Wednesday, July 4, 2012

என் கைதுக்குக் காரணம் சசிகலா! ஜெயலலிதாவின் மகள் என கூறும் பிரியா மகாலட்சுமி


ள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் ஒரே நாளில் அம்பலப்பட்டுப்போவார்கள். ஆனால், பிரியா மகாலட்சுமி விஷயம் இதில் வித்தியாசமாக இருக்கிறது!
 'ஜெயலலிதாவின் மகள்’ என்று சொல்லி பிரியா மகாலட்சுமி பல பிரபலங்களைக் கலங்கடித்த கதையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே எழுந்தது. இப்போது சில வாரங்களுக்கு முன், அவர் போலீஸ் வலையில் சிக்கிய கதையையும் அவரே முதலில் சொன்னார். வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வட்டாரங்களில் அதிரடி டீலிங்குகளில் இறங்கி, பலரையும் ஏமாற்றிப் பணம் பறிக்கத் தொடங்கியதுதான் அவர் கம்பி எண்ணக் காரணம் ஆனது. ஆனாலும் தனது நிலைப்பாட்டில் கொஞ்சமும் மாறாமல் உள்ளே இருக்கிறார் பிரியா. தான் கைது செய்யப்பட்டது  பற்றியோ தன்னைப்பற்றி பத்திரிகைகள் எழுதுவதைப் பற்றியோ கொஞ்சமும் வருத்தம் இல்லாதவராக இதுவரை சொன்னதில் இன்னும் உறுதியாக இருக்கிறாராம் பிரியா.
சேலம் சிறையில் இருக்கும் பிரியா தன்னுடைய சக கைதிகளிடமும் தன் இஷ்டத்துக்கும் 'டுமீல்’ விட ஆரம்பித்து இருக்கிறாராம். இதை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் நபர்கள், 'இதையெல்லாம் கேட்கும்போது அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியாக இருக்கிறதா என்று சந்தேகமா இருக்கிறது’ என்கிறார்கள்.
என்ன சொல்கிறாராம் பிரியா மகாலட்சுமி?
''எங்க மம்மி அவங்கதான். நான் பொறந்ததுமே எங்க மம்மி தனியா ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து விஜயானு ஒருத்தங்ககிட்ட கொடுத்து என்னை வளர்க்கச் சொல்லிட்​டாங்க. என்னை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க​ வெச்சாங்க. ஊட்டியில ஒரு காலேஜ்லதான் எம்.பி.ஏ. படிச்சேன். எங்க மம்மி என்கூட ரெகுலரா போன்ல பேசுவாங்க. அவங்களுக்கு எப்போ என்னைப் பார்க்கணும்னு தோணுதோ, அப்போ அவங்களுக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் மூலமா சொல்லி அனுப்புவாங்க. அவங்க சொல்லி அனுப்பும் இடத்துக்கு நான் போவேன். மம்மியைப் போலவே எனக்கு அரசியலுக்கு வரணும்னு ஆசை. அதை மம்மிகிட்டயும் சொல்லி இருக்கேன். அதுக்கு மம்மி, 'வெய்ட் பண்ணு’னு சொல்வாங்க. ஆனாலும் அரசியல்ல பின்னால் இருந்து என்ன செய்ய முடியுமோ, அதை எல்லாம் நான் செஞ்சிட்டுதான் இருந்தேன். எங்க மம்மி பண்ற அரசியலே எனக்குப் பிடிக்காது.  'இதை இப்படி பண்ணக் கூடாது மம்மி’னு நானே அவங்​களுக்குப் பலதடவை  சொல்லி இருக்கேன். எங்க மம்மியைத்தான் எல்லோரும் போல்டுனு சொல்லுவாங்க. ஆனா எங்க மம்மி, 'என்னைவிட நீதான் போல்டான பொண்ணு’னு சொல்லுவாங்க.
நான் யாரையும் ஏமாத்திப் பணம் பறிக்கலை. எங்ககிட்ட இல்லாத பணமா சொல்லுங்க..? போலீஸ் திடீர்னு வந்து ஏதோ விசாரிக்கணும்னுதான் கூட்டிட்டுப் போனாங்க. ஸ்டேஷன்ல  என்கிட்ட மூணு மணி நேரம் ஏதேதோ கேள்வி கேட்டாங்க. என்னை ரொம்ப வல்கரா திட்டினாங்க. நான் யாருன்னு சொன்ன பிறகும் காவல் நிலையத்துல எனக்கு இந்த கதின்னா, சாதாரணப் மக்களுக்கு என்ன மரியாதை இருக்கும் சொல்லுங்க? இதை எல்லாம் மம்மிகிட்ட சொல்லணும்.
எங்க மம்மிக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லாமத்தான் இருந்தது. வெளியில போன சசிகலா எப்போ கார்டனுக்குள்ள திரும்ப வந்தாங்களோ, அப்பவே எல்லாப் பிரச்னையும் ஆரம்பமாயிடுச்சு. நான் எங்க மம்மிகூட சேர்ந்துட்டா, அவங்களைக் கழட்டி விட்டுருவாங்களோனு சசி கலாவுக்குப் பயம். அதனாலதான் என்னை ஒழிச்சுக் கட்டத் திட்டம் போட்டிருக்காங்க. அவங்க போட்ட சதித்திட்டத்துலதான் நான் இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கேன். இப்போ நடக்குற விஷயம் எல்லாம் எங்க மம்மிக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனாலும், அவங்க அமைதியா இருக்காங்க. நான் சொல்றது எதுவும் பொய் இல்லை. வேணும்னா... டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கட்டும். இனி நான் வெளியில வந்த பிறகுதான் ஒரு நிஜப்போர் ஆரம்பிக்கப் போகுது.
என்னை வளர்த்த ஒரே காரணத்துக்​காக விஜயா அம்மாவையும் ஜெயில்ல பிடிச்சுப் போட்டிருக்காங்க. இது எல்லாம் நியாயமா சொல்லுங்க... எல்லாமே அந்த சசிகலா செய்யும் சதிதான். பிரியா மகாலட்சுமியின் ஒரு முகத்தை மட்டும்தான் இதுவரை எல்லோருக்கும் தெரியும். இனி நான் என்ன பண்ணுவேன்னு வெளியில வந்து காட்டுறேன்'' என்று கோபத்தோடு சொல்லி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல், ''இன்னும் இரண்டு நாளில் என்னை கோர்ட்டுக்குக் கொண்டு போகப்போறாங்க. அப்போ எல்லா பத்திரிகைகாரங்களும் வருவாங்க. படம் எடுப்​பாங்க. நான் மேக்அப் போடாமல் இதுவரை வெளியில போனதே கிடையாது. இப்போ மேக் அப் இல்லாம அவங்க முன்னாடி எப்படி போய் நிற்கிறது..? ரொம்பக் கஷ்டமா இருக்கு..'' என்று வருத்தப்படுகிறாராம்.
இந்தப் பிரியா மகாலட்சுமி யார்? முதல்அமைச்சரைச் சம்பந்தப்படுத்தி ஒருவர் இப்படி வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்த பிறகும், இந்த விஷயத்தில் காவல்துறை மௌனம் சாதிப்பது ஏன்?  வீண் பப்ளிசிட்டி கொடுத்துவிடக் கூடாது என்று எண்ணி மௌனம் சாதித்தால்... அதுவே வேண்டாத வில்லங்கத்தை உண்டு பண்ணாதா?

No comments:

Post a Comment