Wednesday, November 23, 2011

கையப் புடிச்சி இழுத்தியா...' ஸ்டைலில் மழுப்பும் சினேகன் வி



சென்னை: சினேகன், ஜமுனா கலாதேவி கள்ளத் தொடர்பு புகார் குறித்த விசாரணையில் இருவருமே சரியான பதில் சொல்லாததால், கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வருமாறு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. புகார் கொடுத்த பிரபாகரனையும் கூப்பிட்டுள்ளனர் போலீசார்.

நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் மீது மடிப்பாக்கம் என்ஜினீயர் பிரபாகரன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகார் மனுவில், நடன கலைஞரான தனது மனைவி ஜமுனா கலாதேவியையும், தனது 5 வயது பெண் குழந்தையையும், நடிகர் சினேகன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும், அவர்கள் இருவரையும் மீட்டு தன்னோடு வாழ வைக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' தான் நேரில் பார்த்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

பிரபாகரனின் இந்த புகாருக்கு நடிகர் சினேகன் மறுப்பு தெரிவித்தார். ஜமுனா கலாதேவியை, பிரபாகரனின் விருப்பத்தோடு தான் நடித்துள்ள 'உயர்திரு 420' என்ற படத்தில் நடன உதவி இயக்குனராக ஒருநாள் மட்டும் பயன்படுத்தியதாகவும், அதன்பிறகு பிரபாகரன் சந்தேகப்பட்டதால் ஜமுனா கலாதேவியை நடன உதவி இயக்குனராக பணியாற்ற அனுமதிக்கவில்லை என்றும், ஜமுனா கலாதேவியை தான் கடத்தவில்லை என்றும் சினேகன் கூறினார்.

இந்த பிரச்சினையில் பிரபாகரனுக்கும், ஜமுனா கலாதேவிக்கும் இடையே ஒரு சுமுக தீர்வை ஏற்படுத்துவதற்காக பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மூலம் கவுன்சிலிங் முறையில் விசாரணை நடத்தப்படும் என்றும், ஜமுனா கலாதேவி மீதும், சினேகன் மீதும் கொடுக்கப்பட்டுள்ள புகார் உண்மையானதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

பிரபாகரன் மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள், ஜமுனா கலாதேவியிடம் நேற்று முன்தினம் செல்போனில் பேசி விளக்கம் கேட்டனர். அதற்கு ஜமுனா கலாதேவி, பிரபாகரன் மீது குற்றம்சாட்டினார்.

"எந்தவித வேலையும் செய்யாமல், என்னுடைய சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார் பிரபாகரன். அவரது சந்தேக குணத்தால் அவரோடு வாழமுடியாது என்று முடிவு எடுத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். இந்த நிலையில், தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பிரபாகரன் பொய் புகார் கொடுத்துள்ளார்," என்று ஜமுனா கலாதேவி கூறினார்.

சினேகனிடம் விசாரித்தபோது அவர் இந்தப் பிரச்சினையில் சம்பந்தமே இல்லாததுபோல பதில் அளித்தாராம்.

இதில் சினேகன், ஜமுனா, பிரபாகரன் மூவருமே உண்மையை மறைப்பதாக போலீசார் கருதுவதால், மூவரையும் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடன இயக்குநர்கள் சங்கம் மறுப்பு அறிக்கை

இந்த நிலையில், சினிமா- டி.வி. நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுந்தர பிரேம்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஜமுனா கலாதேவி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. அவர் 'உயர்திரு 420' படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றவில்லை.

நடன இயக்குனராக பணியாற்ற வேண்டுமென்றால் பிரபல நடன இயக்குனர் ஒருவரிடம் 10 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்க வேண்டும். மேலும் எங்கள் சங்கத்திலும் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். ஜமுனா கலாதேவி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. மேலும் அவர் சினிமா நடன இயக்குனராகவும் 'உயர்திரு 420' படத்தில் பணியாற்றவில்லை என்பதையும், இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.

1 comment: