Tuesday, November 22, 2011

நடிகையின் கதை

"என்கூட இருந்தப்ப சுகமா இருந்துச்சா? அவன் கூட இருந்தப்ப சுகமா இருந்துச்சா?' இப்படி... வார்த்தைகளால் வதைத்தெடுத்தார் ஹீரோ. இந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் மனசொடிந்து போனார் நடிகை.



அந்த துயரக்கதையை இப்போது பார்க்கலாம்.


கேரளத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டு, பிறகு அந்த நடிகரை பகைத்துக்கொண்டு கோலிவுட்டுக்கு வந்தார் பட்டம் நடிகை.


முதலில் வம்பு நடிகரின் படத்தில்தான் வாய்ப்பு வந்தது. ஆனால் முகவெட்டு சரியில்லை என பட்டம் நடிகையை நிராகரித்துவிட்டு, "ஆட்டோகிராஃப்' கோபிகாவை வம்பு நடிகருக்கு ஜோடியாக்கினார்கள். இதனால் நொந்துபோன பட்டம், நீண்ட போராட்டத் துக்குப்பின் நாட்டாமை "ஐயா'வின் ஜோடியாக அறிமுகமானார்.


அதன்பின் சூப்பருடன் "நிலாமுகி'யில் ஜோடி போட்டு ஃபேமஸ் ஆகி அந்தப் படத்தில் பட்டம் விட்டதால் "பட்டம்' நடிகை என கிசுகிசு நிருபர்களால் பெயர் சூட்டப்பட்டார்.


முதலில் வாய்ப்புத்தர மறுத்த வம்பு, பிறகு பட்டத்தை தன் காதல் வலையில் வீழ்த்தியதையும், அவர்கள் உல்லாசத் தீவில் லூட்டி அடித்ததையும், பிறகு வம்பும்-பட்டமும் பிரிந்ததையும் எல்லோரும் அறிவார்கள்.


இப்போது "பட்டம்' ஆட்டப் புயலுக்கு தாரமாகப் போவதும் நாடறிந்த சேதி. ஆனால் பட்டம் தனக்கு காதல் துரோகம் செய்ததாகவும், தனது உண்மைக் காதலை புரிந்துகொள்ளாமல் போய்விட்டதாகவும் வம்பு செய்யும் இந்த "வல்லவன்' இப்போதும் செய்தி வாசிக்கிறார்.


"வம்புவிடமிருந்து ஏன் பிரிந்தேன்? என்பதை விட தப்பித்து வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்' என தனக்கு நெருக்கமான தோழி ஒருவரிடம் காரணங்களைச் சொல்லியிருக்கிறார் பட்டம். இவர்களின் பிரிவுக்கான வேதனையான அந்தக் காரணம் இதுவரை வெளிவரவில்லை.


அது...?




வம்பு ஏற்கனவே ஒரு பெரிய வீட்டுப் பெண்ணை காதலித்தபோதும் ஏகப்பட்ட இம்சையைக் கொடுத்தார். இதனால் வெறுத்துப்போன அந்தப் பெண் விலகிப் போனார். உடனே "நான் உண்மையாகக் காதலித்தேன். அந்தப் பெண்தான் துரோகம் செய்தது' என செய்தி பரப்பியதோடு, அந்தப் பெண்ணை தவறான பெண்போல சித்தரித்து தனது "ரதி கணவன்' பெயர் கொண்ட படத்தில் காட்சியாக வைத்தார்.


பட்டம் நடிகையை "வலிமையானவன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதே வசப்படுத்த நினைத்த வம்பு... போட்டோசெஷனில் பட்டத் தை உதட்டைக் கவ்வி பரபரப்பு போஸ்டர் போட்டார். அந்த போஸ் டர் ஸீன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகாராகி, போலீஸா ரே சென்னை முழுக்க அந்த போஸ்டர்களை கிழித்துப் போட் டது தனிக்கதை. இப்படி எடுத்த எடுப்பிலேயே பட்டத்தை தன் பரபரப்பு நடவடிக்கைகளால் வசப்படுத்தினார். இதனால் வம்புவை மனப்பூர்வமாக காத லிக்க ஆரம்பித்தார் பட்டம். ஆனால்... இருவரும் உடல் ரீதியாக போக ஆரம்பித்த பிறகுதான் உபத் திரவம் ஆனது. முழுக்க முழுக்க பட்டத்தை தன் கஸ்டடியில் கொண்டுவந்துவிட்ட வம்பு, தினமும் குடித்து விட்டு பட்டத்தை மட்டமான வார்த்தைகளில் திட்டியதோடு... அடித்து உதைக்கவும் ஆரம்பித்தார்.


"அதீத அன்பால் இப்படி உரிமை எடுத்துக் கொள் கிறார்' என ஆரம்பத்தில் சகித்துக்கொண்டார் பட்டம்.


"வலிமையானவன்' படப்பிடிப்பு இறுதி கட்டத் தை எட்டியிருந்த நிலையில்...


ஒருநாள் இரவு... பட்டத்துடன் வாக்குவாதம் செய்த வம்பு, அறையில் இருந்த மர அலங்காரப் பொருளை எடுத்து பட்டத்தின் மண்டையில் "மடார்'னு அடித்துவிட்டார். நல்லவேளையாக ரத்தம் எதுவும் வரவில்லை. ஆனால் தலைப்பகுதி வீங்கிவிட்டது. ஐஸ்கட்டி வைத்தால் வீக்கம் வத்திடும். ஐஸ் வாங்க புரொடக்ஷன் ஆளை அனுப்பினா விஷயம் வெளியே தெரிஞ் சிடும். இதனால வம்புக்கு நெருக்கமான, அந்தப் படத்தின் உதவி இயக்குநரான ஒருவரை அழைத்து ஐஸ்கட்டி வாங்கி வரச்சொல்லி வீக்கத்தில் வைத்து ஒத்தி எடுத்தார்.


மறுநாள் காலையில் கோபித்துக்கொண்ட பட்டத்தை காலைப் பிடித்துக் கெஞ்சி "நீ இல்லேன்னா செத்துப்போயிரு வேன்' என அழுது சமாதானப் படுத்திவிட்டார். ஆனால் இம்சை குறையவில்லை.


இரவில் சல்லாபம் முடிந்ததும்...


""என்னோடவா? அவனோடவா? எதில் சுகம் உனக்கு?'' என வம்பு, வார்த்தைத் திராவகத்தை வீசி யடிக்க.... மனம் கரு கிப்போனார் பட் டம். "அவன்' என வம்பு குறிப்பிட் டது யாரை?


(அனுபவம் பேசும்)

No comments:

Post a Comment