Friday, November 18, 2011

நடிகையின் கதை!


கன்னடத்தில் பெரிய ஹீரோவாக இருப்பவர்... ராம்கோபால் வர்மாவின் இந்தி-தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர்... சுதீப்.இவரோடுதான் "சோ' நடிகை நெருக்கம் காட்டி வருகிறார்.
அடுத்த கதை?

"பிளாக்சாமி காண்ட்ராக்டர்' படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார் அந்த மும்பை மோகினி.

அந்தப் படத்தில் படு பாந்தமாக நடித்திருந்தார் மீன். ஆனால் அவரின் நடவடிக்கைகளோ பாந்தத்திற்கு எதிராக படுபந்தாவாக இருந்தது. அழகும் திறமையும் கவர்ச்சியும் இருந்தாலும் கூட அவருக்கு பெரிய ஹீரோக்களின் கருணைப் பார்வை எட்டாமல் இருந்தது.

இந்த சமயத்தில் "அஞ்சாத' படம் மூலம் அறிமுகமாகி "கோ' படத்திலும் முதலமைச்சராக நடித்திருக்கும் "அஜ்' நடிகரோடு மீன் நடிகை "டாக்ஸி' படத்தில் சேர்ந்து நடித்தார்.

ஸ்பாட்டில் நடிகையை வசப்படுத்த வித விதமாக வலை விரித்தார் நடிகர். ஆனால் எந்த வலையிலும் சிக்கவில்லை இந்த மீன்.

வடபழனியிலுள்ள ஆதியான ஹோட்டலில் அந்த நடிகை தங்கியிருப்பதை தெரிந்துகொண்ட நடிகர்... நடிகையின் அறைக்கு பக்கத்து அறையைக் கேட்டு வாங்கி தங்கினார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகம் பேசாமல் விலகியிருந்த நடிகை இப்போது நடிகர் தன் "ஹோட் டல்மேட்' ஆகிவிட்டதால் தவிர்க்க முடியாமல் பேச ஆரம்பித்தார்.

ஷூட்டிங் இல்லாத ஒருநாள்... நடிகை தன் ரூமை விட்டு வெளியே வரவில்லை. காரணம் உடம்பு வலி. இதைத் தெரிந்துகொண்ட நடிகர், தயங்கித் தயங்கி நடிகையின் அறைக்கதவைத் தட்டினார்.

கதவைத் திறந்த நடிகையிடம் "உடம்பு வலின்னு கேள்விப்பட்டேன். இப்ப எப்படி இருக்கு?' என நலம் விசாரித்தவர் "எங்க ஊர்ல (கேரளா) உடம்பு சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் மஸாஜ் ட்ரீட்மெண்ட்தான். நீங்க அனுமதிச்சா அந்த ட்ரீட் மெண்ட்டை பண்றேன்' என பிட்டை போட்டார்.

மறுத்தார் நடிகை.

"நான் வைத்தியர். நீங்க நோயாளி... அப்படின்னு நினைச்சுக்கங்களேன்' என வசிய வார்த்தைகளை நடிகர் வீச... தயக்கத்துடன் சம்ம தித்தார் நடிகை.

மயங்க வைத்தது மசாஜ். அதன் பிறகுதான் இருவரும் சகஜமாக பழக ஆரம்பித்தார்கள். மசாஜில் தொடங்கி காபியில் வளர்ந்து, மதுவில் நெருங்கியது இவர்களின் நட்பு. நாளாவட்டத்தில் இவர்களின் நட்பு காதலானது.

ஒருநாள் விருந்துக்கு ஆசைப்பட்ட நடிகருக்கு தினந் தோறும் விருந்து வைத்தார் நடிகை.

நடிகரே கதி என நடிகை கிடக்க... நடிகைக்கு ஆலோசகர் போல இருந்த மீடியா லேடி, நடிகையை சந்தித்து அட்வைஸ் பண்ணினார். "கூட நடிக்கிற நடிகையை தொடணும்னு நடிகர்கள் ஆசைப்படத்தான் செய்வாங்க. "போனமா வந்தமா'னு அளவோட வச்சுக்கிட்டு ஒதுங்கீரணும். நீ இவரோட மட்டுமே நெருக்கமா இருந்தா... "இவ அவன் ஆளு'னு சொல்லி மத்த ஹீரோக்கள் உனக்கு வாய்ப்புத் தரமாட்டாங்க. இவருமே இவர் நடிக்கிற படத்துலயெல்லாம் உனக்கு சான்ஸ் வாங்கித் தந்திட முடியாது. உன்னோட இளமைக்கும் அழகுக்கும் வெளி ஆஃபர் நிறைய வரும். "அந்த' புரோக்ராம்களை பண்ணினாகூட பணம் வரும். இப்படி பொழைக்கிற வேலய விட்டுப்புட்டு, வெட்டிவேல பாக்காதே'னு ஃபீல்டு நடப்பை எடுத்துச் சொன்னார் அந்த லேடி.

அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட நடிகை சொன்னார்...

"நான் அவனை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்.'

அதிர்ச்சியானார் லேடி.

"அது ஏன் நடிகைகள்னாலே பொதுவா இப்படி இருக்கீங்க?'

"எப்படி இருக்கோம்? எல்லாரையும் போலத்தான இருக்கோம். நடிகைன்னா மனுஷி இல்லையா? மனசு இல்லையா? அந்த மனசுல காதல் வரக்கூடாதா?' என கோபமாகக் கேட்டார் நடிகை.

"நடிகைகள் காதலிக்கக்கூடாது, அவங்களுக்கு காதல் வரக்கூடாதுன்னு சொல்லல. அடுத்தவங்க வாழ்க்கையை ஏன் தட்டிப்பறிச்சு நீங்க வாழ ஆசைப்படுறீங்க?னுதான் கேக்குறேன்...'

"புரியலையே?'

"அந்த நடிகர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர்...'

லேடி சொன்னதும் திடுக்கிட்டுப் போனார் நடிகை.

டென்ஷனில் ஒரு பாட்டில் மினரல் வாட்டரையும் ஒரே மூச்சில் காலி செய்துவிட்டு ஆத்திரம் குறையாமலே இருந்தார்.

லேடி கிளம்பிப் போனார்.

வழக்கம்போல இரை தேடி வந்தார் நடிகர்.

ஆத்திரத்தை அடக்கிக்கொண்ட நடிகை, "ஏன் இப்படி ஏமாத்துனே?' என கேட்டார்.

விஷயம் புரியாமல் நடிகர் முழிக்க...

"ஒனக்கு ஏற்கனவே கல்யாணமானதை ஏன் சொல்லல...?'

"நீ கேட்கலியே?'

"கேக்கலேன்னாலும் சொல்லீருக்கணுமே!'

"எதுக்குச் சொல்லணும்?'

"நான் உன்னை லவ் பண்ணினனே...'

வாய்விட்டுச் சிரித்துவிட்டு நடிகர் சொன்னார். "நான் உன்னை லவ் பண்ணலியே'

அதற்கு மேல் நடிகை எதுவும் பேசவில்லை. அவர்களின் தொடர்பும் முறிந்துபோனது.

அடுத்த கதை...?

(அனுபவம் பேசும்)

No comments:

Post a Comment