலுக்கும், நாற்காலிக்குமா ஜனநாயகம் தெரிந்து இருக்கும்?
நான் இப்போது திமிரோடு சொல்கிறேன். நீ இன்னும் 10 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருந்தாலும், எங்களைத் தாண்டி ஆட்சி அமைக்க முடியாது. ஒரு அரசு நிகழ்ச்சி நடக்கிறது. முதல்வர் போய் உட்காருகிறார். முதலில் விழா தொடங்குகிறது என்று சொல்கிறார் ஒரு அதிகாரி. விழா தொடங் குகிறது என்று சொன்னால் முதலில் எந்தப் பாட்டை இசைக்க வேண்டும்? தமிழ்த்தாய் வாழ்த்து. அதைக் கொண்டுவந்ததே கலைஞர்தான். அந்தப் பாட்டைப் போடும்போது மதிப்புமிக்க ஜெயலலிதா அவர்களே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களே... உங்கள் கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு எழுந்திரிக்கிறீர்களே, அது தமிழுக்காக மட்டுமல்ல; என் தலைவன் கலைஞருக்காகவும்தான்!'' என்று, ஆ.ராசா கொட்டித் தீர்க்க, மழையும் அவரைப் போல வே ஆவேசத்துடன் கொட்டித் தீர்த்தது!

No comments:

Post a Comment